தாரை தப்பட்டை படத்தில் நடித்த நடிகையா இது. தற்போது என்ன செய்கிறார் தெரியுமா ?

0
13835
Akshaya
- Advertisement -

சினிமா உலகில் ஒல்லி, அழகு எல்லாம் தேவையில்லை என்பதை நிரூபித்தவர் நடிகை அக்‌ஷயா. இயக்குனர் பாலா இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளிவந்த ‘தாரை தப்பட்டை’ என்ற படத்தில் அக்‌ஷயா ஆடிய குத்தாட்டத்தை பாராட்டாதவர்கள் யாரும் இல்லை. அந்த படத்திற்கு பிறகு இவருக்கு சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் தொடர்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. மேலும், நடிகை அக்ஷயா ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் “யாரடி நீ மோகினி” என்ற சீரியலில் காமெடியன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இது மட்டுமில்லாமல் சமீபத்தில் நடந்த ஜீ குடும்ப விழாவில் சிறந்த காமெடியன் என்ற விருதை நடிகை அக்ஷயா பெற்றார். அதோடு யாரடி நீ மோகினி என்ற சீரியலில் மக்கள் பலரை சிரிக்க வைத்த அக்ஷயா ரொம்ப நாட்களாகவே சீரியலில் காணவில்லை. என்னாச்சு? ஏன் இவர் சீரியலில் நடிக்கவில்லை? என்று பல விஷயங்களை பகிர்ந்துக் கொண்டுள்ளார் நடிகை அக்ஷயா.

-விளம்பரம்-
அக்‌ஷயா

- Advertisement -

நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான். நான் விஸ்காம் படித்து விட்டு நடிக்க வந்து விட்டேன். எனக்கு உயிர், மூச்சு எல்லாமே டான்ஸ் மட்டும் தான். ஆரம்பத்தில் எனக்கு ஆடவே வராது. என் உடம்பு குண்டாக இருக்கும் காரணத்தினால் பல பேர் என்னை கிண்டல், கேலி பண்ணுவார்கள். பல முயற்சிகளுக்குப் பிறகு போராடி தான் நான் நடனம் கற்றுக்கொண்டேன். அதிலும் உனக்கெல்லாம் இது தேவையா?? என்று கூட சொல்லி இருக்கிறார்கள். ஏதாவது ஒரு விஷயத்தில் நான் என்னை நிரூபிக்க வேண்டும் என்று போராடி வந்தேன். அப்புறம் தான் பாலா சார் உடைய தாரை தப்பட்டை படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தில் நான் போட்ட உழைப்பு வீணாகவில்லை. ஒரு பாட்டுக்கு கரகாட்ட கலைஞர்கள் மாதிரி முழங்காலுக்கு மேல் உடை அணிந்து ஆடும் காட்சி ஒன்று சொன்னார் இயக்குனர்.

நான் அப்ப ரொம்ப பயந்து, கூச்சப்பட்டு நின்று இருந்தேன். ஏனென்றால் என்னுடைய உடலுக்கு அந்த மாதிரி ஆடைகள் போட்டு குத்தாட்டம் ஆடினால் கேலியும் கிண்டலும் செய்வார்கள் என்று நினைத்தேன். உடனே நான் பாலா சாரிடம் போய் முட்டிக்கு மேலே ஆடைகள் போட்டு குத்தாட்டம் ஆடினால் திரையில் பார்க்கிறவர்கள் முகம் சுழிக்கக்கூடாது, ச்சீன்னு சொல்ல கூடாது என்று நான் கேட்டேன். அதற்கு அவர் அதுஎல்லாம் சொல்லாத அளவிற்கு நான் எடுக்கிறேன் என்று எனக்கு நம்பிக்கையும், ஆறுதலையும் சொன்னார். பிறகு பாலா சார் சொன்ன மாதிரியே செய்து விட்டார். மேலும், அந்தப் பாடலுக்கு நான் ஆடியதை குறித்து நிறைய பேர் என்னை பாராட்டினார்கள். ஒருவர் கூட என் ஆடையை பற்றியும் என்னைப் பற்றியும் விமர்சனம் எழுதவில்லை.

-விளம்பரம்-
அக்‌ஷயா

அந்த படத்திற்கு பிறகு எனக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தது. ஆனால், அது எல்லாம் கிளாமர் காட்சிகள் நடிக்கும் கதாபாத்திரம் என்பதால் நான் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். எப்பவுமே நடிப்பு, டான்ஸ் எல்லாமே ஒல்லியானவர்கள் செய்தால் தான் வாய்ப்பு தேடிவரும், அழகாக இருக்கும் என்று பலரும் சொல்வார்கள். விளம்பரங்கள் தொடங்கி சினிமா கதாபாத்திரங்கள் வரை சூப்பர் ஹிட் ஆயிடுவாங்க. ஆனால், என்ன மாதிரி குண்டாய் இருக்கிறவங்க?? பார்த்தால் திரையில் எவ்வளவு கிண்டல் பண்ணுவார்கள். அதனால் பயந்துட்டு பாதிப்பேர் வரமாட்டார்கள். அதை முறிக்கயடிக்க தான் நடிக்க வந்தேன். எனக்கு சீரியலில் நடிக்க வாய்ப்பு வந்த போது உனக்கு நடிக்க எல்லாம் வராது இதெல்லாம் வேணாம் என்று என்னைத் தடுத்தார்கள்.

அக்‌ஷயா

அதோடு நான் நடித்த முதல் சீரியலிலேயே பெஸ்ட் காமெடி நடிகை விருது வாங்கினேன். ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் “யாரடி நீ மோகினி” என்ற ஹாரர் சீரியலில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறேன். யாரடி நீ மோகினி சீரியலில் ஏன் நீங்கள் வரவில்லை?? என்று பல பேர் என்னிடம் கேள்வி கேட்டார்கள். ஏனென்றால் சீரியலில் இப்ப தான் கொஞ்ச நாள் பாசிட்டிவ் நோக்கத்தோடு எடுத்துக் கொண்டு போறாங்க. நாங்கள் வில்லி ஸ்வேதா உடன் நிறைய வேலைகள் எல்லாம் செய்வோம். ஸ்வேத்தா இல்லாததால் கொஞ்சம் எங்களுக்கு பிரேக் விட்டிருக்கிறார் இயக்குனர். சீக்கிரமாகவே நாங்க திரும்பி வந்து வெண்ணிலாவை டார்ச்சல் பண்ணுவோம் என்று கூறினார்.

Advertisement