இதுநாள் வரை சூர்யவம்சம் படத்தில் வந்த இந்த பையன் கனா காணும் காலங்கள் ராகவினு தான நெனச்சாய்ங்க ? அதான் இல்ல. அந்த குழந்தை இந்த ஜீ தமிழ் சீரியல் நடிகை தான்.

0
1233
nivashini
- Advertisement -

சூர்யவம்சம் படத்தை 90ஸ் ரசிகர்கள் நிச்சயம் மறக்க முடியாது. இந்த படத்தில் சரத்குமார் தேவயாணியின் மகனாக நடித்த சிறுவனையும் நிச்சயம் மறக்க முடியாது. ஆனால், உண்மையில் அது ஒரு பெண் குழந்தை என்பது பின்னரே பலருக்கும் தெரியவந்தது. அதே போல பலரும் அந்த குழந்தை கனா காணும் காலங்கள் தொடரில் நடித்த ராகவி கதாபாத்திரத்தில் நடித்த ஹேமா என்று தான் இது நாள் வரை நினைத்து கொண்டு இருந்தனர். ஆனால், உன்மையில் அந்த குழந்தை நான் தான் என்று சீரியல் நடிகை அளித்துள்ள பேட்டி பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

-விளம்பரம்-

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்த சீரியலில் ஒன்று நீதானே எந்தன் பொன்வசந்தம். இந்த தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. சமீபத்தில் தான் இந்த தொடர் முடிவடைந்தது. மேலும், இந்த தொடரில் மீரா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் நடிகை நிவாஷினி திவ்யா. இவர் சென்னையில் பிறந்து வளர்ந்தவர். தன்னுடைய படிப்பை முடித்துவிட்டு 2013 இல் சன் டிவியில் செல்லக்கிளி என்ற தொடரின் மூலம் தான் சின்னத்திரையில் அறிமுகமாகி இருந்தார்.

- Advertisement -

மூன்று வருடங்கள் பிரேக் :

இந்த தொடரின் மூலம் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனை அடுத்து யாழினி என்ற சீரியலில் நிவாஷினி திவ்யா நடித்தார். பிறகு இவர் மரகத வீணை என்ற தொடரில் நடித்து இருந்தார். இந்த சீரியலில் மூலம் இவருக்கு நல்ல பெயர் கிடைத்தது. இதனை தொடர்ந்து இவர் சின்னத்திரையில் வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு பிறகு மூன்று வருடங்கள் இவர் எந்த சீரியலிலும் நடிக்காமல் இருந்தார்.

இதையும் பாருங்க : அந்தரங்க புகைப்படங்கள், தனி நபருடன் வீடியோகாள் மூலம் சம்பாதித்து வரும் கிரண் – என்னடா இது விஜய், அஜித் பட நடிகைக்கு வந்த சோதனை.

-விளம்பரம்-

நிவாஷினி திவ்யா குறித்த தகவல்:

இது குறித்து பலரும் கேள்வி எழுப்பி இருந்தார்கள். பின் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜீ தமிழ் சீரியல் மூலம் நிவாஷினி திவ்யா ரீஎண்ட்ரி கொடுத்து இருந்தார். மேலும், இவர் நடிகை மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் இருக்கிறார். அதாவது எஸ்டெல் என்டர்டெய்னர் சார்பில் சேவியர் பிரிட்டோவின் நிறுவனமும், இவரும் இணைந்து தான் நீதானே எந்தன் பொன்வசந்தம் சீரியலை தயாரித்து இருந்தார்கள். தற்போது இவர் தேவையானி நடித்து வரும் புதுப்புது அர்த்தங்கள் தொடரின் நிர்வாகத் தயாரிப்பாளராகவும் இருக்கிறார்.

நிவாஷினி திவ்யா அளித்த பேட்டி:

இந்த நிலையில் சமீபத்தில் நடிகை நிவாசினி திவ்யா பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் கூறியிருந்தது, சின்ன வயதிலிருந்தே மீடியா எனக்கு பரிச்சயம் ஆகிவிட்டது. என் வாழ்கையில் எதார்த்தமாக அமைந்தது தான் இந்த துறை. குழந்தை நட்சத்திரமாக கிட்டத்தட்ட 50 படங்களில் நடித்திருக்கிறேன். சொல்லப்போனால் சூரிய வம்சம் படத்தில் வருகிற குழந்தை நான் தான். பல வருடமாகவே சூரிய வம்சம் படத்தில் வந்த குழந்தை கனா காணும் காலங்கள் தொடரில் நடித்த ராகவி என்று தான் பலரும் நினைத்துக் கொண்டிருந்தார்கள்.

சூரிய வம்சம் படத்தில் நடித்த குழந்தை:

ஆனால், நான் தான் சூரிய வம்சம் படத்தில் நடித்த குழந்தை. அப்படி மீடியாவில் இருந்ததினால் பிறந்து வளர்ந்த பிறகு அதிலேயே கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டேன். படிப்பு முடிந்ததும் பல சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்தேன். ஒரு ஆறு வருடம் கடினமாக முயற்சி பண்ணி தான் ஜீ தமிழில் தயாரிப்பாளராக ஆனேன். என் அப்பாவும், அம்மாவும் என் மிகப்பெரிய பலம். எனக்கு ஒரு அக்கா, ஒரு அண்ணன் இருக்கிறார்கள். அக்கா வெளிநாட்டில் குடும்பத்துடன் செட்டில் ஆகிவிட்டார்.

நடிப்பு குறித்து நிவாஷினி திவ்யா சொன்னது:

அண்ணன் விஸ்வா, அவர் தான் மீடியாவில் எனக்கு உதவியாக இருக்கிறார். தயாரிப்பாளர் ஆன பிறகு பலரும் நான் சீரியல்களில் நடிக்க மாட்டேன் என்று தவறாக புரிந்து கொண்டிருக்கிறார்கள். உண்மையில் அப்படி எல்லாம் இல்லை. எனக்கு புரோடக்சன் பிடிக்கும். ஆனாலும், அதை விட நடிக்கிறது ரொம்ப பிடிக்கும். நான் யார்கிட்டயும் இனி நான் தயாரிக்கிற தொடரை தவிர வேற தொடரில் நடிக்க மாட்டேன் என்றும் சொல்லவில்லை. அவங்களாகவே தவறாக புரிந்து கொண்டார்கள். வாய்ப்பு வந்தால் நடிப்பது நிச்சயம், நடிக்க தயார் என்று பல சுவாரசியமான விஷயங்களை பேசி இருந்தார்.

Advertisement