இயக்குனர் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான ‘தனி ஒருவன்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்தப்படத்தில் அரவிந்த்சாமி வில்லனாக அசத்தி இருந்தார், அவருக்கு மனைவியாக ஷில்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர்தான் முக்தா கோட்சே.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்த மாடல் அழகியான இவர் பிரியங்கா சோப்ரா நடிப்பில் 2008 ஆம் ஆண்டு வெளியான ‘ஃபேஷன்’ என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அந்த படத்திற்கு பின்னர் ஹிந்தியில் பல்வேறு திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இவர் பிரபல நடிகரான ராகுல் தேவ் என்பவரை பல வருடங்களாக காதலித்து வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. ராகுல் தேவ் வேறு யாருமில்லை தமிழில் நரசிம்மா, மழை போன்ற பல படத்தில் வில்லனாக நடித்தவர் தான் கடைசியாக ‘வேதாளம்’ படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.
இந்த தம்பிதிகள் இருவரும் நடிகர்கள் என்றாலும் இதுவரை இவர்கள் இருவரும் இணைந்து எந்த ஒரு படத்திலும் நடித்தது இல்லை. இந்த நிலையில் தற்போது இவர்கள் ‘காபி’ என்ற திரைப்படத்தில் ஒன்றாக நடிக்கவிருக்கின்றனர். இந்த படத்தில் நடிகை இனியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும்சாரதி சதீஷ் என்பவர் தயாரிக்கும் இந்த படத்தை சாய் கிருஷ்ணா என்ற புதுமுக இயக்குனர் இயக்குகிறார்.