மூன்று முறை வந்த திருமண வாய்ப்பை தவறவிட்டேன்- திருமணம் செய்யாதது குறித்து முதல் முறையாக மனம் திறந்த சுஸ்மிதா சென்

0
457
susmithasen
- Advertisement -

திருமணம் செய்து கொள்ளாதது குறித்து முதன் முறையாக மனம் திறந்த சுஷ்மிதா சென் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோஷியல் மீடியாவில் பயங்கர வைரலாகி வருகிறது. பாலிவுட்டில் மிக பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர் சுஷ்மிதா சென். இவர் பெங்காலி குடும்பத்தை சேர்ந்தவர். இவர் ஹைதராபாத்தில் பிறந்தவர். இவருடைய தந்தை முன்னாள் இந்திய விமானப்படை கமாண்டர் ஆவார். தாயார் ஒரு பேஷன் கலைஞராகவும், நகை வடிவமைப்பாளராகவும் இருந்தவர். ஹைதராபாத்தில் பிறந்த சுஷ்மிதா சென் புதுடில்லியில் வளர்ந்தார்.

-விளம்பரம்-

இவர் விமானப்படை பொன்விழா கல்வி மையத்தில் கல்வி பயின்றார். பின் மைத்ரேயி கல்லூரியில் பட்டம் பெற்றவர். பிறகு சுஷ்மிதா சென் தன்னுடைய கேரியரை மாடலிங்கில் தொடங்கினார். மேலும், யுனிவர்சல் அழகி(பிரபஞ்ச அழகி) என்ற பட்டத்தை 1994 ஆம் ஆண்டு முதன் முதலாக இந்தியாவிற்கு வாங்கி தந்தவர் சுஷ்மிதா சென். அதற்கு முன்பு இவர் மிஸ் இந்தியா என்ற பட்டம் வென்றார். இப்போட்டியில் ஐஸ்வர்யா ராயைத் தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சுஸ்மிதா சென்னின் திரைப்பயணம்:

மேலும், இவர் தன்னுடைய 18 வயதில் அழகி பட்டம் பெற்றவர். இதற்கு பிறகு தான் இவர் சினிமா உலகில் நடிக்க ஆரம்பித்தார். இவர் 1996 ஆம் ஆண்டு தஸ்தக் என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த ரட்சகன் என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதற்கு பிறகு இவருக்கு தமிழில் படங்கள் சரியாக அமையவில்லை என்றவுடன் பாலிவுட் பக்கம் சென்று விட்டார். மேலும், பாலிவுட்டில் நடிகை சுஸ்மிதா சென் அவர்கள் நிறைய படங்களில் நடித்தார்.

சுஷ்மிதா சென் குழந்தைகள்:

பின் இவர் பல வருடங்களாக சினிமாவில் இருந்து விலகி விட்டார். பிறகு இவர் 2000ம் ஆண்டில் ரெனீ என்ற பெண் குழந்தையை தத்தெடுத்தார். அதன் பின் 2010 அன்று அலிசா என்ற குழந்தையை தத்தெடுத்து வளர்க்கிறார் என்பது குறிப்பிடதக்கது. கடைசியாக இவர் 2010 ஆம் ஆண்டு வெளிவந்த துள்க மில் காய (Dulha Mil Gaya) என்ற பாலிவுட் படத்தில் தான் நடித்து இருந்தார். பின் பத்து வருட இடைவெளிக்கு பிறகு 2020 ஆம் ஆண்டு டிஸ்னி ஹாட் ஸ்டார் தயாரிப்பில் வெளியான ஆர்யா என்ற வெப்சீரிஸ்ஸில் சுஸ்மிதா சென் நடித்தார்.

-விளம்பரம்-

சுஷ்மிதா சென் அளித்த பேட்டி:

ஆனால், இந்த படம் திரையில் வெளியாகக் கூடிய அளவிலான படங்கள் கிடையாது. மேலும், சுஷ்மிதா சென்னுக்கு திருமணம் ஆகவில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இந்நிலையில் திருமணம் செய்யாதது குறித்து மனம் திறந்து சுஷ்மிதா சென் கூறியிருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. அதாவது, சமீபத்தில் சுஷ்மிதா சென் அவர்கள் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று இருந்தார். அப்போது அதில் அவர் தன்னுடைய திருமணம் குறித்து கூறியிருந்தது, அதிர்ஷ்டவசமாக எனது வாழ்வில் நான் சில சுவாரசியமான ஆண்களை சந்தித்து உள்ளேன். ஆனால், அவர்களால் நான் ஏமாற்றம் அடைந்தேன்.

திருமணம் செய்யாதது குறித்து கூறியது:

இதன் காரணமாக நான் திருமணம் செய்து கொள்ளவில்லை. எனது குழந்தைகளுக்கு இதில் துளி அளவும் தொடர்பு இல்லை. என் வாழ்க்கையில் வந்து சென்ற நபர்களை எனது குழந்தைகள் இருவரும் திறந்த மனதுடன் ஏற்றுக் கொண்டனர். அவர்களுக்கும் மரியாதையும், அன்பையும் அளித்துள்ளனர். அதைப் பார்க்கவே மிகவும் அழகாக இருக்கும். மூன்று முறை நான் திருமணம் செய்து கொள்ளும் சூழல் என் வாழ்வில் உருவானது. மூன்று முறையும் கடவுள் என்னைக் காப்பாற்றினார். அவர்களுடன் நான் சந்தித்த சிக்கல்களை என்னால் வெளியில் செல்ல முடியாது. கடவுள் இந்த இரண்டு குழந்தைகளையும் பாதுகாத்து வருகிறார் என்று கூறியிருக்கிறார்.

Advertisement