தமிழ் சினிமா உலகில் 80 மற்றும் 90 காலகட்டங்களில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்தவர் நடிகர் லிவிங்ஸ்டன். நடிகர் லிவிங்ஸ்டன் அவர்கள் பல ஆண்டு காலமாக தமிழ் சினிமாவில் நடித்து ஆண்டு வருகிறார். இவர் 1982 ஆம் ஆண்டு டார்லிங் டார்லிங் என்ற படத்தில் நடித்து இருந்தார். அதோடு அந்த படத்தின் உதவி இயக்குனராகவும் லிவிங்ஸ்டன் பணியாற்றி இருந்தார். இவர் திரைப்பட நடிகர் மட்டும் இல்லாமல் திரைக்கதை எழுத்தாளராகவும் பணியாற்றி உள்ளார். பின் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த சுந்தரப் புருசன் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து இருந்தார்.
பின் தொடர்ந்து இவர் கேப்டன் பிரபாகரன், விரளுக்கேற்ற வீக்கம், உழைப்பாளி போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்தார். இவர் பெரும்பாலும் படங்களில் வில்லன் கதாபாத்திரத்திலும், குணச்சித்திர வேடத்திலும் தான் நடித்து உள்ளார். நடிகர் லிவிங்ஸ்டன் அவர்கள் ஜசின்தா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இவருக்கு ஜோவிதா மற்றும் ஜமீனா என இரண்டு பெண்கள் உள்ளனர். இந்த நிலையில் நடிகர் லிவிங்ஸ்டன் அவர்கள் முதன் முதலாக நடித்த படத்தின் புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. நடிகர் லிவிங்ஸ்டன்1982 ஆம் ஆண்டு கே பாக்யராஜ் இயக்கத்தில் வெளிவந்த டார்லிங் டார்லிங் டார்லிங் என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.
இந்த படத்தில் பாக்யராஜ், பூர்ணிமா, சுமன் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. இந்த படத்தில் லிவிங்ஸ்டன் அவர்கள் ஸ்டேஷன் மாஸ்டராக ஒருசில காட்சியில் நடித்து இருப்பார். இதனைத் தொடர்ந்து 1988 ஆம் ஆண்டு செந்தில்நாதன் இயக்கத்தில் வெளிவந்த பூந்தோட்டகாவல்காரன் என்ற படத்தின் மூலம் தான் லிவிங்ஸ்டன் அவர்கள் மிக நீளமான கதாபாத்திரத்தில் அதாவது முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்த படத்தில் விஜயகாந்த், ஆனந்த், வாணி விஸ்வநாத் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். தற்போது இந்த இரு படத்தின் புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. மேலும், நடிகர் லிவிங்ஸ்டன் அவர்கள் பூந்தோட்ட காவல்காரன் படத்தில் தான் அறிமுகம் என்று போடப்பட்டுள்ளது. ஆனால், நடிகர் லிவிங்ஸ்டன் டார்லிங் டார்லிங் படத்திலேயே நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது நடிகர் லிவிங்ஸ்டன் அவர்கள் தன்னுடைய மூத்த மகளை சினிமா உலகிற்கு அறிமுகப்படுத்த போகிறார். ஜோவிதா தற்போது ஒரு படத்தில் ஹீரோயினாக நடிக்க போகிறார். நடிகை அம்பிகாவின் மகன் தான் ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்தின் பெயர் கலாசல். இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இருப்பது அஸ்வின் மாதவன். இதை படத்தினை கலைத்தாய் பிலிம்ஸ் சார்பில் பி.சி சக்தி தயாரிக்கிறார். இந்த படத்தில் ராதாரவி, அம்பிகா, மதன் பாப், பானுசந்தர் என பலர் நடிக்கின்றனர். மக்களின் நம்பிக்கையை பயன்படுத்தி கார்ப்பரேட் நிறுவனங்கள் எப்படி மக்களை கொள்ளை அடிக்கிறது என்பது தான் கதை.