சிறுவனாக சூப்பர் சிங்கரில் பட்டம் பெற்று தற்போது கல்லூரி இளைஞசனாக மீண்டும் சூப்பர் சிங்கர் ஜூனியர் மேடைக்கு வந்த பூவையர்.

0
1779
- Advertisement -

சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் பூவையார் கலந்து கொண்டு பேசி இருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கு என்றும் ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அதிலும், விஜய் டிவியில் எத்தனை நிகழ்ச்சிகள் வந்தாலும் ஆணிவேராக மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். பல ஆண்டு காலமாக இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. மேலும், இந்த நிகழ்ச்சி ஜூனியர், சீனியர் என்று இரு பிரிவில் ஒளிபரப்பாகி வருகிறது.

-விளம்பரம்-

அதோடு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் ஏகப்பட்ட பேருக்கு வெள்ளித்திரையில் பாட வாய்ப்புகள் கிடைத்திருக்கிறது. சொல்லப்போனால், இந்த நிகழ்ச்சி தான் வெள்ளித்திரைக்கு பாடகர்களை அறிமுகப்படுத்தும் பாலம் என்றும் சொல்லலாம். அதுமட்டுமில்லாமல், இந்த நிகழ்ச்சிக்கு தமிழகத்தில் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றார்கள். அதோடு சூப்பர் சிங்கர் சீனியர்ஸ் நிகழ்ச்சியை விட, மழலை குரல்கள் ஒலிக்கும் ஜூனியர்ஸ் நிகழ்ச்சிக்கு தான் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கின்றது..

- Advertisement -

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி:

இந்த நிகழ்ச்சியை மாகா பா ஆனந்த் மற்றும் பிரியங்கா தேஷ்பாண்டே தொகுத்து வழங்கி வருகிறார்கள். இந்த நிகழ்ச்சிக்கு நடுவராக ஸ்வேதா மோகன், பென்னி தயால், அனுராதா ஸ்ரீராம், சரண் மற்றும் உன்னிகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்று வருகின்றனர். சமீபத்தில் சூப்பர் சிங்கர் ஜூனியர் 9 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி இருந்தது .இந்த நிகழ்ச்சியில் கேரளா, தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் சர்வதேச பகுதியிலிருந்தும், பல போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருந்தார்கள். இந்த நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் நாளில் இருந்து முடியும் வரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது .

சூப்பர் சிங்கர் சீனியர் 9 வின்னர்:

சில தினங்களுக்கு முன் தான் இந்த நிகழ்ச்சியின் இறுதி சுற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்று இருந்தது. இந்த இறுதிப் போட்டியில் அபிஜித், அருணா, பூஜா, பிரியா, பிரசன்னா ஆகியோர் கலந்துகொண்டு பிரமாதமாக பாடியிருந்தார்கள். இறுதியாக இந்த சீசனின் டைட்டில் வின்னர் பட்டத்தை அருணா பெற்று இருக்கிறார். இவருக்கு 60 லட்சம் மதிப்பிலான வீடு பரிசாக வழங்கப்பட்டிருக்கிறது. இவரை அடுத்து பிரியா இரண்டாவது இடத்தையும், பிரசன்னா மூன்றாவது இடத்தையும் பெற்றிருக்கிறார்கள்.

-விளம்பரம்-

சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 9 நிகழ்ச்சி:

இந்த நிலையில் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 9 நிகழ்ச்சி குறித்த ப்ரோமோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த ஜூனியர் சீசனில் கலந்து கொள்ளும் நபர்களில் ஒருவர் தான் கென்லிசிஜா. இவரை அடுத்த போட்டியாளராக சமீரா என்பவர் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறார். தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சி தொடங்க இருக்கிறது. அதற்கான ப்ரோமோக்கள் எல்லாம் சில வாரங்களாகவே இணையத்தில் வெளியாகி வருகிறது. அந்த வகையில் சூப்பர் சிங்கர் ஜூனியர் 9 நிகழ்ச்சிக்கான ப்ரோமோ ஒன்று தற்போது வெளியாகியிருக்கிறது.

பூவையார் பேசிய வீடியோ:

அதில் பூவையார் பாடி இருக்கிறார். இந்த நிகழ்ச்சியை மாகாபா மற்றும் குரேசி தொகுத்து வழங்க இருக்கிறார்கள். அப்போது குரேஷி பூவை யாரிடம் நீ என்ன படிக்கிறாய்? என்று கேட்டிருக்கிறார். அதற்கு பூவையார், நான் காலேஜ் செல்கிறேன் என்று சொன்னவுடன் குரேஷி ஷாக் ஆகியிருக்கிறார். தற்போது இந்த நிகழ்ச்சிக்கான ப்ரோமோ தான் வெளியாகியிருக்கிறது. இந்த எபிசோடை பார்க்க ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Advertisement