விஜய் மகன் எப்படி இயக்குனர் ஆனார்? – அதிர்ச்சியில் இசையமைப்பாளர் தமன் சொன்ன விஷயம்

0
228
- Advertisement -

விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படம் குறித்து இசையமைப்பாளர் தமன் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. உலகம் முழுவதும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் தளபதி விஜய். இவர் தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டு இருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை செய்து இருக்கிறது. மேலும், தளபதி விஜய்க்கு சஞ்சய் என்ற மகனும், திவ்யா என்ற மகளும் உள்ளனர்.

-விளம்பரம்-

வேட்டைக்காரன் படத்தில் ஒரு பாடலுக்கு ஒரு சின்ன டான்ஸ் ஆடியிருப்பார் சஞ்சய். அதனை தொடர்ந்து சில படங்களில் ஒரு சில காட்சிகளில் சஞ்சய் நடித்து உள்ளார். பின் ஜேசன் சஞ்சய் கனடாவில் ஃபிலிம் மேக்கிங் படிப்பு இருந்தார். அதோடு இவர் ஒரு சில குறும்படங்களை இயக்கி நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தகக்து. இதுவரை இவர் ஜங்க்ஷன் மற்றும் சிரி என்ற சில குறும்படத்தை இயக்கி இருந்தார்.
ஆனால், இந்த இரண்டு குறும்படங்களும் ரசிகர்கள் மத்தியில் பெரிதாக வரவேற்பை பெறவில்லை.

- Advertisement -

ஜேசன் சஞ்சய் இயக்கும் படம்:

அதன் பின் இவர் இறுதியாக ‘Pull The Trigger’ என்ற குறும்படத்தை இயக்கி இருந்தார். இந்த குறும்படம் சஞ்சய் இயக்கிய மற்ற குறும்படத்தை விட நன்றாகவே இருந்ததது . இப்படி இருக்கும் நிலையில் விஜய் மகன் சஞ்சய் தனது முதல் படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார். ஜேசன் சஞ்சய் இயக்கும் இந்தப் படத்தை லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியாகி இருந்தது. இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

படம் குறித்த தகவல்:

லைகா நிறுவனம் இதுவரை 2.0, பொன்னியின் செல்வன் 1 இதுவரை 2 போன்ற பிரம்மாண்ட படங்களை தயாரித்து இருக்கிறது. இப்படி முதல் படத்திலேயே மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனத்துடன் சஞ்சய் கைகோர்த்து இருப்பது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த படத்தில் ஹீரோவாக சந்தீப் கிஷன் நடிக்கிறார். தற்போது ஷூட்டிங் தொடங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

-விளம்பரம்-

தமன் பேட்டி:

இன்னும் சில வாரங்களில் ஷூட்டிங் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படி இருக்கும் நிலையில் ஜோசன் சஞ்சய் குறித்து இசையமைப்பாளர் தமன் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது சமீபத்தில் அளித்த பேட்டியில் தமன், ஒரு ஹீரோயின் மகன் எப்படி இயக்குனர் ஆனார் என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. நான் இன்னும் அந்த ஷாக்கில் தான் இருக்கிறேன்.

சஞ்சய் பற்றி சொன்னது:

பெரிய ஹீரோவோட பையன் நடிப்பாங்க, பெரிய மியூசிக் டைரக்டர் பையன் மியூசிக் டைரக்டர் ஆகுவாங்க. இவர் எப்படி டைரக்ஷன் பண்ணுறாரு. அந்த பையனுக்கு தைரியம் ரொம்பவே அதிகம். என்னிடம் கதை சொல்லும் போது நான் ஷாக் ஆயிட்டேன். அந்த கதைக்கு பெரிய ஹீரோ கூட ஓகே சொல்லுவாங்க. ஆனால், நான் சந்திப்பை வைத்து தான் பண்ணுவேன். அந்த கதைக்கு அவர் தான் கரெக்ட்டு என்று அவர் ரொம்ப ஸ்ட்ராங்காக இருக்கிறார். சஞ்சய் தான் விஜயின் மகன் என்பதை எந்த இடத்திலும் காண்பித்துக் கொள்ளவில்லை. அவருக்காக நான் சிறந்த இசையை கொடுக்கணும் என்று நினைக்கிறேன்
என்று ரொம்ப எமோஷனலாக பேசி இருக்கிறார்.

Advertisement