நம்ம புவையரா இது . ஆளே மாறி வேற லெவல் ல இருக்கிறாரே வைரலாகும் புகைப்படம்.

0
6372
- Advertisement -

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் எப்போதும் சூப்பர் ஹிட். அதிலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி என்றால் சொல்லவா வேண்டும். விஜய் டிவியில் வருடம் வருடம் சிறியவர்கள், பெரியவர்கள் என தனி தனியாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி நடைபெறும். விஜய்யில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி எப்போதும் மாஸ் தான். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ஜூனியர், சீனியர் என அனைத்து தரப்பினருக்கும் சினிமா உலகில் மாபெரும் வாய்ப்பை அள்ளித் தந்து வருகிறது. கடந்த ஆண்டு தான் ஜூனியர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி வெற்றிகரமாக முடிவடைந்தது. இது அனைவருக்கும் தெரியும்.

-விளம்பரம்-

மேலும், சிறுவர்களுக்காக நடந்த இந்த கடைசி சீசனில் பூவையாரு சிறுவர்கள் மட்டுமில்லாமல் அனைவர் மனதிலும் இடம் பிடித்தார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கானா பாடல்களின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை சேர்ந்தவர் பூவையார். மேலும், இவரை “கானா ராக்ஸ்டார்” என்று தான் அழைப்பார்கள். இவர் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் தான் இவருடைய வாழ்க்கை பாதை மாறியது என்று சொல்லலாம். தற்போது திரைப்படங்களில் நடிப்பதற்கு இவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சென்னை பாஷை பேசியும், தன்னுடைய கானா பாடலால் பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்தவர் பூவையார்.

- Advertisement -

சமீபத்தில் அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் தீபாவளி முன்னிட்டு வெளி வந்த “பிகில்” படம் திரையரங்களில் வேற லெவல்ல தூள் கிளப்பியது. இது அனைவருக்கும் தெரிந்தது தான். மேலும், விஜய்யின் பிகில் படத்தில் “வெறித்தனம்” என்ற கானா பாடலை சூப்பர் சிங்கர் பூவையார் பாடி உள்ளார். அடுத்ததாக விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்திலும் பூவையார் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளி வந்து உள்ளது. பூவையார் தற்போது திரைப் படங்களில் பாடுவதும், ஆடுவதும், நடிப்பதும் என பிஸியாக இருந்து வருகிறார். அதுமட்டும் இல்லாமல் பூவையாரு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம் அவர்கள் நடிக்க இருக்கும் “விக்ரம் 58” திரைப் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார் என்று கூறப்படுகிறது.

மேலும், சமீபத்தில் கூட சினிமாவில் இசை அமைப்பாளரும், நடிகருமான ஹிப் ஹாப் தமிழா ஆதியின் பாடல் ஓன்றில் பூவையாரு பாடி உள்ளார். இந்நிலையில் சூப்பர் சிங்கர் புகழ் பூவையார் ஒரு படத்தில் நடித்து வருகிறார். தற்போது இவருடைய புகைப்படம் ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் அனைவரும் ஷேர் செய்தும் லைக் செய்தும் வருகின்றனர். தற்போது இவர் திரைப்படங்களில் நடித்து கொண்டும், பாடிக்கொண்டும் வருகின்றார். மேலும், ரசிகர்கள் இவர் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த சின்ன வயதிலேயே சினிமாவில் உள்ள பல பிரபலங்களின் மத்தியில் இவ்ளோ!!! பெரிய வாய்ப்பா என்று ரசிகர்கள் பூவையாருக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement