12 மணிக்கு போன் செய்த சிம்பு..! மகிழ்ச்சியில் உறைந்த செந்தில்..! என்ன சொன்னார் தெரியுமா..?

0
3058
Senthil
- Advertisement -

ன்னோட அம்மா அவங்களோட பருவ வயசுலதான் முதன் முதலா சினிமா பார்த்ததாச் சொல்வாங்க. `படம் ஓடுது, படம் ஓடுதுனு சொல்வாய்ங்கய்யா… எப்படி ஓடும்னு பார்க்க ஆசையா இருக்கும். முதல் தடவையா சினிமா கொட்டகைக்குப் போனப்போ, திரையைப் பார்த்து, என்ன இது வேட்டியைத் துவைச்சு காயப் போட்டிருக்காங்கனு கேட்டிருக்கேன்.

-விளம்பரம்-

senthil

- Advertisement -

கூட வர்றவுக, அவுகளுக்குத் தெரிஞ்சதை எடுத்து விடுவாக’னு என்கிட்ட சொல்லிக்கிட்டிருந்த அம்மாகிட்ட, `உன் புள்ள சினிமாவுல பாடப்போறேன்’னு சொன்ன அந்த நிமிடம், என் வாழ்க்கையில முக்கியமான சம்பவம் சார்!” – சீசன் 6-ல் டைட்டில் வென்று இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடும் வாய்ப்பைப் பெற்றுள்ள செந்தில் கணேஷ் சொல்லும் வார்த்தைகள் நெகிழ வைக்கின்றன.

கிராமத்து மக்கள் முன்னாடி எத்தனையோ கோயில் மேடைகள்ல பாடியிருக்கோம். ஆனா, உலகம் முழுக்கப் பார்த்துக்கிட்டு இருக்கிற ஒரு மேடையில அதுவும் போட்டினு வந்துட்டதால, அந்த நிமிடம் எனக்கு திக் திக்னுதான் இருந்தது. கலைமகள் அருளால இது நடந்ததுனு நம்புகிறேன். அன்னைக்கு ராத்திரி 12 மணிக்கு சிம்பு சார் போன் பண்ணி, `நீங்க ஜெயிச்சதுல நான் ரொம்பவே சந்தோஷப்படுறேன். ஒருநாள் வீட்டுக்கு வாங்க, விருந்து வைக்கிறேன்’னு சொன்னார். கேட்கும்போதே சந்தோஷமா இருந்துச்சு. இதை எனக்கான வெற்றியா நான் நினைக்கலை. பஸ் கூட போகாத குக்கிராமங்களுக்கும் போய், கூட்டம் கம்மியா தெரிஞ்சாலும், மனசைத் தளரவிடாம பாடி, நாட்டுப்புற இசையை வாழ வெச்சுக்கிட்டு இருக்கிற ஒவ்வொரு கலைஞனுக்குமான வெற்றி இது.

-விளம்பரம்-

Simbu-Actor

நாங்க தம்பதியா, இந்த நிகழ்ச்சியில கலந்துக்க தேர்வானப்போ, `நிகழ்ச்சியில ஜெயிக்கிறோமோ இல்லையோ, நம்ம ஊருக்கு, நம்ம பாட்டுக்கு சூப்பர் சிங்கர் மேடை மூலமா என்ன செய்ய முடியுமோ, அதைச் செய்யணும்’கிறதை மட்டும் மனசுல நினைச்சுக்கிட்டோம். நினைச்ச மாதிரியே, இந்த நிகழ்ச்சி மூலமா நான் பிறந்த கலபம் கிராமத்தின் குடிநீர்த் தேவைக்கு ஒரு போர்வெல் வசதி கிடைச்சது. என் மனைவி ராஜலட்சுமி ஊர்ல தறி நெசவு செய்றவங்க அதிகமா வசிக்கிறாங்க. அவங்க இந்த நிகழ்ச்சி மூலமா பயனடைகிற மாதிரி சில விஷயங்கள் பண்ணினோம். இப்போ டைட்டில் கிடைச்சிருக்கு. இந்த வெற்றி மூலமா இன்னும் மக்களிசைக்கும், எங்க ஊருக்கும் என்ன செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்யணும்” என்ற செந்திலிடம், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடும் வாய்ப்பு குறித்துக் கேட்டோம்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியோட டிராவல்ல ரெண்டு மூணு முறை அவர் முன்னாடி பாடியிருக்கேன். `இவன் ஜெயிச்சா இவனுக்கு என்ன பாட்டு தரலாம்’னு யோசிச்சு வெச்சிருப்பார். அவரோட ஃபோக் இசையில பாடுறது ரிஸ்க்னு சிலர் சொல்லக் கேட்டிருக்கேன். அந்த அனுபவத்துக்காக நானும் ஆவலோட காத்திருக்கேன்!” என்கிறார்.

Advertisement