நாங்க நசுக்கப்படுகிறோம் என சொல்லி ஜாதி பிரச்சார படங்கள் எடுக்கும் மாரி செல்வராஜ் தான் ஷூட்டிங் ஸ்பாட்டில் – காமெடி நடிகர் விலாசல்.

0
1918
- Advertisement -

மாரி செல்வராஜ் ஒரு சைக்கோ என்று விமர்சித்து நடிகர் டெலிபோன் ராஜ் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் மாரி செல்வராஜ். இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வகையில் சமீபத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த படம் மாமன்னன். இந்த படத்தில் கதாநாயகனாக உதயநிதி ஸ்டாலின் நடித்து உள்ளார்.

-விளம்பரம்-

- Advertisement -

அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இவர்களை தொடர்ந்து வைகை புயல் வடிவேலு , பகத் பாசில் போன்ற பல முன்னணி நடிகர்களும் இந்த படத்தில் பல உள்ளார்கள். இந்த படத்திற்கு ஏ. ஆ.ர் ரகுமான் இசை அமைத்திருக்கிறார். இந்த படம் தான் உதயநிதியின் கடைசி படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், அனைவரும் எதிர்பார்த்த உதயநிதியின் மாமன்னன் படம் மிக பிரம்மாண்டமாக வெளியாகி இருந்தது. இந்த படத்தினை பார்த்து முதல்வர் மு. க. ஸ்டாலின், கமல்ஹாசன், தனுஷ் உட்பட பல பிரபலங்கள் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.

மாமன்னன் படம்:

மேலும், இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், விமர்சனத்தையும் பெற்று இருந்தது மட்டும் இல்லாமல் வசூலிலும் சாதனை படைத்து உள்ளது . இதனால் படக்குழு சமீபத்தில் வெற்றி விழா நடத்தி இருந்தது. அதன் பின் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் இந்த படம் Netflix தளத்தில் வெளியாகி உள்ளது. மேலும், இந்த படம் இந்திய அளவில் முதல் இடத்திலும், உலக அளவில் ஒன்பதாவது இடத்தையும் பிடித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

நடிகர் டெலிபோன் ராஜ் அளித்த பேட்டி:

இந்நிலையில் மாமன்னன் படம் குறித்து பிரபல காமெடி நடிகர் டெலிபோன் ராஜ் அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர், ஜாதியை பற்றி யாரும் பேசாமல் இருந்தாலே அது காலப்போக்கில் மறைந்துவிடும். ஆனால், இப்படி ஜாதி படம் எடுக்கிறேன் என்று சொல்லி எல்லோரையும் தூண்டி விடுகிறார்கள். ஜாதி என்றால் என்ன என தற்போது சின்ன குழந்தைகள் கூட கேட்கிற அளவிற்கு பேசப்பட்டு வருகிறது.

மாமன்னன் படம் குறித்து சொன்னது:

நாங்கள் நசுக்கப்படுகிறோம் என்று சொல்லி ஜாதி பிரச்சார படங்கள் எடுக்கும் மாரி செல்வராஜ் தான் சூட்டிங் பார்ட்டில் நடிகர்களை அடிக்கிறார், உதைக்கிறார். அவர் அடித்ததை வெளியில் சொன்னால் அடுத்து எந்த வாய்ப்பும் கிடைக்காது என யாரும் வெளியில் சொல்வதில்லை. மாரி செல்வராஜ் அடித்ததால் ஒரு வருடம் என்னால் நடிக்கவே முடியவில்லை என பெண் ஒருவர் என்னிடம் வாட்ஸ் அப்பில் கூறியிருந்தார். அந்த ஆடியோ இப்போதும் என்னிடம் இருக்கிறது. மாரி செல்வராஜ் ஒரு சைக்கோ என உதயநிதி கூறியிருக்கிறார்.

டெலிபோன் ராஜ் குறித்த தகவல்:

அவர் மற்ற நடிகர்களை அடிப்பதை அவரே கூறிவிட்டார் என்று மாரி செல்வராஜ் விமர்சித்து கூறி இருக்கிறார். தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருந்தவர் டெலிபோன் ராஜ். இவர் பெரும்பாலும் வடிவேலு குழுவுடன் இணைந்து தான் படத்தில் நடித்திருக்கிறார். அதோடு இவர் முன்னால் டெலிகாம் பணியாளரும் ஆவார். “அண்ணனுக்கு ஒரு ஊத்தப்பம்” என்ற வசனத்தின் மூலம் பிரபலமானவர் தான் “டெலிபோன் ராஜ்” இவர் கிட்டதட்ட 2000திற்க்கும் மேற்பட்ட நாடகங்கள், 50க்கும் மேற்பட்ட சிரியல்கள், 200க்கும் நாடகங்கள், படங்கள் என திரையுலகத்தில் பயணித்து இருக்கிறார்.

Advertisement