தமிழகத்தின் 5 முறை முதலமைச்சாரக இருந்த கலைஞர் கருணாநிதி சில தினங்களுக்கு முன்னர் உடல் நல குறைபாட்டால் சென்னை காவிரி மருத்துவமணியில் அனுமதிக்கப்ட்டர். தற்போது தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் வரும் அவரை பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களும், நடிகர்களும் நேரில் சென்று சந்தித்த வண்ணம் இறுகின்றனர்.
இன்று (ஜூலை 30) தமிழக முதல்வர் எடப்பாடி அவர்கள் காவேரி மருத்துவமனைக்கு நேரில் சென்று கலைஞர் அவர்களின் குடும்பத்தாரிடம் அவரது நலன் குறித்து விசாரித்து இருந்தார். இந்நிலையில் சமீபத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா காவேரி மருத்துவமனைக்கு சென்று கலைஞர் அவர்களின் நலன் குறித்து விசாரித்துள்ளார்.
நடிகர் சூர்யாவுடன் அவரது தந்தையும் நடிகருமான சிவகுமார் மற்றும் நடிகர் சூர்யாவின் 2D இன்டர்டய்ன்மெண்ட் நிறுவனத்தின் ராஜசேகர் பாண்டியனும் காவேரி மருத்துவமனைக்கு வந்திருந்தினர். பின்னர் மருத்துவமனையில் கலைஞர் அவர்களின் உடல் நலனை விசாரித்துவிட்டு திரும்பியுள்ளனர். ஏற்கனவே நடிகர் விக்ரம் கலைஞரின் உடல் நலன் குறித்து மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரித்துள்ளார்.
சற்று முன்னர் காவேரி மருத்துவமனையில் இருந்து வெளிவந்த தகவலின்படி, மருத்துவ கருவிகளின் துணையுடன் கருணாநிதியின் உடல் நிலை சீராக உள்ளதாக காவிரி மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கலைஞர் அவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கின்றோம்.