கடற்கரையில் படு கிளாமரான ஆடையில் டிக் டாக். ஷாக் கொடுத்த ரோஜா சீரியல் நடிகை.

0
16458
roja-serial
- Advertisement -

சன் தொலைக்காட்சியில் எத்தனையோ தொடர்கள் ஒளிபரப்பாகி வந்தாலும் இப்போது டிரெண்டிங்கில் போய்க்கொண்டிருக்கும் சீரியலில் ரோஜா சீரியல் தான் பட்டையை கிளப்புகிறது. இந்த ரோஜா சீரியலில் கதாநாயகியாக நடிப்பவர் தான் பிரியங்கா. நடிகை பிரியங்கா தெலுங்கு திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் அதன் பின்னர் நாட்கள் செல்லச் செல்ல தமிழ் சினிமாவில் எப்படியாவது நடிக்க வேண்டும் என்று தீராத ஆசை கொண்டு இருந்த பிரியங்கா யார் யாரையோ பிடித்து வாய்ப்பு கேட்டு பின்னர் தமிழ் சினிமாவில் அறிமுகமாக பல்வேறு முயற்சிகளை செய்து வந்தார். பிரியங்கா.

-விளம்பரம்-

சுந்தர்சி இயக்கத்தில் சித்தார்த் நடிப்பில் வெளியான தீயா வேலை செய்யணும் குமாரு என்ற படத்தில் ஹன்சிகாவின் தோழியாகநடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. ஹன்சிகா தோழியாக நடித்து தமிழ் சினிமாவில் பல்வேறு வாய்ப்புகள் கிடைக்கும் என்று ஆசையில் பிரியங்கா. ஆனால், அந்த வாய்ப்பு இவருக்கு கைநழுவிப் போனது அதற்கு பின்னர் இவருக்கு சரியான சினிமா வாய்ப்பும் கிடைக்கவில்லை.அப்போதுதான் அவருக்கு சன் டிவியில் தொடங்கிய ரோஜா தொடரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இதையும் பாருங்க : அசுரன் படத்தின் தெலுங்கு ரீ-மேக் நாரப்பாவை நாரடிக்கும் தமிழ் ரசிகர்கள் . மோதிக்கொள்ளும் தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்கள்.

- Advertisement -

சமீபத்தில் இவருக்கு ரோஜா சீரியல் மூலம் சிறந்த சின்னத்திரை நடிகை என்ற விருது கூட வழங்கப்பட்டது மேலும் ஒரு தொடரில் குடும்பப்பாங்கான கதாபாத்திரத்தில் நடித்து வரும் இவர் நிஜத்தில் படுமாறு பேர்வழியாக இருந்து வருகிறார். அதே போல எப்போதும் சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி போட்டோக்களை எடுத்து அந்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் கடற்கரையில் பதிவிட்ட வீடியோ ஒன்று ரோஜா சீரியல் ரசிகர்களை கொஞ்சம் திக்குமுக்காட வைத்துள்ளது.

இந்த வீடியோ பழைய வீடியோ தான் என்ற போதிலும் தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது ஒருபுறம் இருக்க கடந்த சில வருடங்களுக்கு முன்னர் நடிகை பிரியங்காவிற்கு, ராகுல் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்வதாகவும் இருந்தார்கள். ஆனால், நிச்சயம் முடிந்த நிலையில் இவர்களது திருமணம் நின்று போய் விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

Advertisement