தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக சுந்தர்.சி திகழ்ந்து கொண்டிருக்கிறார். தற்போது சுந்தர்.சி- வடிவேலு கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் கேங்கர்ஸ். இந்த படத்தில் கேத்ரின் தெரசா, வாணி போஜன், முனிஷ்காந்த், பக்ஸ் பகவதி பெருமாள், மைம் கோபி உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு சத்யா இசையமைத்திருக்கிறார். வெங்கட் ராகவன் இந்த படத்திற்கு திரைக்கதை மற்றும் வசனம் எழுதி இருக்கிறார். 15 வருடங்களுக்கு பிறகு சுந்தர்.சி-வடிவேலு கூட்டணியில் வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.
கதைக்களம்:
படத்தின் தொடக்கத்திலேயே ஒரு பள்ளி மாணவன் ஒருவர் காணாமல் போகிறார். இதே போல பல சம்பவங்கள் அந்த பள்ளியில் நடந்து கொண்டிருக்கிறது. இதனால் கதாநாயகி கேத்ரின் தெரசா புகார் அளிக்கிறார். அந்த புகாரை விசாரிக்க அண்டர் கவர் ஆபீஸர் ஒருவர் நியமிக்கிறார்கள். அந்த ஊரில் பெரிய தலை கட்டாக மைம் கோபி, அருள் தாஸ் இருக்கிறார்கள். இவர்கள்தான் அங்கு நடக்கும் அனைத்து தவறான விஷயங்களுக்கும் காரணம்.
இதை ஆசிரியராக இருக்கும் கேத்ரின் தெரசா கண்டுபிடித்து விடுகிறார். பின் இவர் மைம் கோபி மற்றும் அருள்தாசுக்கு எதிராக குரலும் கொடுக்கிறார். ஆனால், அவர்களை எதிர்த்து கேத்ரின் தெரசாவல் ஒண்ணுமே பண்ண முடியவில்லை. இப்போதுதான் சுந்தர்.சி தன்னுடைய முகத்தை மறைத்துக் கொண்டு மைம் கோபி, அருள்தாசை அடித்து உதைத்து தள்ளுகிறார். அதோடு சுந்தர்.சி தான் அந்த அண்டர் கவர் ஆபிஸர் என்று கேத்ரின் நினைத்துக் கொள்கிறார்.
உண்மையில் அவர் அண்டர் கவர் ஆபிஸர் கிடையாது. வேறு எந்த காரணத்திற்காக சுந்தர்.சி அவர்களை தாக்குகிறார் என்று கேத்ரின் விசாரிக்கிறார். அப்போது சுந்தர்.சி, தன்னுடைய மனைவியை கொன்றவர்களை தாக்கியதாக ஒரு பிளாஷ்பேக்கை சொல்கிறார். 100 கோடி ரூபாய்க்காக சுந்தர்.சி மனைவியை மைம் கோபி, அருள்தாஸ் சேர்ந்து கொலை செய்து விடுகிறார்கள். அதற்கு பழி வாங்கத்தான். சொல்கிறார். அவர்களை கொலை செய்யப் போவதில்லை. அவர்களிடம் உள்ள பணத்தை திருட போகிறேன் என்று சுந்தர்.சி சொல்கிறார்.
இதற்கு வடிவேலு, கேத்ரின் தெரசா, முனீஷ்காந்த், பாலாஜி எல்லோருமே உதவியாக இருக்கிறார்கள். திருடும் பணத்தில் அனைவருக்குமே பங்கு என்றும் சுந்தர்.சி சொல்வதால் எல்லோருமே சம்மதிக்கிறார்கள். அதற்குப் பின் என்ன நடந்தது? சுந்தர்.சி வில்லன்களை பழி வாங்கினாரா? கேத்ரின் தெரசா பள்ளியில் நடக்கும் அசம்பாவிதம் என்ன? அண்டர் கவர் போலீஸ் யார்? என்பதெல்லாம் தான் படத்தின் உடைய மீதி கதை. இந்த படத்தில் சுந்தர்.சி இயக்கம், நடிப்பு இரண்டிலும் பட்டையை கிளப்பி இருக்கிறார்.
