தூது விட்ட பிரபல இயக்குனர். அப்பா ஸ்தானத்தில் வைத்திருக்கிறேன் என்று பதிலளித்துள்ள தமிழ் நடிகை.

0
11523
1
- Advertisement -

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக திகழ்ந்து வரும் இரண்டு நடிகர்களையும் வைத்து இரண்டு ஹிட் படங்களை இயக்கியவர் இந்த பிரபல இயக்குனர். தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்த இவர் பின்னர் ஹீரோவாக களமிறங்கினர். சொல்லப்போனால் இயக்குனர் பாக்ராஜுக்கு பின்னர் இரட்டை அர்த்த வசனத்தை படத்தில் வைத்தது இவர் தான். அதிலும் இவரது படங்களில் கதாநாயகிகளை பற்றி வேண்டிய அவசியமே இல்லை. இவரது படங்கள் என்றாலே பல ஹீரோயின்கள் தெறித்து ஓடியும் இருக்கின்றனர்.

-விளம்பரம்-

தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்த இந்த சன் இயக்குனர் பின்னர் ஹீரோவாக களமிறங்கினர். அந்த படம் மாபெரும் ஹிட் அடையவே இயக்குனர் பணியை விட்டு முழு நேர கதநாகனாக களமிறங்கினார். ஆனால், அதன் பின்னர் இவர் நடித்த படங்கள் என்னவோ படு பிளாப் ஆனது. இடைப்பட்ட காலத்தில் அட்ரஸ் இல்லாமல் இருந்த இந்த சன் நடிகர், மேலும், தான் இயக்கிய உச்ச நட்சத்திர நடிகரின் படத்திலேயே வில்லனாக நடித்து அசத்தினார்.

- Advertisement -

இதனால் ரசிகர்கள் பலரும் நீங்கள் படம் இயக்குவதை நிறுத்தி விட்டு நடிகராகவே இருங்கள் என்று கூறி வருகின்றனர். ஆனால் இந்த சன் இயக்குனரோ படம் இயக்குவதில் தான் ஆர்வம் காட்டி வருகிறார். இவரது படங்கள் என்றாலே இவரது ஹீரோயின்களை படங்களில் வச்சி செய்து விடும், இந்த நடிகர் சமீபத்தில் நடித்த பேய் பெயரை டைட்டிலாக கொண்ட படத்தில் தான் அந்த பிரியமான நடிகையுடன் நடித்தார்.உடன் நடித்த போது இந்த சன் இயக்குனருக்கு அந்த நடிகை மீது ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த சன் இயக்குனரின் காதுகளில் திருமண சத்தம் கேட்க உடனே முடித்து விடலாம் என்று தனது ஆசையை அந்த பிரியமான நடிகையிடம் குறியுளளார்.

ஆனால் , அந்த பிரியமான நடிகையோ உங்களை அப்பா ஸ்தானத்தில் வைத்துளேன் என்று கூறி நடிகரின் திருமண ப்ரொபோசலை நிராகரித்து விட்டாராம். இருப்பினும் காலம் செல்வதற்குள் கல்யாணத்தை முடித்து விட வேண்டும் என்று தொடர்ந்து அந்த பிரியாமான நடிகைக்கு தூது விட்டுள்ளார். ஆனால், அவரோ சற்றும் பிடிக்குடுக்காமல் டிமிக்கி கொடுத்து வருகிறாராம். இதில் கூத்து என்னவெனில் ஏற்கனவே அந்த பிரியமான நடிகைக்கு காதலர் இருக்கிறார் என்று அணித்தனமான செய்திகள் எல்லாம் வெளியானது

-விளம்பரம்-
Advertisement