படிப்பு வேணாம்னு சொல்லும் வனிதா மகள் கலியபெருமாளின்  பேச்சை ஒருமுறை கேட்கனும் – வெளுத்து வாங்கிய டெலிபோன் ராஜ்.

0
507
BiggBoss
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியையும், கமலையும் நடிகர் டெலிபோன் ராஜ் வெளுத்து வாங்கி இருக்கும் தகவல் தான் தற்போது வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பல காமெடி நடிகர்கள் வந்தாலும் சிலர் மட்டுமே இன்றும் ரசிகர்கள் மனதிலும் அவர்கள் செய்த காமெடி மீம்ஸ் ரூபத்திலும் சோசியல் மீடியாவில் வளம் வருகின்றன. அப்படி “அண்ணனுக்கு ஒரு ஊத்தப்பம்” என்ற வசனத்தின் மூலம் பிரபலமானவர் தான் “டெலிபோன் ராஜ்”.

-விளம்பரம்-
telephoneraj

இவர் பெரும்பாலும் வடிவேலு குழுவுடன் இணைந்து தான் படத்தில் நடித்திருக்கிறார். அதோடு இவர் முன்னால் டெலிகாம் பணியாளரும் ஆவார். இவர் கிட்டதட்ட 2000திற்க்கும் மேற்பட்ட நாடகங்கள், 50க்கும் மேற்பட்ட சிரியல்கள், 200க்கும் மேற்பட்ட படங்கள் என திரையுலகத்தில் பயணித்து இருக்கிறார். இருந்தாலும், இவருக்கான சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை. தற்போது வாய்ப்பு தேடி டெலிபோன் ராஜ் அலைந்து கொண்டிருக்கிறார்.

- Advertisement -

டெலிபோன்ராஜ் பேட்டி:

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் டெலிபோன்ராஜ் கூறி இருப்பது, சினிமாவில் வடிவேலு காமெடி செய்கிறார் என்றால் பிக் பாஸ் வீட்டில் கமல் சார் காமெடி செய்கிறார். அவரை உலகநாயகன் என்று எல்லோரும் பெருமையாக சொல்கிறார்கள். ஆனால், அவர் செய்யக்கூடிய நிகழ்ச்சியா இது! பணத்திற்காக அவர் இந்த நிகழ்ச்சியை செய்து கொண்டிருக்கிறார். ஜி பி முத்து கெட்ட வார்த்தைகளை பேசி சோசியல் மீடியாவில் பிரபலமானார். அவரை உலகநாயகன் கொண்டாடுகிறார்.

பிக் பாஸ் என்றால் என்ன? ஒரு குடும்பத்தில் நடக்கும் விஷயங்களை எட்டிப் பார்ப்பது. ஆக, இது ஒரு கேடுகெட்ட நிகழ்ச்சி. இதில் பணத்திற்காக உலக நாயகன் இவ்வளவு கீழ்த்தரமாக இறங்கி செல்ல வேண்டுமா? உண்மையை சொல்ல வேண்டுமென்றால் இது மனதிற்கு கஷ்டமாகத்தான் இருக்கிறது. அந்த நிகழ்ச்சியில் தேர்ந்தெடுக்கப்படும் போட்டியாளர்களை பொறுத்தவரை ஒரு பெண் அழகாக இருக்கிறாரா? நல்ல காரசாரமாக பேசுகிறாரா? என்பதை பார்க்கிறார்கள். உடனே அவரை போட்டியாளராக தேர்ந்தெடுத்து பிக் பாஸ் வீட்டுக்குள் போட்டு விடுகிறார்கள்.

-விளம்பரம்-

சொல்லப்போனால் அது செக்ஸ்படம் பார்ப்பது போல தான். இந்த பெண்களை காதலிக்கும் நல்ல கட்டு மஸ்தான் ஆண்களை பார்த்து உள்ளே களம் இறங்குகிறார்கள். மேலும், பவா செல்லதுரை எப்பேற்பட்ட ஆள். அவர் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்று இனிமேல் இங்கு ஒரு நிமிடம் கூட தாக்குப் பிடிக்க முடியாது என்று வெளியே ஓடி வந்து விட்டார். பிக் பாஸ் வீட்டிற்கு என்னை அழைத்தால் நிச்சயமாக நான் செல்வேன். ஆனால், உள்ளே செல்லும் நான் நோண்டி நொங்கெடுத்து விட்டு தான் வெளியே வருவேன்.

இப்போது பிக் பாஸ் வீட்டிற்கு சென்றிருக்கும் வனிதாவின் மகளான ஜோவிகா, நாம் மேலே வருவதற்கு படிப்பு தேவையில்லை என்று சொல்கிறார். அவர் கலிய பெருமாளின் பேச்சை ஒரு முறை கேட்க வேண்டும். அப்போதுதான் கல்வியின் முக்கியத்துவத்தை பற்றி நன்றாகத் தெரியும். மைக் கிடைக்கிறது என்று எது வேண்டுமானாலும் பேசி விடக்கூடாது என்று பிக் பாஸ் நிகழ்ச்சியையும், கமலையும் வெளுத்து வாங்கி பேசி இருக்கிறார்.

Advertisement