7ஆம் அறிவு படத்தில் இட ஒதுக்கீடு குறித்த வசனம், உதயநிதியிடம் சூர்யா வைத்த வேண்டுகோள். இதான் அந்த வசனம்.

0
2580
Udhayanidhi
- Advertisement -

சூர்யா சொன்னது அப்போ புரியல இப்போ புரியுது என்று உதயநிதி ஸ்டாலின் அளித்திருக்கும் பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் உதயநிதி ஸ்டாலின். குருவி படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமான உதயநிதி ஸ்டாலின் ஆதவன் படத்தின் மூலம் நடிகராக தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். அதன் பின் இவர் நான்கு படங்களை தயாரித்தார்.

-விளம்பரம்-

ஆனால், ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் தான் ஹீரோவாக களம் இறங்கினார் உதயநிதி ஸ்டாலின். இவர் தனது முதல் படமே அமோக வெற்றி பெற்றதால் ,அடுத்தடுத்து படங்களில் ஹீரோவாக நடிக்கத் தொடங்கினார். இறுதியாக இவர் நடிப்பில் வெளியான படம் கண்ணை நம்பாதே. இந்த படத்தை இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தை இயக்கிய இயக்குனர் மாறன் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் ஸ்ரீகாந்த், பிரசன்னா, ஆத்மிகா, சதீஷ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். கிரைம் திரில்லர் பாணியில் இந்த படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர்.

- Advertisement -

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. இதனைத்தொடர்ந்து உதயநிதி நடிப்பில் உருவாகிய படம் மாமன்னன். இந்த படத்தை மாரி செல்வராஜ் இயக்கி இருக்கிறார். இத்திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலினிற்கு கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். இவர்களை தொடர்ந்து இந்த படத்தில் வைகை புயல் வடிவேலு , பகத் பாசில், லால் போன்ற பல முன்னணி நடிகர்களும் நடித்து இருக்கிறார்கள்.

மாமன்னன் படம்:

இந்த படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. மேலும், இந்த படம் ஜூன் 29ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என்று அறிவித்திருந்தது. இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைத்திருக்கிறார். இது தான் உதயநிதி ஸ்டாலினின் கடைசி படம் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இந்த படத்தின் ஆடியோ லான்ச் விழா நடைபெற்றது. தற்போது சோசியல் மீடியாவில் மாரி செல்வராஜ் ஆடியோ லாஞ்ச் இல் பேசிய கருத்து தான் பேசும் பொருளாக இருக்கின்றது. இந்நிலையில் அரசியல் குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசியிருக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி இருக்கின்றது.

-விளம்பரம்-

உதயநிதி அளித்த பேட்டி

பேட்டியில் உதயநிதி கூறியது,சூர்யா நடிப்பில் வெளிவந்த ஏழாம் அறிவு படத்தில் ஒரு காட்சியில் ஸ்ருதிஹாசன் இட ஒதுக்க விமர்சித்து பேசி இருந்தார். அந்த காட்சியில் சூர்யாவே கிடையாது. ஆனால் அந்த படத்தை பார்த்துவிட்டு சூர்யா என்னிடம் இட ஒதுக்கீடு குறித்து விமர்சித்து பேசி இருக்கிறார்கள். இந்த டயலாக் வைக்கலாமா, வேண்டாமா என்று கேட்டார் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

அரசியல் குறித்து சொன்னது

அதற்கு, உடனே நான் அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்லை. சின்ன டயலாக் தானே வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டேன். அப்போது எனக்கு அரசியல் புரிதல் என்பது இல்லை. அதற்கு பிறகு தான் நான் தலைவர்கள் பற்றியும் ,கட்சிகளை பற்றியும், அரசியலை பற்றியும் கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக் கொண்டேன். எங்களின் அரசியல் கொள்கைகள் மற்றும் கோட்பாடுகளை படித்து கற்றுக் கொண்டேன் என்று கூறி இருக்கிறார்.

Advertisement