இது வழக்கமான பழிவாங்கும் கதையாக இருந்தாலும் ஒரு புதுவிதமாக இயக்குனர் கொண்டு சென்றிருப்பது நன்றாக இருக்கிறது. குறிப்பாக யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் இந்த படத்தில் காட்டியிருப்பது சூப்பர். இடைவேளை காட்சி நன்றாக இருக்கிறது. அதிலும் ப்ரீ கிளைமாக்ஸ், கிளைமாக்ஸ் எல்லாமே பரபரப்பாக செல்வதுதான் படத்திற்கு மிகப்பெரிய பலமே. ஆனால், கதையில் தேவையில்லாத ஒரு ஐட்டம் சாங் வைத்திருப்பது தான் கொஞ்சம் நெருடல். அது சுத்தமாகவே செட்டாகவே இல்லை. அதை தவிர்த்து இருந்தால் நன்றாக இருக்கும்.
இவரை அடுத்து படத்தில் வரும் வடிவேலும் செமையாக ஸ்கோர் செய்திருக்கிறார். ஒவ்வொரு காட்சியிலும் தன்னுடைய நடிப்பில் பின்னி பெடல் எடுத்துடுக்கிறார் என்று சொல்லலாம். மீண்டும் வடிவேலு-சுந்தர் சி காம்போ வேற லெவலில் தூள் கிளப்பு இருக்கிறது. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் வடிவேலு, நகைச்சுவை ஒரு நிமிடம் கூட கேப் இல்லாமல் அடித்து நொறுக்கி இருக்கிறார். இது அவருக்கு ஒரு சூப்பரான கம்பேக் என்ட்ரி சொல்லலாம். இவர்களை தொடர்ந்து படத்தின் கதாநாயகி கேத்ரின் தனக்கு கொடுத்த வேலை சிறப்பாக செய்திருக்கிறார்.
படத்தின் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை அவருடைய கதாபாத்திரத்தை சிறப்பாக இயக்குனர் கொடுத்திருக்கிறார். ஆக்சன் காட்சிகளில் கூட அருமையாக நடித்திருக்கிறார். இவர்களை தொடர்ந்து படத்தில் வரும் மற்ற கதாபாத்திரங்களும் சிறப்பாகவும் அருமையாகவும் நடித்திருக்கிறார்கள். பின்னணி இசை, ஒளிப்பதிவு எல்லாம் படத்திற்கு பக்க பலத்தை கொடுத்திருக்கிறது. ஆனால், பாடல்கள்தான் பெரிதாக கவரவில்லை. இருந்தாலுமே கதைக்களத்தை கொண்டு சென்ற விதத்தில் இயக்குனர் பட்டைய கிளப்பி இருக்கிறார். மொத்தத்தில் இந்த படம் ரசிகர்களுக்கு நல்ல விருந்து என்று சொல்லலாம்.
நிறை:
நீண்ட இடைவெளிக்கு பிறகு சுந்தர்.சி- வடிவேலு காம்போ தூள் கிளப்பிவிட்டது.
சுந்தர்.சி இயக்கம், நடிப்பு அருமை
வடிவேலுவின் நகைச்சுவை பிரமாதம்
நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த வேலை சிறப்பாக செய்திருக்கிறார்கள்
கதைக்களத்தை கொண்டு சென்ற விதமும் நன்றாக இருக்கிறது
இடைவேளை மற்றும் கிளைமாக்ஸ் தூள்
பிண்ணனி இசை, ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலத்தை கொடுத்திருக்கிறது
குறை:
தேவை இல்லாத ஐட்டம் பாடல்
சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பெரிதாக குறைகள் எதுவுமே இல்லை
மொத்தத்தில் கேங்கர்ஸ் – நகைச்சுவை அட்ராசிட்டி