விழுப்புரத்தை சேர்ந்த 4 பேரை கூட சில தினங்களுக்கு முன்னர் கேரளா காவல்துறை கைதுசெய்தது இதனால் தமிழ் சினிமா துறையும் ,ரசிகர்களும் சற்று நிம்மதி அடைந்தனர். இருப்பினும் கைது செய்யப்பட்டது தமிழ் ராக்கர்ஸ் அட்மின்கள் மட்டுமே தவிர அதனை நடத்துபவர் இன்னும் யார் என்று கூட தெரியவில்லை.
இந்நிலையில் தமிழ் ராக்கர்ஸ் பக்கத்தை தங்களால் முழுவதுமாக கட்டுப்படுத்த முடியாது என்று சில ஹக்கர்ஸ்கள் கூறியுள்ளனர்.ஏணெனில் தமிழ் ராக்கர்ஸ் வலைதளத்தை முடிக்கினால் அவர்கள் தங்களது டொமைன் பெயரை மாற்றி விடுகின்றனர் உதாரணமாக ஒருவேளை தமிழ் ராக்கர்ஸ் நெட் என்ற வலைதளத்தை முடக்கினால் அவர்கள் தமிழ்ராக்கர்ஸ் ஜிஆர் , தமிழ்ராக்கர்ஸ்.எல் ஏ போன்ற புதிய வலைதள பெயர்களை உருவாக்கிவிடுகின்றனர். இதனால் தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்தை ஒரு சில நாட்கள் மட்டுமே முடக்கமுடியும் என்று கூறியுள்ளனர்.




