அஜித் வழிகாட்டலின் கீழ் உருவான இயந்தரின் மூலம் வான் மூலம் மருந்து தெளிப்பு.

0
1827
ajithdrone
- Advertisement -

காட்டுத் தீயாய் விட வேகமாக இந்த கொரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. தற்போது இந்தியாவில் 639 பேருக்கு இந்த கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு உள்ளது. தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பரவல் அதிகமாகி வருகிறது. இந்த கொரோனா வைரஸினால் .இதுவரை 13 பேர் உயிர் இழந்து உள்ளனர். இந்த வைரஸ் தாக்கிய நபரை குணப்படுத்த இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதால் மக்கள் அனைவரும் கவலையில் உள்ளார்கள். இந்தியாவில் கரோனா வைரஸ் பரவலை தடுக்க பிரதமர் மோடி அவர்கள் இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

-விளம்பரம்-
Image result for ajith daksha team

- Advertisement -

இதனால் மக்கள் யாரும் வெளியில் வரக் கூடாது என்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதிக காய்ச்சல், அதிக இருமல், மூச்சுத்திணறல் இவையெல்லாம் தான் கொரோனா வைரஸின் அறிகுறிகள். இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஆளில்லா விமானம் மூலம் கிருமிநாசினி தெளிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

சென்னை மாநகராட்சியின் சார்பில் வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க 200 வார்டுகளிலும், மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் கிருமி நாசினி தெளிக்க பவர் பிரையர் உட்பட 500 இயந்திரங்களை பயன்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அரசு அலுவலர்கள் உட்பட பெரிய பெரிய கட்டிடங்களில் 75 ஜெட்ராடிங் எந்திரங்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகின்றன.

-விளம்பரம்-

இந்நிலையில் இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு உள்ள நிலையில் அத்தியாவசிய தேவைகளுக்காக பொதுமக்கள் வந்து செல்லக்கூடிய பஸ் நிலையங்கள், மார்க்கெட் பகுதிகள் மற்றும் மக்கள் அடர்த்தியாக உள்ள குடிசைப் பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்க ஆளில்லா விமானங்களை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த எந்திரம் சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தால் உருவாக்கப்பட்டது. இந்த எந்திரத்தின் மூலம் ஒரு நாளைக்கு 50 ஆயிரம் சதுர அடி பரப்பளவு கிருமிநாசினி தெளிக்க இயலும். இதுபோன்று அண்ணா பல்கலைக் கழகத்திடம் நான்கு ட்ரோன் எந்திரங்கள் உள்ளன என்று மாநகராட்சி கமி‌ஷனர் பிரகாஷ் தெரிவித்திருக்கிறார். மேலும், இந்த ட்ரோன் கண்டுபிடித்தலில் நம்ப தல அஜித் பங்கும் உள்ளது.

சமீபத்தில் தான் அண்ணா பல்கலைக்கழகத்தின் எம்.ஐ.டி கேம்பஸில் பயிலும் ஏரோநாட்டிகல் மாணவர்கள் ஆளில்லா விமானங்கள் குறித்து ஆய்வு செய்ய தக்‌ஷா என்னும் குழுவை உருவாக்கினர். இந்தக் குழுவுக்கு நடிகர் அஜித் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். ஆஸ்திரேலியாவில் நடந்த `Medical Express 2018 UAV Challenge’ போட்டியில் அஜித் வழிநடத்திய தக்‌ஷா அணிக்கு சர்வதேச அளவில் 2-வது இடம் கிடைத்தது என்பது குறிப்பிடத்தகது.

Advertisement