பிரம்மாண்டமாக நடந்த தீனா பட நடிகர் மகளின் திருமணம் – குவிந்த அரசியல் பிரபலங்கள்.

0
486
- Advertisement -

பிரம்மாண்டமாக நடிகர் சுரேஷ் கோபி மகளின் திருமணம் நடந்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. மலையாளத்தில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்தவர் சுரேஷ் கோபி. இவர் அதிகம் மலையாள மொழி படத்தில் தான் நடித்திருக்கிறார். இருந்தாலும், தமிழில் இவர் தீனா, சமஸ்தானம், தமிழரசன், ஐ போன்ற சில படங்களில் நடித்திருக்கிறார். கிட்டத்தட்ட இவர் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், இவர் நடிகர் மட்டும் இல்லாமல் பின்னணி பாடகர் ஆவார். அதோடு இவர் படங்களில் நடிப்பது மட்டுமில்லாமல் அரசியலிலும் அதிக ஈடுபாடு காட்டி வருகிறார். அந்த வகையில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற மாநிலங்கள் அவை தேர்தலில் போட்டியிட்டு உறுப்பினராக சுரேஷ் கோபி தேர்வு செய்யப்பட்டிருந்தார். பின் அதே ஆண்டில் இவர் பாஜகவில் இணைந்து விட்டார்.

- Advertisement -

சுரேஷ் கோபி குறித்த தகவல்:

தற்போது இவர் பாஜகவில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இப்படி இருக்கும் சமீபத்தில் சுரேஷ் கோபி பெண் பத்திரிக்கையாளரிடம் நடந்து கொண்ட சம்பவம் சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதாவது, கேரள கோழிக்கோட்டில் சுரேஷ் கோபி செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்திருந்தார். செய்தியாளர்களின் பல கேள்விகளுக்கு சுரேஷ் கோபி பதில் அளித்திருந்தார்.

சுரேஷ் கோபி குறித்த சர்ச்சை:

அப்போது அங்கிருந்த பெண் செய்தியாளர் தோளின் மீது கை வைத்து சுரேஷ் கோபி பதிலளித்திருக்கிறார். உடனே அவருடைய கையை தள்ளிவிட்டு அந்த பெண் செய்தியாளர் சென்றுவிட்டார். இந்த சம்பவம் தான் சோசியல் மீடியாவில் சர்ச்சையாகி இருந்தது. இது குறித்து பலருமே கண்டனம் தெரிவித்து இருந்தார்கள். இதை அடுத்து சுரேஷ் கோபி, தான் எந்த வித தவறான நோக்கிலும் கை வைக்கவில்லை. அது அவர்களுடைய மனதை புண்படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்கிறேன் என்று கூறி இருந்தார்.

-விளம்பரம்-

சுரேஷ் கோபி மகள் திருமணம்:

இந்த நிலையில் நடிகர் சுரேஷ் கோபி வீட்டில் நடைபெற்றிருக்கும் விசேஷம் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, நடிகர் சுரேஷ் கோபியின் மகள் பாக்யாவிற்கு இன்று திருமணம் நடைபெற்று இருக்கிறது. இந்த திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்று இருக்கிறது. இந்த விழாவில் மலையாள திரை உலகின் முக்கிய பிரபலங்கள் பலரும் கலந்து இருந்தார்கள். குறிப்பாக, மம்முட்டி- மோகன்லால் ஆகியோரும் ஒன்றாக வருகை தந்து மணமக்களை வாழ்த்தி இருந்தார்கள்.

குவியும் வாழ்த்துக்கள்:

அதுமட்டுமில்லாமல் இந்திய பிரதமர் மோடியும் இந்த திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி இருந்தார். இவர்களை அடுத்து நடிகர் ஜெயராம், திலீப், குஷ்பூ என பல திரை உலகப் பிரபலங்கள் வந்து கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி இருந்தார்கள். தற்போது இவர்களுடைய திருமண புகைப்படங்களும் வீடியோக்களும் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement