
‘சண்டைக்கோழி’ படத்தின் கதையை முதலில் நடிகர் விஜய்யிடம் இயக்குநர் லிங்குசாமி கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜ்கிரண் கதாபாத்திரம் மிகவும் முக்கியமாக இருப்பதாகவும், அதைத் தாண்டி ஹீரோவுக்கு பெரிய ஸ்கோப் இல்லை என்றும் கருதி விஜய் அந்தக் கதையை மறுத்ததாக கூறப்படுகிறது. பின்னர் விஷால் நடிப்பில் வெளியான இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. படத்தின் வெற்றிக்குப் பிறகு விஜய் தன்னை பாராட்டியதாகவும் இயக்குநர் லிங்குசாமி தெரிவித்துள்ளார்.

ரூ.4000 கோடி செலவு செய்தோம் என்று சொன்னீர்களே, சென்னையில் செய்தீர்களா? அல்லது சிங்கப்பூரில் செய்தீர்களா? என்று அதற்கு இப்போது வரை பதில் வரவில்லை - நடிகர் விஷால்

















