எங்கள சுத்தி கடன் இருக்கு, சொந்த ஊருக்கே போகவேண்டியது தான் – வேதனையில் பாடகி ராஜலக்ஷ்மி

0
2096
- Advertisement -

எங்களை சுத்தி நிறைய கடன் பிரச்சனை இருக்கிறது என்று பாடகி ராஜலட்சுமி அளித்திருக்கும் பேட்டி தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான பாடகியாக திகழ்பவர் ராஜலக்ஷ்மி. இவர் ‘என்ன மச்சான் சொல்லு புள்ள’ என்ற பாடல் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர். இந்த பாடலை செந்தில் கணேஷ்– ராஜலக்ஷ்மி இருவரும் பாடி இருந்தார்கள். இவர்கள் முதலில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டார்கள்.

-விளம்பரம்-

பின் இந்த சூப்பர் சிங்கர் மேடையில் இவர்கள் பல நாட்டுப்புற பாடல்களை பாடி மக்கள் மனதில் இடம் பிடித்தார்கள். அதோடு போட்டியில் செந்தில் கணேஷ் திறமையாக பாடி வென்று வீட்டை தட்டிச் சென்றார். அதோடு இந்த நிகழ்ச்சி தான் இவர்கள் வாழ்க்கைக்கு திருப்புமுனையாக அமைந்தது என்று சொல்லலாம். தற்போது இந்த ஜோடிகள் திரை உலகில் பல பாடல்களை பாடி வருகிறார்கள். இதனை தொடர்ந்து இருவரும் உள்ளூர், வெளியூர் என பல கச்சேரிகளில் தங்களுடைய நாட்டுப்புற பாடலை பாடி வருகிறார்கள்.

- Advertisement -

செந்தில் கணேஷ்– ராஜலக்ஷ்மி குறித்த தகவல்:

தற்போது இவர்கள் படம் ஒரு ஸ்டூடியோ ஒன்றை வைத்து நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு வெளியான புஷ்பா படத்தில் இடம் பெற்ற ‘வாயா சாமி’ என்ற பாடலை தமிழில் ராஜலக்ஷ்மி தான் பாடி இருந்தார். அதே போல ”வாயா சாமி ” பாடலை செந்தில் கணேஷ் – ராஜலட்சுமி இருவரும் ரி – கிரியேட் செய்து வீடியோ வெளியிட்டு இருந்தார்கள். தற்போது இருவரும் இருளி என்ற படத்தில் நடித்து வருகிறார்கள். இப்படி இவர்கள் இருவரும் சினிமாவில் பிசியாக இருந்து வருகின்றனர்.

ராஜலக்ஷ்மி நடிக்கும் படம்:

தற்போது ராஜலட்சுமி ‘Licence’ என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தை ஜே ஆர் ஜே புரோடக்ஷன் சார்பில் என் ஜீவானந்தம் தயாரிக்கிறார். இந்த படத்தில் ராதாரவி, ஜீவானந்தம், விஜய் பாரத், பழ. கருப்பையா, கீதா கைலாசம், அபி நட்சத்திரா, தன்யா, அனன்யா, வையாபுரி, நமோ நாராயணன் உட்பட பல நடிகர்கள் நடிக்கிறார்கள். காசி விஸ்வநாதன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். சமீபத்தில் தான் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த படம் கூடிய விரைவில் வெளியாக இருக்கிறது.

-விளம்பரம்-

ராஜலட்சுமி அளித்த பேட்டி:

இந்நிலையில் சமீபத்தில் ராஜலட்சுமி அவர்கள் youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருக்கிறார். அதில் அவர், எங்களுடைய தொழிலில் நிறைய சவால்கள் நிறைந்து இருக்கிறது. எங்களுடைய வாழ்க்கையிலும் நிறைய பிரச்சனைகள் இருக்கிறது. மீடியாவில் இருப்பவர்களுக்கும் நிறைய பிரச்சனைகள் இருக்கிறது. குறிப்பாக, கணவன் மனைவி இடையே நடக்கும் பிரச்சனை குறித்து நிறைய விமர்சனங்கள் வரும். இன்று மீடியாவில் உள்ள தம்பதிகளின் பிரச்சனைகள் தான் அதிகமாக இருக்கிறது. அந்த பிரச்சினையை பொதுவெளிக்குள் கொண்டு வரக்கூடாது. கணவரிடம் கருத்து வேறுபாடு இருந்தால் அதை அவரிடம் தான் விவாதிக்க வேண்டும். அதை மீடியாவிற்கு கொண்டு வர கூடாது.

குடும்ப பிரச்சனை குறித்து சொன்னது:

நீங்கள் மீடியா முன்பு பேசும் விஷயம் உங்களையும் பாதிக்கும். பிறரையும் பாதிக்கும். அதுமட்டுமில்லாமல் நாங்கள் நன்றாக வளர்ந்து விட்டோம் என்றெல்லாம் பல விமர்சனங்கள் மீடியாவில் வந்திருக்கிறது. வீடு, கார் என எல்லாமே நாங்கள் லோன் போட்டு தான் வாங்கினோம். கொரோனா வந்தபோது நிகழ்ச்சி எதுவும் இல்லை. கையில் பணமும் இல்லை. அதை கடந்து இப்போது வாழ்ந்து கொண்டு வருகிறோம். கடன் வாங்கி செலவு பண்ணி இருக்கிறோம். அதே மாதிரி ஒரு சூழல் வந்துட்டா என்ன பண்ணுவது என்று அவரிடம் நான் கேட்டேன். அப்போது அவர் லோன் கட்ட முடியவில்லை என்றால் பேங்க்கு கொடுத்து விட்டு நம்ம கிராமத்தில் உள்ள சொந்த வீட்டுக்கு போலாம் என்று கூறுவார். எங்களுக்கும் நிறைய பிரச்சனைகள் எல்லாம் இருக்கிறது என்று கூறி இருக்கிறார்.

Advertisement