பணம் போட்டவரையும் சந்திக்க மாட்டாரு, ரசிகர்களையும் சந்திக்க மாட்டார் – கோடி கோடியா பணம் மட்டும் வேனும் – தங்கர் பச்சான் சரமாரி கேள்வி.

0
451
ThangarBachan
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் 40க்கும் மேற்பட்ட படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் தங்கர் பச்சான். இவர் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர், எழுத்தாளர், ஒளி ஓவியர், நடிகர் என பன்முகங்களை கொண்டவர்.மேலும், தங்கர் பச்சான் அழகி, சொல்ல மறந்தகதை, பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு, களவாடிய பொழுதுகள் என பல திரைப்படங்களை இயக்கியும் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் பார்த்திபன், சேரன், சத்யராஜ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இவருடைய படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இவர் எப்பவுமே எதார்த்தமான கிராமப்புற கதைகளை மையமாக கொண்டு படம் இயக்குவார்.

-விளம்பரம்-

இந்த நிலையில் தங்கர் பச்சான் சமீபத்தில் பிரபல ஊடகம் ஒன்றிற்க்கு பேட்டி கொடுத்திருந்தார். அந்த பேட்டியில் தமிழ் சினிமாவில் பல காலங்களாக முன்னணி நடிகர்களாக வலம் வரும் விஜய், அஜித் பற்றி கேட்கப்பட்ட போது கோவப்பட்டிருந்தார். மேலும் அவர் கூறியதாவது `அஜித்திடம் சென்று தங்கர் பச்சான் பற்றி கேளுங்களேன்? ஏன் யாரும் கேட்க்கவில்லை? சரி வேற யாராவது பற்றியது கேளுங்கள். அஜித்தை நீங்கள் பார்க்கவே முடியாது அவர் வேறு ஒரு கோளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

- Advertisement -

அவர் தயாரிப்பாளார்களை சந்திக்க மாட்டார், பணம் கொடுத்து உடல் உழைப்பை கொடுத்து படம் பார்க்கிற ரசிகர்களை சந்திக்க மாட்டார். பார்வையாளர்களையும் பார்க்க மாட்டார். நீங்க இப்ப ராஜ வாழ்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அதற்காக எல்லாவற்றையும் கொடுத்துக் கொண்டிருக்கின்ற இந்த உழைக்கும் மக்ககளை பற்றியும் கவலை இல்லை. மற்ற இடங்களில் இருந்து பணம் வரவேண்டும் அதை படியே எடுத்து வைத்துள்கொள்ள வேண்டும். இதை போய் என்னிடம் ஏன் கருத்து கேட்டு கொண்டிருக்கிறீர்கள்? என்று கோவப்பட்டு பேசினார்.

அதற்கு பிறகு பத்திரிகையாளர் நீங்க அவருடன் பணியாற்றி இருக்கிறீர்கள் என்று கேட்டபோது. நான் அவருடன் பணியாற்றவில்லை, நான் பணியாற்றியதில் அவரும் ஒருவர் என்று கோவமாக கூறினார். அதற்க்கு பிறகு நடிகர் விஜய்யுடைய அரசியல் நகர்வு பற்றி கேட்டபோது அதனை எப்படி இப்போது சொல்ல முடியும் வரட்டும் என்று கூறினார். பின்னர் விஜய் மக்களை ஓன்று திரட்டி அவர் செய்யும் சமூக பணிகளை குறித்து பேசிய போது மிகவும் கோவப்பட்டு பதிலளித்தார்.

-விளம்பரம்-

அதாவது சமூக பணி என்பது மாற்றுத்திறனாளிகளுக்கு தள்ளு வண்டி கொடுப்பது, சலவை பெட்டி வாங்கி கொடுப்பது தான் சமூக பணியா? அது கிடையாது அவர்கள் வந்து விவசாயம் செய்ய சொல்லுங்கள். எல்ல நடிகர்களையும் கூப்பிடுங்கள் நான் தருகிறேன் வேலை அங்கு ஆட்கள் கிடையாது அதுதான் சமூகப்பணி. ஆனால் அதற்கு யாரும் வரமாட்டார்கள். இதனை விட்டு விட்டு அரக்கட்டலை என்பதை வைத்துக் கொண்டு பணத்தை பதுக்குவதற்கும், பொய் கணக்கு காட்டுவதற்கு வைத்து கொண்டு அதுவா சமூக பணி.

எனக்கு தெரியாத அந்த விஷியம், வர சொல்லுங்கள் அந்த நடிகைர்களை இந்த சித்திரை மாத வெய்யிலில் வேலை செய்கிறார்களா என்பதை பார்க்கலாம். எல்லோரும் பொசுங்கி கொண்டு இருக்கிறார்கள். ஆனால் நீங்க எல்லோரும் ஏசி ரூம்ல அமர்ந்து கிட்டு இவர்களை பற்றி கேள்வி கேட்டுக்கொண்டு இருப்பீர்கள் என்று மிகவும் ஆவேசப்பட்டு பேசியிருந்தார் தங்கர் பச்சான். இந்த விடியோதான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement