500 படங்களுக்கு மேல் நடித்தும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காமெடி நடிகர் குள்ளமணி எப்படி இறந்தார் தெரியுமா ?

0
90815
kullamani
- Advertisement -

சினிமா உலகில் கொடி கட்டிப் பறந்தவர்கள் எல்லாம் தங்களுடைய கடைசி காலத்தில் அனாதையாக, யாரும் இல்லாத நிலையில் இறந்து உள்ளார்கள். இது சமீப காலமாகவே நீடித்து வருகிறது. மேலும், பல நடிகைகள், நடிகர்கள் எல்லோரும் இந்த மாதிரி கோர நிகழ்வுகளினால் தான் இறந்து உள்ளார்கள். அதிலும் சினிமாவில் படங்களில் துணை நடிகர்களாக நடிப்பவர்களின் நிலைமை தான் மிகவும் மோசமாக உள்ளது. அவர்களுக்கு சினிமாவிலும் பெரிய அளவு ஊதியம் கிடைப்பதில்லை, நிஜ வாழ்க்கையிலும் பெரிய அளவு மரியாதை கிடைப்பதில்லை. அந்த வகையில் மக்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டவர் தான் நடிகர் குள்ளமணி. இவர் தற்போது அனாதையாக இறந்து உள்ளார். இந்த நிகழ்வு சமூக வலைத்தளங்களில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

-விளம்பரம்-
Image result for actor kullamani death

- Advertisement -

நடிகர் குள்ளமணி அவர்கள் கரகாட்டக்காரன் படத்தில் நான் வியாபாரிங்க என்று ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார். இருந்தாலும் இவர் மக்கள் மத்தியில் அறியப்பட்டார். அது மட்டும் இல்லாமல் நடிகர் குள்ளமணி அவர்கள் எம்ஜிஆர் காலத்திலிருந்தே பல படங்களில் நடித்து வருகிறார். இவர் இதுவரை 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார். மேலும், நடிகர் குள்ளமணி அவர்கள் ரஜினி, கமல் உட்பட பல முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடித்து உள்ளார். அதுமட்டும் இல்லாமல் இவர் நடித்த படங்களில் இருந்து இவருக்கு சேர வேண்டிய சம்பள பாக்கியும் இன்னும் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

அந்த பணம் கிடைத்து இருந்தால் கூட அவருடைய வாழ்க்கை நன்றாக இருந்திருக்கலாம் என்று உடன் இருந்தவர்கள் கூறுகிறார்கள். கடந்த 2013-ம் ஆண்டு நடிகர் குள்ளமணி அவர்களுக்கு கிட்னி பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் இவரை சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்து உள்ளார்கள். பின் சிகிச்சை பலனின்றி அரசு மருத்துவமனையிலேயே அனாதை போல நடிகர் குள்ளமணி இறந்து கிடந்து உள்ளார். அப்போது இவரை நேரில் சென்று பார்த்த ஒரே நடிகர் சரத்குமார் மட்டும் தான் என்று கூறப்படுகிறது. ஆனால், இவருடைய மறைவுக்கு கூட சினிமாவில் சில முக்கிய பிரபலங்கள் எட்டி கூட பார்க்கவில்லை என்கின்றனர். இவருக்கு ராணி என்ற மனைவியும், மகாலட்சுமி என்ற ஒரு மகளும் உள்ளனர்.

-விளம்பரம்-
குள்ளமணியை மருத்துவமனையில் சந்தித்த சரத்குமார்

சினிமா உலகில் ஐந்து படங்களில் நடித்தாலே கோடிக் கணக்கில் பணத்தில் பிரளுவார்கள் நடிகர்கள். அதே சினிமா உலகில் 500 படங்களுக்கு மேல் நடித்து கடைசி வரை சிரமப்படுபவர்களும் உள்ளார்கள். இது மிகப் பெரிய கொடுமையான விஷயம். சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர்கள் மட்டும் தான் தங்களுடைய வாழ்க்கையில் நன்றாக வாழ்ந்து வருகிறார்கள். படங்களில் துணை கதாபாத்திரங்கள், சின்ன சின்ன வேடங்களில் வருபவர்கள், ஸ்டண்ட் மாஸ்டர்கள் என பல பேர் பெருமைக்காக தான் இவர்கள் படங்களில் நடித்து உள்ளார்கள். ஆனால், உண்மையில் இவருடைய வாழ்க்கைளெல்லாம் மிகவும் கொடூரமானதும், கோரமானதும் ஆகும்.

Advertisement