திருமணமான 45 நாளிலிலேயே ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய் டிவியின் உதித் நாராயணன் அஜய்.

0
815
ajay
- Advertisement -

திருமணம் ஆன 45 நாளிலேயே ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடித்துள்ளார் சூப்பர் சிங்கர் அஜய் கிருஷ்ணா. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கு ஒன்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அந்த வகையில் பல ஆண்டு காலமாக மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இது ஜூனியர், சீனியர் என்று இரு பிரிவில் நிகழ்ச்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் ஏகப்பட்ட பேருக்கு வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

-விளம்பரம்-

சொல்லப்போனால், இந்த நிகழ்ச்சி தான் வெள்ளித்திரைக்கு பாடகர்களை அறிமுகப்படுத்தும் பாலம். அந்த அளவிற்கு இந்த நிகழ்ச்சி பிரபலமாக இருக்கிறது. மேலும், இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் அஜய் கிருஷ்ணா. இவர் பிரபல பாடகர் உதித் நாராயணன் போல் அப்படியே பாடி பலமுறை வியக்க வைத்திருக்கிறார். அஜய் கிருஷ்ணா சென்னையை சேர்ந்தவர். இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் தான் மீடியாவுக்குள் நுழைந்தார்.

- Advertisement -

இதையும் பாருங்க : ஜெய் பீம்ல சூர்யா சார் இருப்பார்ன்னு எனக்கே தெரியாது – நடிக்கவே தெரியாமல் சினிமாவிற்கு வந்த காரணம் குறித்து ஜெய் பீம் நாயகி.

அஜய் கிருஷ்ணா பற்றிய தகவல்:

இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இந்த நிகழ்ச்சியின் மூலம் தான் இவருக்கு படங்களில் பாட வாய்ப்பு கிடைத்திருக்கிறது. பின் விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் ஸ்டார் மியூசிக் என்ற நிகழ்ச்சியிலும் இவர் பாடல்களை பாடி வருகிறார். அஜய் கிருஷ்ணா தற்போது பின்னணி பாடகராக திகழ்கிறார். இந்நிலையில் கடந்த மே 13 ஆம் தேதி அஜய் கிருஷ்ணாவுக்கும் ஜெஸிக்கும் பெரியவர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.

-விளம்பரம்-

அஜய்-ஜெஸி காதல்:

கண்ணான கண்ணே பாடலை அஜய் பாடின வீடியோவை பார்த்து அவரிடம் பேச ஆரம்பித்தவர் தான் ஜெஸ்ஸி. ஆரம்பத்தில் நட்பாக இருந்த இவர்களுடைய உறவு பின் நாளடைவில் காதல் மலர்ந்தது. பிறகு இருவருடைய வீட்டிலும் இவர்களுடைய காதலுக்கு சம்மதம் தெரிவித்தார்கள். சமீபத்தில் தான் இவர்களுடைய நிச்சயதார்த்தம் எளிமையாக முடிந்து இருந்தது. மேலும், திருமண வேலைகள் முழுவதையுமே ஆசை ஆசையாக இருவருமே கவனித்து சிறப்பாக தங்களுடைய திருமணத்தை நடத்தி இருந்தார்கள்.

45 நாளில் விஜய் டிவி ஷோவில் :

இப்படி ஒரு நிலையில் திருமணம் முடிந்த 45 நாளில் விஜய் டிவியின் மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளனர் அஜய் ஜோடி. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் மக்கள் மத்தியில் சூப்பர் ஹிட்டாகி இருக்கும் நிகழ்ச்சி தான் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சி.

அஜய் – ஜெசி :

இதுவரை 3 சீசன்களை கடந்த இந்த நிகழ்ச்சியின் 4வது சீசன் சமீபத்தில் துவங்கியது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க போகும் 5 ஜோடிகள் குறித்த தகவல் ஏற்கனவே வெளியாகி இருந்த நிலையில் தற்போது இந்த வாரம் புதிய ஜோடிகளை அறிமுகம் செய்து வைத்துள்ளனர். ஆம், அதன்படி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் முலம் பிரபலமான அஜய் தனது மனைவியுடன் புதிய ஜோடியாக அறிமுகமாகியுள்ளார்.

Advertisement