தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக சுந்தர்.சி திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் இயக்கத்தில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இவர் இயக்குனர் மட்டும் இல்லாமல் நடிகரும் ஆவார். பெரும்பாலும் இவர் இயக்கிய படங்களில் இவர் நடித்தும் வருகிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு சுந்தர்.சி இயக்கி, நடித்த அரண்மனை 4 படம் மிகப்பெரிய அளவில் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது.
இந்த படத்தில் தமன்னா, ராசி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா உட்பட பலர் நடித்திருந்தார்கள். இதை தொடர்ந்து இந்த வருடம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் மதகஜராஜா படம் வெளியாகி இருந்தது. 12 ஆண்டுகள் கழித்து வெளியாகி இருந்த இந்த படமும் மிகப்பெரிய அளவில் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. இதை அடுத்து தற்போது சுந்தர்.சி- வடிவேலு கூட்டணியில் வெளியாகி இருக்கும் படம் கேங்கர்ஸ்.
கேங்கர்ஸ் படம்:
இதற்கு முன்பு சுந்தர்.சி-வடிவேலு கூட்டணியில் வின்னர், தலைநகரம் போன்ற படங்கள் எல்லாம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. பின் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் சுந்தர்.சி- வடிவேலு கூட்டணியில் கேங்கர்ஸ் படம் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் கேத்ரின் தெரசா, வாணி போஜன், முனிஷ்காந்த், பக்ஸ் பகவதி பெருமாள், மைம் கோபி உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு சத்யா இசையமைத்திருக்கிறார்.
கேங்கர்ஸ் படம் பற்றிய தகவல்:
வெங்கட் ராகவன் இந்த படத்திற்கு திரைக்கதை மற்றும் வசனம் எழுதி இருக்கிறார். மேலும், படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் சுந்தர்.சி, உண்மையை சொல்ல வேண்டும் என்றால் ஆயிரம் கோடி, 500 கோடி என்று சொல்வதெல்லாம் பொய். ஒரு படம் சும்மா 500 கோடி கிராஸ் செய்து விட்டது என்றெல்லாம் பேப்பரில் போடுவது. சில ப்ரொடியூசர்ஸ் நொந்து நூலாகி வசூல் குறைவுன்னு போட்டால் ஹீரோக்கள் அடுத்த படம் தரமாட்டார்கள் என்று தான் இப்படி போடுகிறார்கள்.
சுந்தர்.சி பேட்டி:
அதுக்காக எல்லா படமும் 500 கோடி, 600 கோடி, ஆயிரம் கோடி எல்லாம் வசூலிக்காது. மார்க்கெட் சைஸ்க்கு ஒரு லிமிடேஷன் இருக்கிறது. எல்லா படமும் 100 கோடி, 200 கோடி எல்லாம் சும்மா பொய். அப்படி ஒன்னும் இல்லை. அப்படி ஏதோ ஒன்னு ரெண்டு படம் தான் அந்த மாதிரி ஓடும். எல்லோரும் சும்மா எதுக்கோ சொல்கிறார்கள். முதல் வாரத்தில் 100 கோடி தாண்டி விட்டோம், இரண்டாம் வாரத்தில் இரண்டு 200 கோடி, இந்த படம் 500 கோடி கலெக்சன் எல்லாம் ஒரு ஹம்பக். உண்மையில் ஒரு கிரியேட்டருக்கு ஒரு இன்டென்ஷனா தான் அந்த பிராசஸ் இருக்கும். நாம் ஒரு படம் பண்ணுகிறோம் அந்த படம் நல்லபடியாக ஆடியன்சை ரீச் செய்யணும். ஆடியன்ஸ்க்கு படம் பிடித்திருந்தால் அது போதும். மற்றபடி வசூல் பற்றி எல்லாம் தேவையில்லை என்று கூறியிருக்கிறார்.
கதைக்களம்:
படத்தின் தொடக்கத்திலேயே ஒரு பள்ளி மாணவன் ஒருவர் காணாமல் போகிறார். இதே போல பல சம்பவங்கள் அந்த பள்ளியில் நடந்து கொண்டிருக்கிறது. இதனால் கதாநாயகி கேத்ரின் தெரசா புகார் அளிக்கிறார். அந்த புகாரை விசாரிக்க அண்டர் கவர் ஆபீஸர் ஒருவர் நியமிக்கிறார்கள். அந்த ஊரில் பெரிய தலை கட்டாக மைம் கோபி, அருள் தாஸ் இருக்கிறார்கள். இவர்கள்தான் அங்கு நடக்கும் அனைத்து தவறான விஷயங்களுக்கும் காரணம். இவர்களுக்கு எதிராக கேத்ரின் குரலும் கொடுக்கிறார். ஆனால், அவர்களை எதிர்த்து கேத்ரின் தெரசாவல் ஒண்ணுமே பண்ண முடியவில்லை. இப்போதுதான் சுந்தர்.சி தன்னுடைய முகத்தை மறைத்துக் கொண்டு மைம் கோபி, அருள்தாசை அடித்து உதைத்து தள்ளுகிறார். அதற்குப் பின் என்ன நடந்தது? சுந்தர்.சி வில்லன்களை பழி வாங்கினாரா? கேத்ரின் தெரசா பள்ளியில் நடக்கும் அசம்பாவிதம் என்ன? அண்டர் கவர் போலீஸ் யார்? என்பதெல்லாம் தான் படத்தின் உடைய மீதி கதை.