இரண்டு குழந்தை இருக்கும் நபருடன் இரண்டாம் திருமணம், ஒரே ஆண்டு மட்டுமே நீடித்த உறவு – புலம்பிய சுந்தரா டிராவல்ஸ் நடிகை.

0
1251
Radha
- Advertisement -

தமிழில் சினிமாவில் கடந்த 2002 ஆம் ஆண்டு முரளி, வடிவேலு, மணிவண்ணன், வினுசக்ரவர்த்தி போன்ற பலர் நடிப்பில் வெளியான ‘சுந்தரா ட்ராவல்ஸ்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ராதா. சுந்தரா ட்ராவல்ஸ் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால், இந்த படத்தில் நடித்த இவர் அதன் பின்னர் இவர் நடித்த படங்கள் பெரிதாக வெற்றியடையாத காரணத்தினால் தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து இருந்தார்.

-விளம்பரம்-

நடிகை ராதா கடந்த சில வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தைக்கும் தாயானார். திருமணமாகி சில வருடங்களில் கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரை விவகாரத்து செய்துவிட்டார். முதல் கணவரை விவாகரத்து செய்து தனியாக வாழ்ந்து வந்துள்ள ராதாவிற்கு, எண்ணூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக இருந்து வரும் வசந்த ராஜன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. வசந்தனுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருந்த நிலையில் நடிகை ராதா உடன் ஏற்பட்ட காதலால் வசந்தராஜன் ராதாவும் திருமணம் செய்து கொண்டனர்.

- Advertisement -

இரண்டவது திருமணம் :

வசந்த ராஜனை திருமணம் செய்த ராதா கடந்த ஓராண்டாக அவருடன் வாழ்ந்து வந்துள்ளார். இப்படி ஒரு நிலையில் இவர்கள் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் நடிகை ராதாவை தன்னுடைய இரண்டாவது கணவர் தன்னை அடித்து கொடுமை படுத்துவதாகவும் தன்னை கட்டாயப்படுத்தி திருமணம் செய்ததாகவும் கூறி விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் நடிகை ராதா புகார் அளித்த நிலையில் அதனை அப்போதே வாபஸ் பெற்று விட்டார்.

பாரதி கண்ணம்மா சீரியலில் ராதா :

இப்படி சில வருடங்கள் நடிக்காமல் இருந்த நடிகை ராதா சமீபத்தில் தன பைரவி என்ற சிறியலில் நடித்தார். இந்த நிலையில் தான் விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா 2 சிரியலில் சில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் வீட்டிற்கு அடைக்கலமாக வந்து பின்னர் அங்கேயே குழந்தைகளுடன் தங்கி தற்போது அந்த குடும்பத்தை நாட்டாமை செய்து கொண்டிருக்கும் கொடூர வில்லியாக நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

படத்தில் தொடர்ந்து நடிக்காததற்கான காரணம் :

இந்த நிலையில் சமீபத்தில் செய்து ஊடகம் ஒன்றிக்கு கொடுத்திருந்த பேட்டியில் தான் ஏன் “சுந்திரம் ட்ராவல்ஸ்” படத்திற்கு பிறகு நடிக்கவில்லை என்பதனை பற்றி பேசியிருக்கிறார். அவர் கூறியதாவது “நான் சினிமாவில் பெரிதாக ஆர்வம் இல்லாமல் தான் நடிக்க வந்தேன். லோகு என்ற மேனேஜர் நான் அழகாக இருப்பதாக மௌனம் ரவியிடம் அறிமுகப்படுத்தினார். அதற்கு பிறகு போட்டோ ஷுட்டிங் நடந்தது. சுந்தரம் ட்ராவல்ஸ் படத்தில் வாய்ப்பும் கிடைத்தது. எனக்கு அனைத்துமே மிகவும் எளிதாக அமைந்து விட்டது.

சினிமாவில் இருந்து விலக காரணம் :

ஆனால் சினிமாவில் அதிகமான ஈகோ இருப்பதினால் நான் நடிப்பதை விட்டு வெளியில் வந்தேன். மற்றொரு எண்ணம் என்னவென்றால் நான் திருமண வாழ்க்கைக்குள் செல்ல வேண்டும் என்று எண்ணம் இருந்தது. அப்படிதான் எனக்கு காதல் ஏற்பட்டது. ஆனால் அந்த காதலினால் பணம் உள்பட பலவற்றை இழந்து விட்டேன். அதனை என்னுடைய மனதிற்குள் வைக்க வேண்டாம் என்று நினைத்தேன்.

சாக்கடைக்குள் காலை வைத்து விட்டேன் :

அப்போது நான் சினிமாவில் இருந்த காரணத்தினால் இது அதிகமான வெளியில் தெரிந்து மன சங்கடத்தை உண்டாக்கியது. நான் தெரியாமல் சாக்கடைக்குள் காலை வைத்து விட்டேன். அந்த சூழ்நிலையில் நான் கிட்டத்தட்ட பைத்தியமாகவே ஆகிவிட்டேன். ஆனால் நான் அந்த சூழ்நிலையில் இருந்து வெளியில் வருவதற்கு கடவுள் போதுமான சக்தியை என்னிடம் கொடுத்தார் என்று தெரிவித்தார் “சுந்தரம் ட்ராவல்ஸ்” நடிகை ராதா

Advertisement