ரஜினி மகள் வீட்டில் கடந்த மாதமே நடந்துள்ள அதிர்ச்சி சம்பவம், போலீசில் புகார் அளித்துள்ள ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

0
777
- Advertisement -

வீட்டு லாக்கரில் இருந்த தங்க, வைர நகைகள் கொள்ளையடித்த சம்பவம் குறித்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் போலீசில் புகார் அளித்திருக்கும் சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கோலிவுட் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் பல ஆண்டு காலமாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் 80 காலகட்டம் தொடங்கி தற்போது வரை பல படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளிவந்திருந்த அண்ணாத்த படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் வசூலில் கோடிகளை குவித்து இருந்தது.

-விளம்பரம்-

இதனை அடுத்து தற்போது ரஜினிகாந்த் அவர்கள் ஜெயிலர் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று இருக்கிறது. இது மட்டும் இல்லாமல் இன்னும் இரண்டு படங்களில் ரஜினிகாந்த் நடித்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதில் ஒன்று தன் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கம் படத்தில் ரஜினி நடிக்கிறார். இதனிடைய நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் லதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

- Advertisement -

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திரைப்பயணம்:

இவர்களுக்கு இரண்டு மகள்கள் இருப்பது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அதில் மூத்த மகள் ஐஸ்வர்யா இளைய மகள் சௌந்தர்யா. இதில் மூத்த மகள் ஐஸ்வர்யா தமிழ் சினிமாவில் இயக்குனராக பணியாற்றி வருகிறார். இவர் இயக்கிய 3, வை ராஜா வை போன்ற படங்கள் எல்லாம் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. மேலும், இவர் தமிழ் சினிமாவில் முன்னாடி நடிகராக கலக்கிக் கொண்டிருக்கும் தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

ஐஸ்வர்யா-தனுஷ் பிரிவு:

இப்படி 18 ஆண்டு காலமாக சேர்ந்து வாழ்ந்து வந்த ஐஸ்வர்யா- தனுஷ் இருவரும் கடந்த ஆண்டு பிரிவதாக சோசியல் மீடியாவில் அறிவித்திருந்தார்கள். இது பல சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இதனை அடுத்து பிரிவிற்கு பிறகு இருவருமே தங்களுடைய கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது ஐஸ்வர்யா அவர்கள் லால் சலாம் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். அதற்கான பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். இந்த படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் ஸ்ரீகாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

-விளம்பரம்-

ஐஸ்வர்யா வீட்டில் திருட்டு:

அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் கவுரவ வேடத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார். இந்நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் வீட்டில் திருட்டு சம்பவம் நடந்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதாவது, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் லாக்கரில் இருந்த பல லட்ச ரூபாய் மதிப்பிலான வைரம், நவரத்தின கற்கள், தங்க நகைகள் எல்லாம் காணாமல் போய் இருக்கிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஐஸ்வர்யா தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.கடந்த மாதம் இந்த சம்பவம் நடந்துள்ளதாக தெரிகிறது. அதுகுறித்த தகவல் இப்போது தான் தெரிய வந்துள்ளது.

போலீஸ் விசாரணை:

அதில், நெக்லஸ்கள், ஆரம் வைர நகைகள் உள்ளிட்ட 60 சவர நகைகள் திருட்டுப் போய் இருக்கிறது. வீட்டில் பணியாற்றும் பணியாளர்கள் தான் இந்த வேலையை செய்திருக்கலாம் என்றும் புகாரில் ஐஸ்வர்யா குறிப்பிட்டு இருக்கிறார். இதனை அடுத்து போலீஸ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கொடுத்த புகாரை வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். அதோடு 2019 ஆம் ஆண்டிற்கு பிறகு மூன்று வீடுகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மாறி இருக்கிறாராம். இதனால் அவரது வீட்டில் யார் யார் வேலை செய்திருக்கின்றனர்? நகை பற்றிய விவரம் யாருக்கு தெரியும்? எந்த வீட்டில் வைக்கப்பட்டிருந்த போது நகைகள் காணாமல் போனது? என்று பல கோணங்களில் போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.

Advertisement