கட்டாயப்படுத்திய லோகேஷ் கனகராஜ் – விக்ரம் படத்துக்காக கொள்கையை விட்டுக் கொடுத்த சூர்யா.

0
482
surya
- Advertisement -

விக்ரம் படத்துக்காக லோகேஷ் கனகராஜ் வற்புறுத்தலால் தன்னுடைய கொள்கையை சூர்யா விட்டுக் கொடுத்து இருக்கிறார் என்ற தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கிய மாநகரம், கைதி, மாஸ்டர் போன்ற படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்து இருக்கும் படம் விக்ரம். இந்த படத்தை கமலின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் உடன் இணைந்து உதயநிதி ஸ்டாலின் தயாரித்து இருக்கிறது.

-விளம்பரம்-

இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி, மைனா நந்தினி உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தைப் பொருத்தவரை ஒரு பழிவாங்கல் கதை என்றாலும் இயக்குனர் அதை சொல்லிய விதமும், படமாக்கிய விதமும் பாராட்டுகளை குவித்து இருக்கிறது. மேலும், படத்தில் போதை பொருள் கடத்தல் கும்பலால் கமலின் மகன் கொல்லப்படுகிறான். இதை அறிந்த கமல் தன் மகனைக் கொன்றவர்களைத் பழிவாங்க செல்கிறார்.

- Advertisement -

விக்ரம் திரைப்படம்:

பின் அடுத்தடுத்து நடக்கும் சுவாரஸ்யமே படத்தின் கதை. மேலும், அனைவரும் எதிர்பார்த்திருந்த கமலின் விக்ரம் படம் நான்கு ஆண்டுகளுக்கு பின் வெளிவந்து இருப்பதால் ரசிகர்கள் திரையரங்கில் கொண்டாடி வருகிறார்கள். படத்தின் திரைக்கதையில் உள்ள வேகமும், விறுவிறுப்பும் பார்வையாளர்களை பார்க்க தூண்டுகிறது. ஒவ்வொரு காட்சியிலும் கமலும், லோகேஷ் கனகராஜூம் மெனக்கெட்டு மாஸ் காட்டி இருக்கிறார்கள்.

விக்ரம் படம் குறித்த தகவல்:

ஆகையால், விக்ரம் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் தரப்பு மாஸாக இருக்கிறது. பிரபலங்கள் பலரும் விக்ரம் படத்தை பார்த்து பாராட்டி வருகின்றனர். இந்த படம் இதுவரை சுமார் 400 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், விக்ரம் படம் வெளியானதிலிருந்து அனைவர் மத்தியிலும் சூர்யாவின் கதாபாத்திரம் குறித்து அதிகமாக பேசப்பட்டு வருகிறது. படத்தின் கடைசி நிமிடத்தில் சூர்யா வந்திருந்தாலும் மிரட்டி சென்றிருக்கிறார்.

-விளம்பரம்-

சூர்யாவின் கதாபாத்திரம்:

இந்நிலையில் விக்ரம் படத்திற்காக சூர்யா தன் கொள்கையை விட்டு கொடுத்திருக்கிறார் என்ற தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த படத்தில் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்ட கதாபாத்திரம் என்றால் சூர்யா தான். சூர்யா சில நிமிடங்களில் திரையில் வந்து இருந்தாலும் அவருடைய கதாபாத்திரம் நிலைபெற்றிருக்கிறது. படத்தின் கிளைமாக்சில் சூர்யா ஒரு இரக்கமற்ற கேங்ஸ்டார் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அப்போது அந்த காட்சியில் சூர்யா சிகரெட் பிடித்தபடி தனது வில்லத்தனத்தை காட்டியிருந்தார்.

கொள்கையை விட்ட சூர்யா:

சமீப காலமாக சூர்யா இப்படியான ஒரு காட்சியில் நடித்தது இல்லை. இறுதியாக சூரரை போற்று படத்தில் கூட புகைபிடிக்கும் காட்சியில் நடித்து இருந்தார். ஆனால், அதை படத்தில் இருந்து நீக்கிவிட்டார் சூர்யா. இருப்பினும் விக்ரம் படத்தில் புகைபிடிக்கும் காட்சி இல்லாமல் அந்த கிளைமாக்ஸ் காட்சி முழுமை பெறாது என்பதால் லோகேஷ் கனகராஜ் சூர்யாவை புகைப்பிடிக்க கட்டாயப்படுத்தினார். இதனால் சூர்யா தன்னுடைய கொள்கையை விட்டு விக்ரம் படத்தின் கதாபாத்திரத்திற்காக புகை பிடித்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் சூர்யா தன்னுடைய கதாபாத்திரத்திற்காக சம்பளம் கூட வாங்கவில்லை. கமலஹாசன் மீது உள்ள மரியாதை காரணமாக படத்தில் நடித்ததாகவும் கூறப்படுகிறது.

Advertisement