கர்னாடககாரன் அடிக்கல, தமிழன் நான் தான் அடித்தேன் – விஜய் சேதுபதியை தாக்கிய நபரின் முதல் வீடியோ.

0
818
vijaysethupathi
- Advertisement -

மக்கள் செல்வன் என்ற அந்தஸ்துடன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் விஜய்சேதுபதி. இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, இந்தி என்று பல மொழி படங்களிலும் நடித்து வருகிறார். மேலும், விஜய் சேதுபதி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கூட தொகுப்பாளராகவும் பங்கேற்று வருகிறார். சமீபத்தில் சூப்பர் டீலக்ஸ் படத்திற்காக விஜய் சேதுபதிக்கு சிறந்த நடிகர் என்ற தேசிய விருது வழங்கப்பட்டு இருந்தது. இது குறித்து பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். அதுமட்டும் இல்லாமல் இவர் பல படங்களில் பிசியாக நடித்து கொண்டும், பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டும் இருக்கிறார்.

-விளம்பரம்-

அந்த வகையில் சமீபத்தில் பெங்களூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சிக்காக விஜய் சேதுபதி சென்றிருக்கிறார். அப்போது அங்கு இருந்த நபர் ஒருவர் விஜய் சேதுபதியை பின்புறமாக எட்டி உதைத்து இருந்தார். இதனை சற்றும் எதிர்பாராத விஜய்சேதுபதி மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகி இருந்தார். பின்னர் விஜய்சேதுபதியை அங்கிருந்து பாதுகாப்பாக அழைத்துச் சென்றார்கள். மேலும், இது குறித்த வீடியோ சோசியல் மீடியா முழுவதும் பேசும் பொருளாக இருந்தது. பின்னர் இந்த சம்பவம் குறித்து சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகள் எழுந்தது.

- Advertisement -

அதிலும் விஜய் சேதுபதிக்கும், உதைத்த நபருக்கும் இடையே சமாதானம் ஆனது என்றும் கூறி இருந்தார்கள். இந்நிலையில் விஜய் சேதுபதியை உதைத்ததற்கான காரணத்தை உதைத்தவரே பேட்டியில் கூறி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, என் பெயர் மகா காந்தி. விஜய் சேதுபதி தேசிய விருது வாங்கியது அனைவருக்கும் தெரிந்தது. அதனால் விமான நிலையத்தில் அவரை பார்த்து பாராட்டுவதற்காக நான் சென்றேன். தேசத்திற்காக தேசிய விருது வாங்கியதற்கு வாழ்த்துக்கள் என்று நான் அவரிடம் சொன்னேன். உடனே அவர் என்னிடம் கிண்டலாக பேசினார். பின் நான் என்னுடைய பொருள்களை எல்லாம் எடுப்பதற்காக சென்றபோது பின்னாடி இருந்து இரண்டு கைகள் என்னைத் தாக்கியது. 100% அது விஜய் சேதுபதியா? அவருடன் இருந்தவர்களா? என்று எனக்கு தெரியாது.

விஜய் சேதிபதி மற்றும் அவருடன் இருந்தவர்கள் என்னை அவமரியாதையாக நடத்தினார்கள். அதனால் தான் நான் அவரை தாக்கினேன். மக்கள் செல்வன் என்ற போர்வையில் விஜய் சேதுபதி வாழ்ந்து கொண்டிருக்கின்றார். உண்மையாலுமே அவருக்கு மக்கள் மீது எந்த அக்கறையும், மரியாதையும் கிடையாது. இனிமேலாவது மக்கள் இதை புரிந்து கொண்டு நடந்தால் நன்றாக இருக்கும். நான் தவறு செய்திருந்தாலும் சரி இல்லை விஜய் சேதுபதி தவறு செய்து இருந்தாலும் கடவுள் நிச்சயம் தண்டனை கொடுப்பார் என்று கூறி இருந்தார். இப்படி இவர் பேசிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement