கொரோனா நிதி : தமன்னாவின் செயலால் கோபம் அடைந்த தமிழ் சினிமா தொழிலாளர்கள். வறுத்து எடுக்கும் நெட்டிசன்கள்.

0
3824
tamanna
- Advertisement -

தற்போது இந்தியாவில் கொரோனாவால் 18,985 பேர் பாதிக்கப்பட்டும், 603 பேர் உயிர் இழந்தும் உள்ளார்கள். இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வதால் நாடு முழுவதும் பிரதமர் மோடி அவர்கள் ஊரடங்கு உத்தரவை மே 3 ஆம் தேதி வரை நீட்டித்து உள்ளார். மக்கள் யாரும் வெளியில் வரக்கூடாது என்பதால் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்குகிறார்கள். பொது இடங்கள், கடைகள்,கோவில்கள், படப்பிடிப்பு எல்லாம் மூடப்பட்டு உள்ளது. மேலும், ஊரடங்கினால் வருமானம் இல்லாமல் ஏழை மக்கள், தினந்தோறும் கூலி வேலையும் செய்யும் மக்கள் என பல பேர் தவித்து வருகின்றனர்.

-விளம்பரம்-

படப்பிடிப்புகள் எல்லாம் மூடப்பட்டு உள்ளதால் திரைப்பட தொழிலாளர்கள் தங்களின் வாழ்வாதரத்திற்கே கஷ்டப்படும் நிலையில் உள்ளார்கள். இந்நிலையில் சினிமா தொழிலாளர்களுக்கு உதவ வேண்டும் என பெப்சி அமைப்பு நிதி திரட்டி வருகிறது. சினிமா தொழிலாளர்கள் சங்கத்தில் மொத்தம் 25 ஆயிரம் உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களுக்கு ரூ.3.75 கோடி தேவைப்படுகிறது என்பதால் நடிகர், நடிகைகள் அனைவரும் நிதி வழங்க வேண்டும் என்றும் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள் விடுத்து இருந்தார்.

- Advertisement -

இதனை அறிந்த பல நடிகர்கள் தங்களால் முடிந்த நிதி உதவிகளை வழங்கி வருகின்றனர். இதுவரை பெப்சி அமைப்புக்கு ரூ.2 கோடியே 45 லட்சம் நிதி வசூலாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் நடிகர்கள் மட்டும் இல்லாமல் சில நடிகைகளும் உதவிக்கரம் நீட்டி உள்ளார்கள். அதில் லேடி சூப்பர் ஸ்டார் நடிகை நயன்தாரா நிதி கொடுத்து உள்ளார். சில தினங்களுக்கு முன்பு நடிகை காஜல் அகர்வால் அவர்கள் தெலுங்கு சினிமா தொழிலாளர்களுக்கு ரூ.2 லட்சமும், தமிழ் சினிமா தொழிலாளர்களுக்கு ரூ.2 லட்சமும் நிதியாக வழங்கி உள்ளார்.

இந்நிலையில் நடிகை தமன்னாவின் செயல் தமிழ் சினிமா தொழிலாளர்கள் இடையே கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. நடிகை தமன்னா அவர்கள் தெலுங்கு சினிமா தொழிலாளர்களுக்கு மட்டும் ரூ.3 லட்சம் ரூபாயை நன்கொடையாக அளித்துள்ளார். ஆனால், தமிழ் சினிமா தொழிலாளர் சங்கத்துக்கு எந்த ஒரு நிதியையும் அளிக்கவில்லை. இதனால் பெப்சி தொழிற்சங்கத்தினருக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

-விளம்பரம்-

பொதுவாகவே நடிகை தமன்னா அவர்கள் தமிழ் மொழி படங்களில் தான் அதிகம் நடித்து உள்ளார். ஆனால், இவர் தெலுங்கு சினிமா தொழிலாளர்களுக்கு மட்டும் நிதி கொடுத்து விட்டு தமிழ் தொழிலாளர்களுக்கு நிதி கொடுக்காமல் புறக்கணித்து இருப்பது சரி இல்லை என்று கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து நெட்டிசன்கள் சோசியல் மீடியாவில் பல கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

Advertisement