‘கமல் அண்ணா எப்படி சொல்றது’ Rolex கதாபாத்திரம் குறித்து சூர்யா போட்ட ட்வீட் – (விக்ரம் படத்திர்காக சூர்யா வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா ? )

0
1864
surya
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கிய மாநகரம், கைதி, மாஸ்டர் போன்ற படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்து இருக்கும் படம் விக்ரம். இந்த படத்தை கமலின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் உடன் இணைந்து உதயநிதி ஸ்டாலின் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி, மைனா நந்தினி உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தைப் பொருத்தவரை ஒரு பழிவாங்கல் கதை என்றாலும் இயக்குனர் அதை சொல்லிய விதமும், படமாக்கிய விதமும் பாராட்டுகளை குவித்து இருக்கிறது.

-விளம்பரம்-

படத்தில் கமலின் மகனாக காளிதாஸ் நடித்திருக்கிறார். போதை பொருள் கடத்தல் கும்பலால் கமலின் மகன் கொல்லப்படுகிறான். இதை அறிந்த கமல் தன் மகனைக் கொன்றவர்களைத் பழிவாங்க நினைக்கிறார். பின் அடுத்தடுத்து நடக்கும் சுவாரஸ்யமே படத்தின் கதை. மேலும், அனைவரும் எதிர்பார்த்திருந்த கமலின் விக்ரம் படம் நான்கு ஆண்டுகளுக்கு பின் வெளிவந்து இருப்பதால் ரசிகர்கள் திரையரங்கில் கொண்டாடி வருகிறார்கள். படத்தின் திரைக்கதையில் உள்ள வேகமும், விறுவிறுப்பும் பார்வையாளர்களை பார்க்க தூண்டுகிறது.

- Advertisement -

விக்ரம் படம் பற்றிய தகவல்:

ஒவ்வொரு காட்சியிலும் கமலும், லோகேஷ் கனகராஜூம் மெனக்கெட்டு மாஸ் காட்டி இருக்கிறார்கள். விக்ரம் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் மாஸாக இருக்கிறது. அதோடு விக்ரம் படம் வெளிவந்து எல்லா இடங்களிலும் முதல் நாளே நல்ல வசூல் வேட்டை நடத்தி இருப்பதாக கூறப்படுகிறது. பிரபலங்கள் பலரும் விக்ரம் படத்தை பார்த்து பாராட்டி வருகின்றனர். மேலும், விக்ரம் படம் வெளியானதிலிருந்து அனைவர் மத்தியிலும் சூர்யாவின் கதாபாத்திரம் குறித்து அதிகமாக பேசப்பட்டு வருகிறது. படத்தின் கடைசி நிமிடத்தில் சூர்யா வந்திருந்தாலும் மிரட்டி சென்றிருக்கிறார்.

-விளம்பரம்-

விக்ரம் படம் குறித்து சூர்யா டீவ்ட்:

இது நாள் வரை படத்தில் தன்னுடைய கதாபாத்திரம் குறித்து வாய் திறக்காமல் இருந்த சூர்யா தற்போது முதன்முறையாக விக்ரம் படம் குறித்து ட்வீட் ஒன்று போட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, அன்புள்ள கமலஹாசன் அண்ணா. விக்ரம் படத்தில் உங்களுடன் நடித்ததன் மூலம் என் கனவு நிறைவேறி உள்ளது. இதை உருவாக்கி கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு நன்றி என்று பதிவிட்டிருக்கிறார்.

மன்னிப்பு கேட்ட கமல் :

சூர்யாவின் இந்த பதிவிற்கு பதில் அளித்துள்ள கமல் ‘சூர்யா தம்பி, இது உங்களுக்கு கொடுக்க வேண்டிய பல நாள் நிலுவை என்பது உங்களுக்கு தெரியும். ஏற்கனவே உங்களுக்கு இருக்கும் ரசிகர் கூட்டம் தற்போது அதிகப்படுத்துங்கள். உங்களுக்கு வாழ்த்துக்கள் தம்பி, சாரி தம்பி சார்’ என்று பதிவிட்டுள்ளார்.. அதே போல சூர்யாவின் கதாபாத்திரம் பாரட்டப்பட்டாலும் இந்த படத்தில் நடிக்க சூர்யா எந்த ஒரு சம்பளமும் பெறவில்லை என்றும் கூறப்படுகிறது.

சூர்யா-லோகேஷ் கூட்டணி:

அதுமட்டுமில்லாமல் இரும்புக்கை மாயாவி என்ற படத்தை சூர்யாவை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்க இருந்தது.ஆனால், அந்தப் படம் டிராப் ஆகிவிட்டது. மிகவும் வித்தியாசமான கதைக்களத்துடன் இந்த படத்தை இயக்க இருந்தார் லோகேஷ் கனகராஜ். இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ்ஆர் பிரபு தயாரிக்க இருந்தார். மாநகரம் படத்திற்கு பிறகு எழுதிய மிகப் பெரிய கதை. இந்த படத்திற்காக எட்டு மாதம் லோகேஷ் கனகராஜ் ஒர்கவுட் பண்ணி இருந்தார். மேலும், இந்த படத்திற்கான போஸ்டர் எல்லாம் வெளியாகி இருந்தது. பின்னர் ஒரு நாள் லோகேஷ், தயாரிப்பாளரிடம் சென்று இப்ப தான் மாநகரம் என்ற ஒரு குட்டி படம் பண்ணியிருக்கேன்.

படம் ட்ராப்பாக காரணம்:

இது ரொம்ப பெரிய படமாக இருக்கு. நான் தாங்குவேன்னா என்று எனக்கே தெரியவில்லை. இந்த படம் இயக்க முடியுமா? என்ற நம்பிக்கையும் இல்லை. கொஞ்சம் காலம் சென்ற பின் பண்ணிக்கலாம் என்று சொல்லி இந்த படம் டிராப் ஆனதற்கு முழுக்க முழுக்க நான் தான் காரணம் என்று லோகேஷ் கனகராஜ் நேர்காணலில் கூறியிருந்தார். தற்போது விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து சூர்யாவின் இரும்புக்கை மாயாவி படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement