சரவணன் மீனாட்சி சீரியலில் மைனா கேரக்டரில் நடித்து சின்னத்திரையில் புகழ்பெற்றவர் நடிகை நந்தினி. இவருக்கும் ஜிம் மாஸ்டர் கார்த்திக் என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் காதல் திருமணம் நடைபெற்றது.
குடும்ப வாழக்கை செட் ஆகாத நந்தினிக்கு அவரது புகுந்த வீட்டில் அடிக்கடி பிரச்சனைகள் இருந்துள்ளது. மேலும், நந்தினி மற்றும் அவரது நண்பர் கார்த்திக்கிற்கும் கருத்து வேறுபாடுகள் பல இருந்தது. இதன் உச்ச கட்டமாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கணவர் கார்த்திக் தற்கொலை செய்து கொண்டார்.
ஆனால், நந்தினி அந்த நேரத்தில் ஒரு ஷோ’வில் லைவாக பேசிக்கொண்டு இருந்தார். கணவர் தற்கொலை இறந்த பிறகும் பெரிதாக எந்த ரியாக்சனும் காட்டாத நந்தினி அடுத்த சில நாட்களிலேயே மீண்டும் சீரியல், ரியாலிட்டி ஸோ என பலவற்றில் பிஸியாகி விட்டர்.
நந்தினிக்கு அதிக ஆண் நண்பர்கள் இருந்தனர். இதனால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு என் மகன் தற்கொலை செய்து கொண்டான் என கார்த்திக்கின் தான் கூறினார். இதற்கு பதில் அளித்த நந்தினி கார்த்திக் பலரிடம் கடன் வாங்கி வைத்து ஏமாற்றிவிட்டார். என்னிடமும் நகைகள் வாங்கி வைத்துக்கொண்டார் என்னையும் ஏமாற்றிவிட்டார் எனக் கூறினார்.
எல்லாம் முடிந்து தற்போது ஒரு சீரியலில் பிஸியாக இருக்கும் நந்தினிக்கும் அவருடன் நடித்து வரும் நடன இருக்குனருக்கும் காதல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளது. மேலும், புத்தாண்டு துவங்கி உள்ள இந்த நேரத்தில் இவ்விருவரும் தங்கள் திருமண செய்தியை அறிவிப்பார்கள் எனவும் கூறப்பட்டது. தற்போது வரை எந்த ஒரு அறிவிப்பும் இருவரிடம் இருந்தும் வெளியாக வில்லை.
அந்த நடன இருக்குனருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.