உடல்நலக்குறைவால் டி ராஜேந்திரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் 80, 90 கால கட்டங்களில் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் டி ராஜேந்தர். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இவர் திரைப்பட நடிகர் மட்டும் இல்லாமல் திரைப்பட இயக்குனர், இசை கலைஞர், அரசியல்வாதி என பன்முகம் கொண்டவர். அதோடு டி ராஜேந்தர் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. அந்த அளவிற்கு பல திறமைகளைக் கொண்டவர்.
மேலும், டி ராஜேந்தர் அவர்கள் திரை உலகில் பல சாதனைகளை செய்து இருக்கிறார். அதிலும் இவருடைய படத்தில் அடுக்குமொழி வசனங்கள் நிறைய இடம் பெரும். அதோடு அடுக்குமொழி வசனம் பேசுவது இவரை விட்டால் வேறு யாருக்கும் வராது. அந்த அளவிற்கு அடுக்குமொழி வசனத்தில் தனித்துவம் பெற்றவர். இதனிடையே இவர் உஷா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள். அதில் மூத்த மகன் சிலம்பரசன், இலக்கியா, குறளரசன் ஆவார்.
டி ராஜேந்தர் மகன்:
மேலும், இவருடைய மூத்த மகன் சிலம்பரசனும் தமிழ் சினிமாவில் லிட்டில் சூப்பர் ஸ்டாராக தொடங்கி தற்போது புகழ் பெற்று வருகிறார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. ஆனால், சமீப காலமாக இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எதுவும் பெரிய அளவில் வெற்றி அடையவில்லை. பின் பெரிய போராட்டங்களுக்கு பிறகு, நீண்ட இடைவெளிக்கு பிறகு சிம்பு நடிப்பில் வெளிவந்த மாநாடு படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தது.
சிம்புவின் திரைப்பயணம்:
இந்த படத்தை வெங்கட்பிரபு இயக்கி இருந்தார். சுரேஷ் காமாட்சி படத்தை தயாரித்திருந்தார். மேலும், படத்தில் சிம்புவுடன் எஸ் ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன் உட்பட பல சூர்யா, நடித்து இருந்தார்கள். தற்போது சிம்பு அவர்கள் வெந்து தணிந்தது காடு உட்பட சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அதேபோல் டி. ராஜேந்திரன் அவர்கள் நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் சேதுபதி நடிப்பில் வெளி வந்த கவண் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றியும் பெற்றது.
டி ராஜேந்தரின் உடல் நிலை:
தற்போது இவர் ஒரு புதிய படத்தை இயக்கும் முயற்சியில் இறங்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. அதுமட்டுமில்லாமல் டி ராஜேந்திரன் அவர்கள் எப்போதுமே சுறுசுறுப்பாக இருப்பார். இந்த நிலையில் டி ராஜேந்தர் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கடந்த 4 நாட்களாக மருத்துவமனையில் டி ராஜேந்தர் அவர்கள் திடீரென உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
பிராத்தனை செய்யும் ரசிகர்கள்:
தற்போது அவர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் கூறி வருகின்றனர். ஆனாலும், மேல் மருத்துவ சிகிச்சைக்காக தனது தந்தையை நடிகர் சிம்பு சிங்கப்பூருக்கு அழைத்து செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போது இந்த தகவல் வெளியானதைத் தொடர்ந்து ரசிகர்கள், பிரபலங்கள் பலரும் டி ராஜேந்திரன் கூடிய விரைவில் குணமடைந்து வர வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகின்றனர்.