ரோஜாவின் அந்த வீடியோவின் ஒரிஜினலையும் வெளியிடுவோம் – மகளீர் அணி தலைவி எச்சரிக்கை.

0
2904
Roja
- Advertisement -

ரோஜாவின் ஒரிஜினல் ஆபாச படத்தை வெளியிடுவோம் என்று தெலுங்கு தேசம் கட்சியின் மகளிர் அணி தலைவி அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ரோஜா ஆபாச படத்தில் நடித்தார் என்று தெலுங்கு தேசம் கட்சியின் சட்டசபையில் அவருடைய சிடிகள் காட்டப்பட்டிருந்தது. இது குறித்து தேசம் கட்சியின் முன்னாள் அமைச்சரும் மூத்த தலைவருமான பண்டாரு சத்திய நாராயண மூர்த்தி அவர்கள் ரோஜாவை குறித்து மிக மோசமாக பேசியிருந்தார்.

-விளம்பரம்-

இதனால் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதனை அடுத்து நடிகை ரோஜா அவர்கள் தன்னுடைய வீட்டில் பேட்டி அளித்திருக்கிறார். அதில் அவர், நான் படத்தில் நிர்வாணமாக நடித்ததாக கூறி என்னை சித்திரவதை செய்கின்றனர். சட்டசபையிலும் சீடிக்கள் எல்லாம் காட்டப்பட்டது. ஆனால், அந்த சீடியில் இருப்பது நான் தான் என்று நிரூபிக்கப்படவில்லை. பெண்கள் தங்கள் விருப்பப்படி வாழ வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறி இருக்கிறது. என் குணத்தை மதிப்பிட நீங்கள் யார்? தெலுங்கு தேசம் கட்சி பெண்களை விளையாட்டு பொருளாக நடத்துகிறது.

- Advertisement -

ரோஜா அளித்த பேட்டி:

உங்கள் வீட்டில் உள்ள பெண்களை பற்றி இப்படி பேசினால் ஏற்றுக்கொள்வீர்களா? முன்னாள் அமைச்சர்கள் காந்தா ஸ்ரீனிவாஸ், அய்யண்ணபத்ரா, சந்திரபாபு நாயுடு, லோகேஷ் ஆகியோர் இது தொடர்பாக கண்டிக்காதது ஏன்? தெலுங்கு தேசம் கட்சி ஒரு திரையுலக பிரமுகரால் நிறுவப்பட்ட கட்சி. பண்டாரு சத்தியநாராயணனின் பேச்சை கேட்டு அவருடைய மனைவியே அறைந்திருக்க வேண்டும். லோகேஷ் வெட்கமின்றி அதற்கு டீவ்ட் செய்கிறார். சந்திரபாபு நாயுடு என்னை பிரச்சாரத்திற்கு அழைத்தது ஏன்? நான் கெட்டவள் என்றால் என்னை ஏன் கட்சியில் சேர்த்தார்? என்னை அயர்ன் லெக் என்று கேலி செய்தார்கள்.

தெலுங்கு தேசம் கட்சி குறித்து சொன்னது:

நான் உங்கள் கட்சியில் இருக்கும்போது நல்லவராகவும் வேறு கட்சியிலிருக்கும் போது கெட்டவராகவும் எப்படி இருக்க முடியும். பண்டாரு சத்தியநாராயண மூர்த்தி என்னைப் பற்றி தவறாக பேசியது என்னை ரொம்ப புண்படுத்திருக்கிறது. தப்பை கேள்வி கேட்டால் என்னை தாக்கி பேசுவார்களா? தெலுங்கு தேசம் கட்சியில் பெண்களுக்கு மரியாதை இல்லை. தெலுங்கு தேசம் கட்சியால் அரசியல் ரீதியாக வளர முடியாது. பண்டாரு சத்தியநாராயண மூர்த்தி மீது நான் மான நஷ்ட வழக்கு தொடர்வேன் என்று கூறி இருந்தார்.

-விளம்பரம்-

கைதான பண்டாரு சத்தியநாராயண மூர்த்தி:

இப்படி அமைச்சர் ரோஜா பேசியிருந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து போலீசார் அவதூறாக பேசிய வழக்கில் பண்டாரு சத்தியநாராயண மூர்த்தியை கைது செய்திருக்கின்றனர். இந்த நிலையில் விசாகப்பட்டினத்தில் உள்ள தெலுங்கு தேசம் கட்சி அலுவலகத்தில் மாநில மகளிர் அணி தலைவி வாங்கலபுடி அனிதா பேட்டி அளித்திருக்கிறார். அதில் அவர், தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவின் மனைவி புவனேஸ்வரி மற்றும் அவருடைய மருமகள் பிராமணியை ரோஜா தரக்குறைவான வார்த்தைகளில் பேசி இருந்தார்.

மகளிர் அணி தலைவி வாங்கலபுடி அனிதா பேட்டி

அவர் மீது காவல்துறை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? மாநிலத்தில் அமைச்சர்கள் மட்டும்தான் பெண்களா? மற்றவர்கள் பெண்கள் இல்லையா? ஏற்கனவே சட்டசபையில் ரோஜா பேசிய வார்த்தைகளை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். பண்டாரு சத்தியநாராயண மூர்த்தி பேசியதை மறைக்க ரோஜா கண்ணீர் விட்டு பேட்டி அளித்திருக்கிறார். ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் ரோஜாவை பற்றி பேசியதால் 200 போலீசார் பண்டாரு சத்தியநாராயண மூர்த்தியின் வீட்டிற்கு வந்து கைது செய்தது. ஆனால், தெலுங்கு பெண்கள் மீது தொடர்ந்து தகாத கருத்துக்களை தெரிவித்து வருபவர்கள் மீது புகார் வந்தாலுமே காவல்துறை நடவடிக்கை எடுப்பதில்லை. அமைச்சர் ரோஜா பெண்களிடம் அனுதாபம் பெறுவதற்காக ஒரு நாள் அழுதார். ஆனால், நாலரை ஆண்டுகளாக அனைத்து பெண்களும் கதறி அழுகிறார்கள். அமைச்சர் ரோஜா படத்தின் டிரைலர் மட்டும்தான் தற்போது ஓடிக்கொண்டிருக்கிறது. எதிர்காலத்தில் ஒரிஜினல் படத்தையே வெளியிடுவோம் என்று ஆவேசமாக பேசியிருக்கிறார்.

Advertisement