சூப்பர் ஸ்டாரின் உடல்நிலையை குறித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நேரில் சென்று விசாரித்த செய்தி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக கொடிக்கட்டி பறந்து கொண்டிருப்பவர் ரஜினிகாந்த். இவருடைய படங்கள் என்றாலே ரசிகர்கள் கூட்டம் திரையரங்களில் கடல் போன்று அலைமோதும். சில தினங்களுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் தாதா சாகிப் பால்கே என்று விருது வழங்கி இருந்தார்கள். இதுகுறித்து ரசிகர்களும் பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து இருந்தார்கள்.
இந்தநிலையில் ரஜினிகாந்த் அவர்கள் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் சோசியல் மீடியாவில் வைரலானது. இதனையடுத்து ரசிகர்களும் பிரபலங்களும் அவருடைய உடல்நலம் குறித்து விசாரித்து வருகின்றனர். ரஜினிகாந்த் அவர்கள் கடந்த வியாழக்கிழமை அன்று உடல்நலக்குறைவால் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ரஜினிகாந்தை பரிசோதித்த மருத்துவர்கள் ரஜினிகாந்த் கழுத்து பகுதியில் ரத்த நாளங்களில் பிரச்சனை இருப்பதால் நேற்று முன்தினம் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப் பட்டிருந்தது.
அறுவை சிகிச்சைக்கு பிறகு இவருக்கு மீண்டும் பரிசோதனை செய்தார்கள். அப்போது ரஜினியின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் தற்போது ரஜினியின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்து இருந்தார்கள். இதனையடுத்து பிரபலங்களும், ரசிகர்களும் ரஜினிகாந்த் குணமடைந்து வரவேண்டுமென்று பிரார்த்தனை செய்து வருகிறார்கள். இந்த நிலையில் ரஜினிகாந்தின் உடல்நிலை எப்படி உள்ளது என்பதை விசாரிப்பதற்காக தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் காவிரி மருத்துவமனைக்கு சென்று உள்ளார்.
அப்போது அங்குள்ள மருத்துவர்கள் மற்றும் ரஜினிகாந்தின் உறவினர்களை நேரில் சென்று கடந்த 3 நாட்களாக ரஜினிகாந்துக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்தும் அவருடைய உடல்நிலை குறித்தும் கேட்டு அறிந்து உள்ளார். மேலும், மருத்துவ உதவிகள் தேவைப்பட்டால் அதற்கு அரசு உதவ தயாராக இருக்கிறது என்றும் முதலமைச்சர் ரஜினிகாந்தின் உறவினர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளார். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. ரஜினிகாந்தை நேரில் சந்திப்பதற்கு முன்பே முதலமைச்சர் அவர்கள் டுவிட்டரில் ரஜினிகாந்த் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ரஜினிகாந்த் அவர்கள் அண்ணாத்த என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ரஜினிகாந்துடன் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சதீஸ் உட்பட பல நடிகர்கள் நடித்துள்ளார்கள். இந்த படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளிவரப்போகிறது. ரசிகர்கள் அனைவரும் ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்திற்கு ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் இவருடைய உடல்நிலை சரியில்லாமல் ஆனதை குறித்து அனைவரும் வருத்தத்தில் உள்ளார்கள்.