இந்த முறையையும் சர்ச்சையை கிளப்பிய சூப்பர் சிங்கர் 9 Result – அவருக்கு தான் சென்று இருக்க வேண்டும் என்று ரசிகர்கள் ஆதங்கம்.

0
4254
- Advertisement -

சூப்பர் சிங்கர் சீசன் 9ன் டைட்டிலை வெற்றி பெற்ற நபர் குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அதிலும், விஜய் டிவியில் எத்தனையோ நிகழ்ச்சிகள் வந்தாலும் ஆணிவேராக மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சி பல ஆண்டு காலமாக மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது.

-விளம்பரம்-

பொதுவாக சூப்பர் சிங்கர் ரிசல்ட் விமர்சனத்திற்கு உள்ளாவது வாடிக்கையான ஒரு விஷயம் தான், அந்த வகையில் இந்த சீசன் முடிவும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. இந்த சீசனில் அருணா பட்டத்தை வென்றதற்கு பலர் வாழ்த்துக்களை கூறி வரும் அதே வேளையில் இந்த சீசனில் அப்ஜித் தான் சிறப்பாக பாடினார் அவருக்கு தான் இந்த சீசனில் பட்டம் கொடுத்து இருக்க வேண்டும் என்று பலர் தங்கள் ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

மேலும், இந்த நிகழ்ச்சி ஜூனியர், சீனியர் என்று இரு பிரிவில் ஒளிபரப்பாகி வருகிறது. அதோடு இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் ஏகப்பட்ட பேருக்கு வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. சொல்லப்போனால், இந்த நிகழ்ச்சி தான் வெள்ளித்திரைக்கு பாடகர்களை அறிமுகப்படுத்தும் பாலம் என்று சொல்லலாம். அதுமட்டுமில்லாமல் இந்த நிகழ்ச்சிக்கு தமிழகத்தில் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி:

அதோடு சூப்பர் சிங்கர் சீனியர்ஸ் நிகழ்ச்சியை விட மழைலை குரல்கள் ஒலிக்கும் சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் நிகழ்ச்சிக்கு தான் ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்பு தான் இருக்கிறது. கடந்த ஆண்டு சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் 8 நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. இந்த நிகழ்ச்சியை மா கா பா ஆனந்த் மற்றும் பிரியங்கா தேஷ்பாண்டே தான் தொகுத்து வழங்கி வருகிறார்கள். இந்த நிகழ்ச்சிக்கு நடுவராக ஸ்வேதா மோகன், பென்னி தயால், அனுராதா ஸ்ரீராம், சரண் மற்றும் உன்னிகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்று வருகின்றனர்.

-விளம்பரம்-

சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 9 நிகழ்ச்சி:

தற்போது புத்தம் புதிதாக சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 9 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. மேலும், இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் சர்வதேச பகுதியிலிருந்தும் பல போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் நாளில் இருந்து தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தற்போது இந்த நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கி இருக்கிறது.

இறுதி சுற்று:

இந்நிலையில் சூப்பர் சிங்கர் சீசனின் டைட்டில் வின்னர் குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி நேற்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் கோலாகலமாக நடைபெற்று இருந்தது. இந்த இறுதிப் போட்டியில் அபிஜித், அருணா, பூஜா, பிரியா, பிரசன்னா ஆகியோர் கலந்துகொண்டு பிரமாதமாக பாடியிருந்தார்கள்.

வெற்றி பெற்ற நபர்:

இறுதியாக இந்த சீசனின் டைட்டில் வின்னர் படத்தை அருணா பெற்று இருக்கிறார். இவருக்கு 60 லட்சம் மதிப்பிலான வீடு பரிசாக வழங்கப்பட்டிருக்கிறது. இவரை அடுத்து பிரியா இரண்டாவது இடத்தையும், பிரசன்னா மூன்றாவது இடத்தையும் பெற்றிருக்கிறார்கள். தற்போது அருணா முதலிடத்தை பெற்றதை எடுத்து பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement