எதற்கும் துணிந்தவன் படம் பார்த்துவிட்டு தன மகள் சொன்ன விஷயம் – நெகிழிச்சியுடன் பகிர்ந்து கொண்ட சூர்யா.

0
569
ET
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருப்பவர் சூர்யா. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல படங்கள் பெற்றிருக்கிறது. அதிலும் கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த ஜெய் பீம் படம் மிகப்பெரிய அளவில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்திருந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது சூர்யா அவர்கள் எதற்கும் துணிந்தவன் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், வினய், தேவதர்ஷினி, இளவரசு, சுப்பு பஞ்சு, திவ்யா துரைசாமி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

-விளம்பரம்-

பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டுபவர்களை வேட்டையாட வக்கீல் கோட்டை கழட்டி வைத்து விட்டு வேட்டிக் கட்டிக் கொண்டு சூர்யா செய்யும் சூரசம்ஹாரம் தான் சூர்யா துணிந்தவன். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் சில வாரங்களுக்கு முன் வெளியாகி உள்ளது. ஆனால், சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தை திரையரங்குகளில் வெளியிட கூடாது என்று அரசியல் கட்சியினர் பலர் போராட்டம் செய்தார்கள்.

- Advertisement -

எதற்கும் துணிந்தவன் படத்திற்கு வந்த தடை:

மேலும், திரைப்படம் திரையிட இருந்த நேரத்தில் பாமகவினர் அங்கு சென்று அராஜகம் செய்ததால் அந்தப் படத்தின் காட்சி ரத்து செய்யப்பட்டது என்று தியேட்டர் நிர்வாகம் தெரிவித்தது. பின் பல பிரச்சனைகளுக்கு பிறகு தான் சூர்யாவின் படம் வெளியானது. இந்த படம் செம மாஸ் கமர்சியல் படமாக உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் மட்டுமன்றி அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெறுகிறது. மேலும், சூர்யா நடிப்பில் கடைசியாக வெளிவந்த சூரரைப்போற்று, ஜெய்பீம் ஆகிய இரண்டு திரைப்படங்களும் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானது.

எதற்கும் துணிந்தவன் படம் வசூல் விவரம்:

தற்போது இரண்டு வருடங்களுக்கு பிறகு சூர்யாவின் திரைப்படம் திரையரங்கில் வெளியாகி இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. அது மட்டுமில்லாமல் படம் வசூலிலும் சாதனை செய்கிறது என்று திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இதனால் படக்குழுவினர் மிகுந்த உற்சாகத்தில் உள்ளார்கள். இந்நிலையில் சமீபத்தில் சூர்யா அவர்கள் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் தனது மகன் மற்றும் மகள் குறித்து சில விஷயத்தை பகிர்ந்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது,

-விளம்பரம்-

தன் மகள் குறித்து சூர்யா கூறியது:

என்னுடைய மகள் மற்றும் மகன் இருவரும் எதற்கும் துணிந்தவன் படத்தை பார்த்து பல விஷயங்கள் கூறினார்கள். அதில் என்னுடைய முந்தைய படமான ஜெய்பீம் மற்றும் சூரரைப்போற்று படங்களுக்கு இணையாக எதற்கும் துணிந்தவன் படம் இருக்கிறது என்றும், இதற்கு முன்பு இப்படி ஒரு கதாபாத்திரத்தில் அதாவது கோபமான கதாபாத்திரத்தில் நான் நடிக்கவில்லை என்றும் கூறியிருந்தார்கள். குறிப்பாக என்னுடைய மகள் திவ்யா இந்த படம் குறித்து என்னுடன் நீண்ட நேரம் உரையாடி இருந்தார்.

Surya And Jyothika Son And Daughter New Year Celebration

தன் மகன் பற்றி சூர்யா சொன்னது:

பின் என்னுடைய மகன் தேவ்க்கு இந்த படம் ரொம்ப பிடித்து விட்டது என்று கூறியிருந்தார். அதுமட்டுமில்லாமல் இந்த படம் வசூல் ரீதியாக நல்ல வெற்றி அடைந்துள்ளதால் ரொம்ப சந்தோஷம் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று சூர்யா பேட்டியில் தெரிவித்திருக்கிறார். இப்படி சூர்யா அளித்துள்ள பேட்டி தற்போது சோசியல் மீடியாவை வைரலாகி வருகிறது. நடிகர் சூர்யா- ஜோதிகா இருவரும் 2006 ஆம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி இரு வீட்டில் உள்ள பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தியா என்ற பெண் குழந்தையும், தேவ் என்ற ஆண் குழந்தையும் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement