தமிழ் சினிமா உலகில் இன்றைய ஜாம்பவானாக திகழ்பவர் நடிகர் விஜய். அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் அவர்கள் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த “பிகில்” படம் ரசிகர்கள் மத்தியில் பயங்கர வரவேற்பையும், வசூலையும் அள்ளி தந்து உள்ளது. இதனையடுத்து கார்த்திக் நடிப்பில் வெளிவந்த “கைதி” படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் அவர்கள் நம்ம தளபதி விஜய்யை வைத்து “தளபதி 64” படத்தை இயக்கி வருகிறார்.
தற்போது விஜய் அவர்கள் நடிக்கும் “தளபதி 64” படத்தின் தலைப்பு என்னவாக இருக்கும் என்று சமூக வலைத்தளங்களில் பல சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் இந்த படத்திற்கு “சம்பவம்” என்று தலைப்பு வைத்துள்ளதாக தகவல் வந்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் ‘சம்பவம்’ என தொடங்கும் ஒரு பாடலும் தளபதி 64 படத்தில் இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் மைனா, சாட்டை, மொசக்குட்டி, சவுகார்பேட்டை, பொட்டு ஆகிய படங்களை தயாரித்த ஷாலோம் ஸ்டூடியோஸ், ஜான் மேக்ஸ் அவர்கள் ஒரு புதிய படத்தை தயாரித்து வருகிறார்கள். இந்த புதிய படத்தை இயக்குனர் ரஞ்சித் பாரிஜாதம் அவர்கள் இயக்கி வருகிறார், மேலும், இந்த படத்திற்கு அவர்கள் “சம்பவம்” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்தில் ஸ்ரீகாந்த் மற்றும் நடன மாஸ்டர் தினேஷ் ஆகியோரும் இணைந்து நடிக்க உள்ளார்கள்.
இந்த படத்தில் கதாநாயகிகளாக பூர்ணா மற்றும் சிருஷ்டி டாங்கே நடிக்கிறார். மேலும், இவர்கள் சம்பவம் என்ற தலைப்பை முறையாக ரெஜிஸ்டர் செய்து உள்ளார்கள். அதோடு படத்தின் படப்பிடிப்பு வேலைகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது என்ற தகவல் வந்துள்ளது.
இந்நிலையில் விஜய் அவர்கள் “தளபதி 64” படத்திற்கு சம்பவம் என்று பெயர் வெளியாகி இருப்பதையொட்டி, இந்த செய்தியை பார்த்து அந்த புதிய படத்தின் படக்குழுவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும், சம்பவம் என்ற தலைப்பு எங்களுக்கு சொந்தமானது என்று கூறியும் வருகிறார்கள். அதுமட்டும்இல்லாமல் விஜய் படம் பற்றி வரும் தகவல்கள் எல்லாம் வதந்தி அதை நம்பாதீர்கள் என்றும் கூறியுள்ளார்கள்.
அதோடு இன்னமும் இந்த படத்திற்கு பெயரிடவில்லை. இந்த படத்தை சேவியர் பிரிட்டோ நிறுவனம் தயாரிக்க உள்ளார்கள். மேலும், அனிரூத் அவர்கள் இந்த படத்துக்கு இசையமைக்கிறார். மேலும், இந்த படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். விஜய் சேதுபதி அவர்கள் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் சாந்தனு பாக்யராஜ், ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா, கெளரி கிஷண், ப்ரிகிடா, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், ப்ரேம், சேத்தன், அழகம் பெருமாள், மேத்யூ வர்கீஸ், சுனில் ரெட்டி உட்பட ஒட்டு மொத்த நட்சத்திர பட்டாளமே நடிக்கிறார்கள் என்று சொல்லலாம். மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் முடிவடைந்து தற்போது சென்னையில் தொடங்க உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. மேலும், படத்தின் படப்பிடிப்புகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த படம் 2020 ஆம் ஆண்டு கோடை விடுமுறையில் திரையரங்குகளில் வெளியிடப்படும் என்று படக்குழுவினர் அறிவித்தார்கள்.