திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்க படுகிறது என்பார்கள். ஆனால் விவாகரத்து என்னமோ வக்கீல்களின் வாய்தாக்களிலும், நீதி மன்றத்தின் கூண்டிலும் தான் நிச்சயிக்கப்படுகிறது. பொது மக்கள் விவாகரத்து வாங்கினாலே அது பலரால் விமர்சிக்க படுகிறது. இந்த நிலையில் பலரும் அறிந்த பிரபலங்கள் விவாகரத்து வாங்கினால் அவ்வளவு தான்.
ஊர் முழுக்க அது தான் விவாதமாக இருக்கும். அதோடு பிரபலங்களின் விவகிரதுகளில் ஜீவனாம்ச தொகையும் அதிக அளவில் இருக்கும். அந்த வகையில் பெருமளவு ஜீவனாம்சம் கொடுத்து தங்களின் மனைவியை விவாகரத்து செய்த பிரபலங்கள் சிலரை பற்றி பார்ப்போம் வாருங்கள்.
ஹ்ரிதிக் ரோஷன்:
ஹ்ரிதிக் ரோஷன், தன்னுடைய தோழியான சுசேனை காதலித்து வந்தார். பின்னர் அவரையே திருமணமும் செய்துகொண்டார். ஆனால் சில காலங்களுக்கு பிறகு கங்கனாவுடன் ஹ்ரிதிக் ரோஷனுக்கு தொடர்பு இருப்பதை அறிந்த சுசேன் அவரை விட்டு பிரிந்தார். அதோடு தனக்கு ஜீவனாம்சமாக சுமார் 400 கோடி ரூபாய் கேட்டார். இறுதியாக அவருக்கு 380 கோடி ரூபாய் ஜீவனாம்சமாக கொடுத்தார் ஹ்ரிதிக் என்று கூறப்படுகிறது.
பிரபு தேவா:
இந்தியாவின் மைக்கல் ஜாக்சன் என்று அறியப்படுபவர் பிரபு தேவா. இவர் தன்னுடைய மகனின் இறப்பிற்கு பிறகு நயன்தாராவோடு நெருக்கமானார். அவரை திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்த பிரபு தேவா தன் முதல் மனைவியை விவாகரத்து செய்தார். இதற்காக அவர் ரொக்கமாக பத்து லட்சம் ரூபாயும், 20 முதல் 25 கோடி விலை மதிப்புள்ள சொத்தையும் ஜீவனாம்சமாகா கொடுத்தார் என்று கூறப்படுகிறது.
சயப் அலிகான்:
சயப் அலிகான் தன் மனைவியோடு கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் வாழ்ந்து வந்தார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். இதற்காக அவரது மனைவி 5 கோடி ரூபாய் ஜீவனாம்சம் கேட்டார். ஆனால் இறுதியாக இரண்டரை கோடி ரூபாயில் முடிக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. தான் மிகப்பெரிய நடிகன் இல்லை என்றும் அதனால் தன்னால் முடிந்தது இவளவு தான் என்றும் அவர் கூறினார்.
அமீர் கான்:
அமீர் கான் தன் முதல் மனைவியோடு நீண்ட காலம் வாழந்து வந்தார். ஆனால் திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட, அவரை விவாகரத்து செய்துவிட்டார். இதற்காக அவர் பெரிய தொகை ஒன்றை ஜீவனாம்சமாக கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் அது எவ்வளவு என்பது யாருக்கு தெளிவாக தெரியவில்லை.
சஞ்சய் தத்
சஞ்சய் தத்தின் இரண்டாவது மனைவியானை ரியாவை விவாகரத்து செய்ய அவர் ஜீவனாம்சமாக சுமார் 8 கோடி ரூபாயும் ஒரு சொகுசு காரும் கொடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது.
லியாண்டர் பயஸ்:
சஞ்சய் தத்தின் இரண்டாவது மனைவியான ரியா, அவரை விவாகரத்து செய்த பிறகு லியாண்டர் பயஸை மணந்தார். அதன் பிறகு சில காலங்களில் அவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். ரியாவை விவாகரத்து செய்ய லியாண்டர் பயஸ் மாதம் 4 லட்சம் ரூபாய் ஜீவனாம்சமாக கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
பர்கான் அக்தர் :
பர்கான் அக்தர் தன் மனைவி பிள்ளைகளோடு கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் வாழ்ந்து வந்தார். அதன் பிறகு அவர்கள் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இதற்கு ஜீவனாம்சமாக அவர் 10,000 சதுரடி பங்களா ஒன்றை வழங்க வேண்டும் என்று பேசப்பட்டதாக கூறப்படுகிறது.
கரீனா கபூரின் சகோதரி:
கரீனா கபூரின் சகோதரியான கரீஷ்மா கபூர், சஞ்சய் என்பவரை விவாகரத்து செய்துள்ளார். அப்போது பிள்ளைகளுக்காக 14 கோடி ரூபாயும், மாதம் 10 ரூபாய் ரொக்கமும் ஜீவனாம்சமாக தரவேண்டும் என்று பேசப்பட்டதாக அறியப்படுகிறது.