பிரபல நடன இயக்குனர் கணேஷ் மீது பாலியல் புகார் அளித்த தீராத விளையாட்டு பிள்ளை பட நடிகை.

0
2301
- Advertisement -

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருகிறார் நடிகை தனுஸ்ரீ தத்தா. இவர் திரைப்பட நடிகைகள் மட்டும் இல்லாமல் மாடலும் ஆவார். இவர் 2004 ஆம் ஆண்டு 20 வயதிலேயே பெமினா மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை பெற்றவர். 2018 தமிழில் இவர் தீராத விளையாட்டு பிள்ளை என்ற படத்தில் நடித்து இருந்தார். அதற்கு பிறகு இவர் தமிழில் படங்களில் நடிக்கவில்லை. இவர் அதிக கவனம் பாலிவுட்டில் தான் செலுத்தி வந்தார். இந்நிலையில் நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யா அவர்கள் தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்வதாக காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார் நடிகை தனுஸ்ரீ தத்தா.

-விளம்பரம்-
Image result for Thanushree Dutta ganesh aaharya

- Advertisement -

தற்போது இந்த தகவல் பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாலிவுட்டில் முன்னணி நடன இயக்குனராக இருப்பவர் கணேஷ் ஆச்சார்யா. இவர் தமிழில் நடிகர் ஜீவா– ஸ்ரேயா நடிப்பில் வெளியான ரவுத்திரம் என்ற படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துஇருந்தார். இவர் நடன இயக்குனர் மட்டும் இல்லாமல் திரைப்பட நடிகர், இயக்குனர் என பன்முகங்கள் கொண்டவர். மேலும், இவர் பாலிவுட்டில் சில படங்களையும் இயக்கி உள்ளார். இந்நிலையில் நடிகர் கணேஷ் ஆச்சார்யா மீது நடிகைதனுஸ்ரீ தத்தா அவர்கள் தன்னை ஆபாச வீடியோவை பார்க்க சொல்லி வற்புறுத்தியதாக மராட்டிய பெண்கள் ஆணையம் மற்றும் அம்போலி காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.

இதற்கு முன் ஒருமுறை 2008 ஆம் ஆண்டில் நடந்த படப்பிடிப்பின்போது தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகர் நானா படேகர் மீது நடிகை தனுஸ்ரீ த்ததா புகார் கூறியுள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தற்போது தான் அடங்கியிருந்தது. இந்த நிலையில் மீண்டும் நடிகை தனுஸ்ரீ தத்தாவுக்கு, நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்ய பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் அளித்து உள்ளார். அவர் அளித்த புகாரில் கூறி இருப்பது, நடன இயக்குனர் தனது வருமானத்தில் இருந்து கமிஷன் கேட்டதாகவும், ஆபாச வீடியோக்களை பார்த்து கட்டாய படுத்தியதாகவும் கூறி உள்ளார்.

-விளம்பரம்-
Related image

இதற்கு முன்னதாகவே நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யா அவர்கள் தன்னைப் பற்றி பல வதந்திகளை சோசியல் மீடியாவில் பரப்பியதாகவும், சினிமா உலகில் என்னுடைய பெயரை கெடுத்ததாகவும் நடிகை தனுஸ்ரீ தத்தா கடுமையாக குற்றம் சாட்டி இருந்தார். மீண்டும் மூத்த நடன இயக்குனர் சரோஜ் கான், கணேஷ் ஆச்சார்யா இருவரும் தனது நடன கலைஞர்களை சுயலாபத்திற்காக பயன்படுத்துகிறார்கள். சினிமா டான்ஸ் அசோசியேசனில் என்னை கேவலப்படுத்துகிறார்கள் என்று புகார் அளித்து உள்ளார்.
மேலும், நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யா அவர்களால் தன்னுடைய திரைவாழ்க்கை வேதனைக்குரியதாக மாறி விட்டதாக குற்றம் சாட்டி இருந்தார் நடிகை தனுஸ்ரீ தத்தா.

Advertisement