இன்னும் திருமணம் செய்துக் கொள்ளாத 90’ஸ் நடிகைகள் – ப்பா, இத்தனை நடிகைகளா ?

0
566
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் இன்னும் திருமணம் ஆகாத 80, 90 காலகட்ட நடிகைகளின் பட்டியல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

நக்மா:

தமிழ் சினிமாவில் 90 ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை நக்மா. இவர் பிரபல நடிகை ஜோதிகாவின் சகோதரி ஆவார். இவர் 2012 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியான காவலன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டார். அதிலும் பாட்ஷா படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு ஜோடியாக நக்மா நடித்திருந்தார்.

- Advertisement -

இந்தப்படம் மிகப்பெரிய ஹிட் ஆனதும் நக்மாவின் மார்க்கெட் எகிறியது. மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம், வங்காளி, போஜ்புரி, பஞ்சாபி, மராத்தி போன்ற பல மொழித் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். பின் சினிமா பட வாய்ப்புகள் இல்லாததால் நக்மா அரசியலில் குதித்து விட்டார். தற்போது ஒரு முக்கிய அரசியல் கட்சியில் பதவியில் இருக்கிறார். அதோடு நக்மா 48 வயதாகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகிறார்.

கௌசல்யா:

தமிழ் சினிமாவில் 90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் கௌசல்யா. இவர் விஜய், பிரசாந்த், முரளி, பிரபு, கார்த்திக் போன்ற பல பிரபலங்களின் படங்களில் நடித்திருக்கிறார். தற்போது இவர் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். தற்போது 43 வயதாகும் கௌசல்யாவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

கிரண் :

தமிழ் சினிமாவில் விக்ரம் நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான ‘ஜெமினி’ படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்து பிரபலமடைந்தவர் கிரண். அதன் பின்னர் இவர் விஜயகாந்த், கமலஹாசன், அஜித், பிரசாந்த் போன்ற பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து இருக்கிறார். பின் சிறிய இடைவெளிக்கு பிறகு கிரண் திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். தற்போது இவர் தனது பெயரில் சொந்தமாக ஆண்ட்ராய்டு app ஒன்றை துவங்கி அதில் தனது கவர்ச்சியான புகைப்பங்களை விற்று பணம் சம்பாதித்து வருகிறார். இவருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை.

சோபனா:

தென்னிந்திய சினிமா திரை உலகில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் சோபனா. இவர் மலையாள மொழி திரைப்படத்தின் மூலம் தான் சினிமாவிற்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து இவர் தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம், ஆங்கிலம் என பல மொழி படங்களில் நடித்து பட்டையை கிளப்பி இருந்தார். இவர் இதுவரை 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், சோபனா அவர்கள் நடிகை என்பதை விட புகழ்பெற்ற பரத நாட்டிய கலைஞர் ஆவார். இவர் தன்னுடைய பரதநாட்டியக் கலைக்காக பல்வேறு விருதுகளை வாங்கி இருக்கிறார். மேலும், 52 வயதாகும் இவர் திருமணம் செய்துக் கொள்ளாமல் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.

தபு:

தமிழில் வெளிவந்த காதல் தேசம், இருவர், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தவர் தபு. இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் மலையாளம், தெலுங்கு, ஹிந்தி போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். தற்போது இவர் குணச்சித்திர வேடங்களில் படத்தில் நடித்து வருகிறார். 52 வயதாகியும் தற்போது வரை இவர் திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்து வருகிறார்.

கோவை சரளா:

தமிழ் சினிமாவில் நகைச்சுவை ராணி ஆச்சி மனோரமாவுக்குப் பிறகு காமெடி இளவரசியாக ஜொலித்துக் கொண்டிருப்பவர் கோவை சரளா. இவர் தென்னிந்திய மொழிகளில் 800 படங்களுக்கும் மேல் நடித்து இருக்கிறார். ஆனால், இவர் இன்றும் ஓர் இளம் நடிகையைப்போல உற்சாகம் குறையாமல் வலம் வருகிறார். தன்னுடைய நகைச்சுவையால் பல ஆண்டு காலமாக ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். இவரும் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை.

கனகா :

தமிழ் சினிமா உலகில் 80, 90 காலகட்டங்களில் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தவர் நடிகை கனகா. இவர் ரஜினிகாந்த், பிரபு, கார்த்திக், மோகன்லால், மம்முட்டி, ஜெயராம் பிரபு, பல முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்து இருக்கிறார். பிறகு இவருக்கு வாய்ப்பு கிடைக்காததால் சினிமாவில் இருந்து விலகி விட்டார். இவருக்கு திருமணம் நடந்தாக கூறப்படுகிறது. ஆனால், அதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை. இவருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை.

Advertisement