அல்லு அர்ஜுனுக்கு கை, கால் போய் விட்டதா? எல்லா நடிகர்களும் ஆறுதல் சொல்கிறார்கள் – கடுமையாக தாக்கிய தெலங்கானா முதலமைச்சர்

0
225
- Advertisement -

அல்லு அர்ஜுனை விமர்சித்து தெலுங்கானா முதலமைச்சர் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த சில வாரங்களாக சோசியல் மீடியா முழுவதும் அல்லு அர்ஜுன் குறித்த செய்தி தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. தெலுங்கில் பிரபல நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘புஷ்பா 2’ படம் மிக பெரிய அளவில் வரவேற்பை பெற்று இருந்தது. ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் படம் வெளியாவதற்கு முன்தினம் திரையிடப்பட்டது. அப்போது படத்தின் கதாநாயகன் அல்லு அர்ஜுன் அந்த திரையரங்கிற்கு வர இருப்பதாக தகவல் தெரிந்தவுடன் அங்கு சுமார் ஒரு லட்சத்திற்கு மேற்பட்டோர் கூடி இருந்தார்கள்.

-விளம்பரம்-

பின் ரசிகர்கள் அல்லு அர்ஜுனை பார்க்க திரையரங்கிற்குள் முந்தி அடித்துக்கொண்டு நுழைந்திருந்தார்கள். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில், ஏராளமானோர் மூச்சு திணறி மயங்கி விழுந்திருந்தார்கள். அந்த நெரிசலில் சிக்கி, சுமார் 35 வயது மதிக்கத்தக்க ரேவதி என்ற பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். படுகாயம் அடைந்த அவரது மகனும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று இருந்தார். இதை அடுத்து உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், சந்தியா திரையரங்கம், நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் அவரது பாதுகாப்பு குழு மீது போலீசார் இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்திருந்தார்கள்.

- Advertisement -

அல்லு அர்ஜுன் கைது:

இந்த சம்பவத்தை தொடர்ந்து, நடிகர் அல்லு அர்ஜுன் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு ரூபாய் 25 லட்சம் இழப்பீடு தொகையை கொடுப்பதாக அறிவித்திருந்தார். ரேவதி உயிரிழந்த விவகாரத்தில் தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி தெலுங்கானா உயர் நீதிமன்றத்தில் அல்லு அர்ஜுன் மனு தாக்கல் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இருந்தும், கடந்த வாரம் அல்லு அர்ஜுனை அவரது வீட்டில் வைத்து போலீஸ் கைது அவரை காவல் நிலையம் அழைத்து சென்று இருந்தார்கள். அவருடன் சந்தியா திரையரங்க உரிமையாளர் மற்றும் மேலாளர் இருவரும் கைது செய்யப்பட்டார்கள். இந்த வழக்கு தொடர்பாக அல்லு அர்ஜுனை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க விதிக்கப்பட்டிருந்தது.

தெலங்கானா முதலமைச்சர் பேட்டி:

இதை அடுத்து அல்லு அர்ஜுனுக்கு இடைக்கால ஜாமின் விதிக்கப்பட்டு இருந்தது. மேலும், அல்லு அர்ஜுனின் இந்தக் கைது நியாயமற்றது என்று கண்டித்து திரைப்பிரபலங்கள், ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் உள்ளிட்ட பலரும் அல்லு அர்ஜுனுக்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். இதை அடுத்து சிகிச்சை பெற்று வந்த ஒன்பது வயது சிறுவன் தேஜாவும் மூளைச்சாவு பாதிக்கப்பட்டு கோமாவில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் சோசியல் மீடியாவில் மிகப்பெரிய அளவில் பூதாகரமாக வெடித்து கொண்டு இருக்கிறது. இந்நிலையில் இது தொடர்பாக தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, அல்லு அர்ஜுன் செய்தது மனிதத் தன்மையற்ற, பொறுப்பற்ற செயல். சந்தியா திரையரங்கிற்கு அல்லு அர்ஜுன் வந்தால் கூட்டம் கூடும் என்பதாலே காவல்துறையினர் அவருக்கு அனுமதி தர மறுத்திருந்தார்கள். இருந்துமே அவர் படம் பார்க்க வந்திருந்தார்.

-விளம்பரம்-

அல்லு அர்ஜுன் செய்தது:

அதுவும் கார் கதவு திறந்து ரோட் ஷோ காட்டிக் கொண்டு வந்திருந்தார். கூட்ட நெரிசல் அதிகமான உடனே ஏசிபி அவரை வெளியே போகுமாறு சொன்னார். அதற்கு அல்லு அர்ஜுன் படம் முடிந்தவுடன் போவதாக சொன்னார். உடனே டிசிபி, நீங்கள் நீங்கள் போகவில்லை என்றால் கூட்ட நெரிசலில் பெரிய பிரச்சனை ஏற்படும். ஏற்கனவே ரெண்டு பேர் சிக்கி மோசமான நிலையில் இருக்கிறார்கள். உங்களை கைது செய்ய வாய்ப்பு இருக்கிறது என்று சொன்னவுடனே அல்லு அர்ஜுன் கிளம்பினார். ஆனால், வெளியே போகும் போது கூட ரோட் ஷோ காண்பித்து கொண்டு தான் போகிறார். அவருக்கு பாதுகாப்பு கொடுத்த பவுன்சர்கள் தான் ரசிகர்களின் கூட்டத்தை தள்ளி இருந்தார்கள். இந்த கூட்டத்தில் தான் ஒரு பெண் அநியாயமாக உயிரிழந்திருக்கிறார். 9 வயது சிறுவன் கோமாவில் இருக்கிறான். இது வருத்தத்துக்குரிய ஒன்று. இந்த வழக்கில் திரையரங்க உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டார் . ஆனால், சில மணி நேரத்திலேயே அவர் சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்து விட்டார்.

அல்லு அர்ஜூன் மீதான குற்றச்சாட்டு:

நடிகர்கள், பிரபலங்கள் பலருமே அல்லு அர்ஜுனுக்கு தான் ஆதரவு தெரிவித்தார்கள். யாருமே பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தை நேரில் சென்று கூட பார்க்கவில்லை. விபத்தில் கை,கால் போன மாதிரி அல்லு அர்ஜுனை நேரில் சென்று நலம் விசாரித்து வருகிறார்கள். அல்லு அர்ஜுன் கூட பாதிக்கப்பட்ட குடும்பத்தை நேரில் சென்று பார்க்கவில்லை. இதுதான் உங்களுடைய மனிதமா? அல்லு அர்ஜுன் செய்தது மனித தன்மையற்ற செயல். அவர் அதற்கு வருந்த வேண்டும். இந்த சம்பவம் அவருக்கு மட்டுமில்லை பிரபல நட்சத்திரங்கள் அனைவருக்கும் ஒரு நல்ல பாடமாக இருக்கட்டும். இனி திரையரங்களில் ஸ்பெஷல் ஷோவிற்கு அரசு அனுமதி வழங்கவே கூடாது. அதிக விலை டிக்கெட்டுகள் விற்பதும் தடுக்க வேண்டும். திரை துறை விவகாரத்தில் ஒரு சில நடவடிக்கைகள் அதிரடியாக எடுக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்.

Advertisement