CWC 4க்கு ஷிவாங்கி எப்படியோ இங்க இவரு – சூப்பர் சிங்கர் 9 Finalistஐ விமர்சிக்கும் நெட்டிசன்கள்.

0
3965
SuperSinger
- Advertisement -

சூப்பர் சிங்கர் 9வது சீசன் இறுதிகட்டத்தை நெருங்கி வரும் நிலையில் தற்போது இறுதி போட்டிக்கு தகுதி இல்லாத நபர் தேர்ந்துடுக்கப்பட்டு இருப்பதாக விமர்சனங்கள் எழுந்து வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அதிலும், விஜய் டிவியில் எத்தனையோ நிகழ்ச்சிகள் வந்தாலும் ஆணிவேராக மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சி பல ஆண்டு காலமாக மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது.

-விளம்பரம்-

மேலும், இந்த நிகழ்ச்சி ஜூனியர், சீனியர் என்று இரு பிரிவில் ஒளிபரப்பாகி வருகிறது. அதோடு இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் ஏகப்பட்ட பேருக்கு வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. சொல்லப்போனால், இந்த நிகழ்ச்சி தான் வெள்ளித்திரைக்கு பாடகர்களை அறிமுகப்படுத்தும் பாலம் என்று சொல்லலாம். அதுமட்டுமில்லாமல் இந்த நிகழ்ச்சிக்கு தமிழகத்தில் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

- Advertisement -

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி:

சூப்பர் சிங்கர் சீனியர்ஸ் நிகழ்ச்சியை விட மழைலை குரல்கள் ஒலிக்கும் சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் நிகழ்ச்சிக்கு தான் ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்து இருக்கிறது. கடந்த ஆண்டு சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் 8 நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. இந்த நிகழ்ச்சியை மா கா பா ஆனந்த் மற்றும் பிரியங்கா தேஷ்பாண்டே தான் தொகுத்து வழங்கி வருகிறார்கள். இந்த நிகழ்ச்சிக்கு நடுவராக ஸ்வேதா மோகன், பென்னி தயால், அனுராதா ஸ்ரீராம், சரண் மற்றும் உன்னிகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்று வருகின்றனர்.

தற்போது இந்த நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கி இருக்கிறது.தற்போது நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கி இருப்பதால் முதல் 3 பைனல் லிஸ்ட் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். அபிஜித், பூஜா, அருணா ஆகிய மூன்று பேருமே நேரடியாக இறுதி சுற்றுக்கு தேர்வாகி இருக்கிறார்கள். இந்த நிலையில் இந்த சீசனில் பூஜா பைனளுக்கு தகுதி பெற்று இருப்பது பெரும் விமர்சனத்தை உள்ளாக்கி இருக்கிறது

-விளம்பரம்-

பொதுவாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இருந்து யாராவது திறமையான பாடகர்கள் வெளியேறினால் சர்ச்சைகள் ஏற்படுவது வழக்கமான ஒரு விஷயம் தான். அதேபோல இதுவரை நடந்து முடிந்த பல்வேறு சூப்பர் சிங்கர் சீசன்களின் டைட்டில்களை தகுதியானவர்களுக்கு கொடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் இருந்து தான் வருகிறது. அந்த வகையில் இந்த சீசனிலும் இந்த சர்ச்சை எழுந்து இருந்தது.

கடந்த ஆண்டு சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சி நிறைவு பெற்றது. அப்போது இந்த சீசனில் வெற்றி பெற்ற கிரிஷாங்கிற்கு பலர் வாழ்த்துக்களை கூறி வந்தாலும் இந்த சீசனில் முதல் இடத்திற்கு தகுதியானவர் நேஹா தான் என்று பலரும் கூறி வருகின்றனர். மேலும், விஜய் டிவியின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் கூட நேஹா தான் உண்மையான வெற்றியாளர் என்றும் நாங்கள் கஷ்டப்பட்டு வாக்களித்த போட்டியாளரை வெற்றியாளாராக அறிவிக்காமல் இருக்க எதற்கு பொதுமக்களை ஓட்டு போட வைக்கிறீர்கள்? என்றும் கூறி வந்தனர்.

அதே போல ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் விஜய் டிவி எதாவது ஒரு லவ் அல்லது ரொமான்ஸ் போர்ஷனை வம்படியாக வைத்து வருகிறது. கடந்த சீசன் ஒளிபரப்பான போது கூட மானஸி மற்றும் கார்த்திக் தேவராஜை வைத்து ஒரு ரோமன்ஸ் டிராக்கை ஓட்டினார். அதனால் தான் மானஸி பைனல் வரை வந்தார் என்று விமர்சனம் எழுந்தது. அதே போல இந்த சீசனில் கூட பூஜா மற்றும் Dj பிளாக் இருவருக்கு ஒரு ரொமான்ஸ் போர்ஷனை ஓட்டிகொண்டு வந்தனர். அதன் மூலம் தான் பூஜாவும் பைனல் வரை வந்து இருக்கிறார் என்ற விமர்சனமும் எழுந்து வருகிறது.

Advertisement