
“மண்டாடி” இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சூரி, படத்திற்காக தான் எதிர்கொண்ட கடினமான அனுபவங்கள் குறித்து உருக்கமாக பேசினார். குறிப்பாக இரண்டு மாதங்கள் கடலில் நடைபெற்ற படப்பிடிப்பு, தனது சினிமா பயணம் மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் அளித்த வாய்ப்பு குறித்து அவர் பகிர்ந்த கருத்துகள் கவனம் பெற்றன. பா.விஜய்யின் பேச்சால் சூரி கண்ணீர் விட்ட நெகிழ்ச்சியான தருணமும் விழாவில் இடம்பெற்றது.

