தென்றல் வந்து என்னை தொடுமா இல்ல துள்ளாத மனமும் துள்ளுமா ? – கேலிக்கு உள்ளான விஜய் டிவி சீரியல்.

0
1160
Thendral
- Advertisement -

தொலைக்காட்சி நிறுவனங்கள் அனைத்துமே TRP மதிப்பீடு என்ற ஒரு விஷயத்தை வைத்து தான் தங்களின் தொலைக்காட்சி தரத்தை முடிவு செய்து வருகிறது.அந்த வகையில் பல்வேறு தொலைக்காட்சிகளும் தங்களுடைய TRP தரத்தை நிலைநாட்டிக்கொள்ள பல்வேறு வித்யாசமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது. சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ்,கலர்ஸ் என்று பல்வேறு தொலைக்காட்சியின் அச்சாரமாக விளங்கி வருவது சீரியல்கல் மட்டும் தான். அதில் ஒரு சில தொலைக்காட்சியில் வரும் ஒரு சில நிகழ்ச்சிகள், டிவியின் TRP அளவை எகிற வைக்கிறது.

-விளம்பரம்-

அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு தொடர்கள் இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் துவங்கப்பட்ட சீரியல் தென்றல் வந்து என்னை தொடும்.தில் நாயகனாக ‘சுந்தரி நீயும் சுந்தரன் நானும்’ சீரியல் நடிகர் வினோத் பாபுவும், நாயகியாக பவித்ராவும் நடித்து வருகின்றனர். இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று இருக்கிறது.

- Advertisement -

நாயகி பவித்ரா விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபிஸ் என்ற சீரியலின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகி பின்னர் அந்த சீரியலை தொடர்ந்து மெல்ல திறந்தது காதவு, ராஜா ராணி, லட்சிமி வந்தாச்சு, சரவணன் மீனாட்சி என பல சீரியல்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமாகியிருந்தார். மேலும் சூப்பர் ஹிட் சேரியலான ஈரமான ரோஜாவிம் மெல்லாம் தன முதன்மை கதாபாத்திரமாக அறிமுகமானார்.

இந்நிலையில் தற்போது பவித்ரா ஜனனி தென்றல் வந்து என்னை தொடும் சிரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியல் கதாநாயகன் வினோத்துடன் நடக்கும் முட்டலும் மோதலும் தொடங்கி தற்போது கொலைப் பழியினால் வினோத் ஆறு வருடங்கள் சிறையில் தண்டனை அனுபவித்து வெளியில் வந்திருக்கிறார். வினோத் என்கிற வெற்றி சிறை சென்றதால் மனமுடைந்த பவித்ரா ஜனனி என்கிற அபி யாருக்கும் தெரியாமல் வெளியூர் சென்று மாவட்ட ஆட்சியராக தற்போது உள்ளார்.

-விளம்பரம்-

தற்போது சிறையில் இருந்து விடுதலையாகியிருக்கும் வெற்றி ஒரு குற்றவாளி என்பதினால் இவருக்கும் மாவட்ட ஆட்சியருக்கு இடையே நடக்கும் சுவாரசியமான நிகழ்வுகளை மையமாக வைத்து கதையானது தற்போது நகர இருக்கிறது. இது இணயக்குனரின் வித்தியாசமான இயக்கம் என்று கூறினாலும் பலர் “துள்ளாத மனமும் துள்ளும்” என்ற படத்தை எடுத்து வைத்திருப்பதாக கூறி கலாய்த்து வருகின்றனர். இருந்தாலும் சமீபத்தில் நடிகை அனுஷ்கா இந்த சீரியலை பற்றி பாராட்டி கூறியதால் மக்கள் மத்தியில் இந்த சிரியலுக்கான வரவேற்பு கூடியுள்ளது .

Advertisement