முதல் நாளே எப்படி இவருக்கு மட்டும் இப்படி – சூப்பர் சிங்கரின் இந்த சீசன் TRP இவரை வைத்து தானா?

0
600
- Advertisement -

விஜய் டிவியில் எத்தனையோ நிகழ்ச்சிகள் வந்தாலும் ஆணிவேராக மக்கள் மத்தியில் இருக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சி பல ஆண்டு காலமாக மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சி ஜூனியர், சீனியர் என்று இரு பிரிவில் ஒளிபரப்பாகி வருகிறது. அதோடு இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் ஏகப்பட்ட பேருக்கு வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. சொல்லப்போனால், இந்த நிகழ்ச்சி தான் வெள்ளித்திரைக்கு பாடகர்களை அறிமுகப்படுத்தும் பாலம் என்று சொல்லலாம்.

-விளம்பரம்-

அதுமட்டுமில்லாமல் இந்த நிகழ்ச்சிக்கு தமிழகத்தில் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். சூப்பர் சிங்கர் சீனியர்ஸ் நிகழ்ச்சியை விட மழைலை குரல்கள் ஒலிக்கும் ஜூனியர்ஸ் நிகழ்ச்சிக்கு தான் ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்பு இருக்கிறது. மேலும், இந்த நிகழ்ச்சியை மா கா பா ஆனந்த் மற்றும் பிரியங்கா தேஷ்பாண்டே தான் தொகுத்து வழங்கி வருகிறார்கள். இந்த நிகழ்ச்சிக்கு நடுவராக ஸ்வேதா மோகன், பென்னி தயால், அனுராதா ஸ்ரீராம், சரண் மற்றும் உன்னிகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்று இருந்தார்கள்.

- Advertisement -

சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 9:

சமீபத்தில் சிறுவர்களுக்கான சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 9 ஜூன் மாதத்திலேயே ஆரம்பமாகி இருக்கிறது. இந்த சீசன் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறுவர்கள் பலருமே தங்களுடைய திறமையை சிறப்பாக வெளிக்காட்டிருந்தார்கள். தற்போது நயன்தாரா நடிப்பில் வெளிவந்த அன்னபூரணி படத்தில் போட்டியாளரான ஸ்ரீநிதா, வெளிவந்த , ஹர்ஷினி, கோகுல் ஆகிய நால்வருமே இணைந்து ஒரு அட்டகாசமான பாடலை பாடி இருக்கிறார்கள்.

நிகழ்ச்சி டைட்டில் வின்னர்:

இதில் ஸ்ரீநிதா வெற்றி பெற்று இருக்கிறார். இவருக்கு 60 லட்சம் மதிப்புள்ள வீடு பரிசாக கிடைத்து இருக்கிறது. பலரும் இவருக்கு டைட்டில் பட்டம் கொடுத்தது சரி தான் என்று கூறி இருக்கிறார்கள். மேலும், இந்த சீசன் முடிவடைந்த உடனே தற்போது விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் ஜூனியர் 10 நிகழ்ச்சி தொடங்கயிருக்கிறது. வழக்கம்போல் இந்த நிகழ்ச்சியை பிரியங்கா தான் தொகுத்து வழங்க இருக்கிறார்.

-விளம்பரம்-

சூப்பர் சிங்கர் ஜூனியர் 10 நிகழ்ச்சி:

அதற்கான ப்ரோமோக்கள் எல்லாம் வெளியாகி இருந்தது. இன்று இரவு தான் இந்த நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த நிலையில் இதற்கான ப்ரோமோவில் போட்டியாளர் ஜான் சிறப்பாக பாடியிருக்கிறார். இவர் கள்ளக்குறிச்சி மாவட்ட பழைய சிறுவங்கூரையை சேர்ந்தவர். இவருடைய இனிமையான குரலில் பாடலைக் கேட்டு நடுவர்கள் பாராட்டி இருந்தார்கள். பொதுவாகவே சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தொடங்கி சில வாரங்கள் கழித்து தான் நடுவர்கள் போட்டியாளர்களின் பாட்டை கேட்டு மெய் மறந்து எழுந்து நிற்பார்கள்.

நெட்டிசன்கள் கருத்து:

ஆனால், நிகழ்ச்சி முதல் நாளே ஜான் பாடலை கேட்டு நாலு நடுவர்களுமே எழுந்து நின்று கைதட்டி பாராட்டி இருக்கிறார்கள். தற்போது அந்த ப்ரோமோ தான் வெளியாகியிருக்கிறது. இதை பார்த்து பலருமே பாராட்டி இருக்கிறார்கள். சிலர் வழக்கம் போல் விமர்சித்து இது நிகழ்ச்சியின் டிஆர்பிக்காக செய்யும் வேலை. இவரை வைத்து தான் இந்த சீசன் டிஆர்பி கலக்கப்போறாங்களா? என்றெல்லாம் கிண்டல் அடித்திருக்கிறார்கள்.

Advertisement