விஜய்யின் பெயரை கூட சொல்லாத சூர்யா – ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்திய வீடியோ.

0
472
- Advertisement -

கோலிவுட்டில் முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருப்பவர் சூர்யா. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அதிலும் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த ஜெய் பீம் படம் மிகப்பெரிய அளவில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்திருந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது சூர்யா அவர்கள் எதற்கும் துணிந்தவன் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், வினய், தேவதர்ஷினி, இளவரசு, சுப்பு பஞ்சு, திவ்யா துரைசாமி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

-விளம்பரம்-

மேலும், பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டுபவர்களை வேட்டையாட வக்கீல் கோட்டை கழட்டி வைத்து விட்டு வேட்டிக் கட்டிக் கொண்டு சூர்யா செய்யப் போகும் சூரசம்ஹாரம் தான் எதற்கும் துணிந்தவன். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் இன்று வெளியா கி உள்ளது. ஆனால், சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தை திரையரங்குகளில் வெளியிட கூடாது என்று அரசியல் கட்சியினர் பலர் போராட்டம் செய்தார்கள். ஏன்னா, கடந்த வருடம் வந்த ஜெய் பீம் படத்தில் ஒரு குறிப்பிட்ட காட்சியில் வன்னியர்களை ஜாதி வெறி பிடித்தவர்கள் என்று காட்டப்பட்டுள்ளதாக பாமக கட்சி எதிர்ப்பு தெரிவித்தது.

- Advertisement -

எதற்கும் துணிந்தவன் படத்திற்கு தடை கோரிக்கை:

அது மட்டுமில்லாமல் பல வன்னியர் சங்கத்தினர் ஜெய் பீம் படத்திற்கு எதிராக கோஷங்களை செய்திருந்தார்கள். இதனால் படக்குழுவினர் அந்த காட்சியை படத்திலிருந்து மாற்றிவிட்டனர். இருந்தும் இந்த பிரச்சினையின் காரணமாக தற்போது சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாமக கட்சி, மாவீரன் மஞ்சள் படை தலைவர் ஜெ குரு கனலரசன் ஆகியோர் பிரச்சனை செய்தார்கள். அதுமட்டும் இல்லாமல் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சரவணா திரையரங்கில் சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் திரைப்படம் திரையிட இருந்தது.

பாமாக கட்சியின் அராஜகம்:

அந்த நேரத்தில் பாமகவினர் அங்கு சென்று அராஜகம் செய்ததால் அந்தப் படத்தின் காட்சி ரத்து செய்யப்பட்டது என்று தியேட்டர் நிர்வாகம் தெரிவித்தது. இப்படி பல பிரச்சனைகளுக்கு பிறகு தான் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படம் இன்று வெளியானது. இந்த படம் செம மாஸ் கமர்சியல் படமாக உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் மட்டுமன்றி அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சூர்யா நடிப்பில் கடைசியாக வெளிவந்த சூரரைப்போற்று, ஜெய்பீம் ஆகிய இரண்டு திரைப்படங்களும் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானது.

-விளம்பரம்-

விழாவில் சூர்யா பேசியது:

இரண்டு வருடங்களுக்கு பிறகு சூர்யாவின் திரைப்படம் திரையரங்கில் வெளியாகி உள்ளதால் வசூல் சாதனை படைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். இந்த நிலையில் எதற்கும் துணிந்தவன் படத்தின் புரமோஷன் பணிகள் பல இடங்களில் நடைபெற்றது. அந்த வகையில் கேரளாவில் நடந்த இந்த படத்தின் பிரமோஷனில் கலந்த சூர்யா, விஜய் குறித்து பேசிய தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கேரளாவில் பட பிரமோஷனில் கலந்து கொண்ட சூர்யா மேடையில் பேசியது, நேருக்கு நேர் படத்தின் போது ரசிகர்கள் மற்றொரு நடிகருக்கு கொடுத்த ஆதரவு எனக்கு கிடைக்கவேண்டும் ஆசை பட்டேன்.

விஜய்-சூர்யா நடித்த படங்கள்:

பல வருடங்களுக்கு பிறகு தற்போது அதே ஆதரவு எனக்கு கிடைப்பது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறியிருந்தார். இப்படி இவர் பேசி இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதன் மூலம் நேருக்கு நேர் படத்தில் சூர்யாவுடன் விஜய் தான் நடித்து இருந்தார். அப்போது ரசிகர்கள் எல்லோரும் விஜய்க்கு ஆதரவு கொடுத்து இருந்தார்கள். விஜய் உடைய பெயரைத் தான் சொல்லாமல் சூர்யா கூறி இருக்கிறார். மேலும், இவர்கள் இருவரும் இணைந்து 1997 ஆம் ஆண்டு வெளிவந்த நேருக்கு நேர் என்ற படத்திலும், 2001 ஆம் ஆண்டு வெளிவந்த பிரண்ட்ஸ் என்ற படத்திலும் நடித்து இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement