‘ரசிகர் மூலம் தான் அந்த விஷயம் தெரியவந்தது’ – பிரசாந்தின் திருமண வாழ்வில் ஏற்பட்ட பிரச்சனை குறித்து அவரின் தந்தை பேட்டி.

0
1069
prasanth
- Advertisement -

ஒரு காலத்தில் தமிழ் சினிமா உலகில் ஆண் அழகன் என்ற பட்டத்தைப் பெற்றவர் நடிகர் பிரசாந்த். நடிகர் பிரசாந்த் நடிப்பில் வந்த படங்கள் எல்லாம் வணிகரீதியாக வெற்றி அடைந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இவர் தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்தார். கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்து வெற்றிப்படம் என்று பார்த்தால் அது வின்னர் தான். அதற்குப் பிறகு இவருடைய நடிப்பில் வந்த பல படங்கள் தோல்வி அடைந்துள்ளது. பின் படிப்படியாக இவருடைய மார்க்கெட்டும் சினிமாவில் குறைய தொடங்கியதால் பிரசாந்த் இடம் தெரியாமல் காணாமல் போனார். மேலும், விஜய் மற்றும் அஜித்திற்கு போட்டியாக வருவார் என்று எதிர்பார்க்கபட்டார்.

-விளம்பரம்-

ஆனால், தொடர் தோல்வி படங்களால் தமிழ் சினிமாவில் இருந்து காணாமலே போனார். அதோடு உடல் பருமன் அதிகரித்து ரசிகர்களால் ஹீரோவாக ஏற்றுக்கொள்ள முடியாது அளவுக்கு பிரசாந்த் மாறினார். இடையில் அப்பப்போ தெலுங்கு சினிமாவில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். மேலும், நடிகர் பிரஷாந்திற்கு சினிமாவில் மிகப்பெரிய சறுக்கலை ஏற்படுத்தியது அவரது திருமண வாழ்க்கை தான். நடிகர் பிரசாந்த்திற்கு கடந்த 2005 ஆம் ஆண்டு பிரபல எக்ஸ்போர்ட் தொழிலதிபரின் மகள் கிரகலட்சுமி என்கிற பெண்ணை பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்தனர்.

- Advertisement -

பிரஷாந்த் வாழ்க்கையில் நடந்தது:

திருமனாகி சில ஆண்டுகள் சந்தோசமாக வாழ்ந்து வந்த நடிகர் பிரஷாந்த் சில மனக்கசப்பு காரணமாக பிரிய ஆரம்பித்தார்கள். பின் நடிகர் பிரஷாந்த்தை விட கிரகலட்சுமி வயது அதிகமானவர் என்பதும், இவரை ஏமாற்றி திருமணம் செய்துக்கொண்டார் என்பது தெரிய வந்துள்ளது. மேலும், கிரகலட்சுமி ஏற்கனவே திருமணம் ஆனவர் என்று கூட சில சர்ச்சை எழுந்தது. கிரகலட்சுமி பற்றி தெரிய வந்ததும் இவர்கள் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். திருமண வாழ்கை தோல்வி அடைந்ததால் நடிகர் பிரஷாத் மன உளைச்சலுக்கு ஆளாகி சில வருடங்கள் எந்த திரைப்படத்திலும் நடிக்காமல் இருந்தார்.

பிரசாந்த் ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கும் படம்:

ஒருவழியாக இந்த பிரச்சனையில் இருந்து மீண்டு வந்த பிரசாந்த் மீண்டும் திரைப்படங்களில் கவனம் செலுத்த தொடங்கி விட்டார். பல்வேறு வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் மோகன் ராஜாவின் படத்தில் தற்போது பிரசாந்த் நடிக்க இருக்கிறார். இந்த படம் பிரசாந்த்க்கு ஒரு சிறந்த படம் படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாலிவுட்டில் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த படம் ‘அந்தாதுன்’. இந்த படத்தில் ஆயுஷ்மன் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். காமெடி கிரைம் த்ரில்லர் படம் ஆகும். இந்த திரைப்படம் இந்தியில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

-விளம்பரம்-

தியாகராஜன் அளித்த பேட்டி:

இந்த படத்தின் தமிழ் ரீ மேக் உரிமையை பிரசாந்தின் தந்தை தியாகராஜன் பல கோடி கொடுத்து வாங்கிய நிலையில் இந்த படத்தினை தமிழில் ரீ மேக் செய்ய இருக்கிறார்கள். இந்த படத்திற்காக நடிகர் பிரசாந்த் 20 கிலோவை குறைந்துள்ளதாக பிரசாந்தின் தந்தை தியாகராஜன் தெரிவித்துள்ளார். இந்த ‘அந்தாதுன்’ மூலம் சினிமாவில் மாஸ் என்ட்ரி கொடுக்க இருக்கிறார் பிரசாந்த். இந்த படத்திற்கான வேலைகள் எல்லாம் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் சமீபத்தில் பிரசாந்த்தின் தந்தையும் நடிகருமான தியாகராஜன் பேட்டி ஒன்று அளித்து இருந்தார். அதில் அவர் பிரசாந்தின் திருமணம் குறித்து கூறி இருப்பது, பிரசாந்துக்கு இன்னும் விவாகரத்து ஆகவில்லை.

பிரசாந்தின் முதல் திருமணம்:

எனக்கு தெரிந்த குடும்பம் தான் கிரகலஷ்மியின் குடும்பம். அதனால் பிரசாந்த்- கிரகலட்சுமி இருவருக்கும் திருமணம் செய்தோம். ஆனால், பிறகு தான் கிரகலட்சுமி வேறு ஒருவரை திருமணத்திற்கு முன்பே ரெஜிஸ்டர் மேரேஜ் செய்தது தெரிந்தது. இந்த விஷயமே பிரசாந்தின் ரசிகர் ஒருவர் மூலம் தான் தெரிந்தது. அதுமட்டுமில்லாமல் கிரகலட்சுமி திருமணம் ஆன ஒரு மாதத்திலேயே வீட்டை விட்டு சென்று விட்டார். பின் கிரகலட்சுமி குடும்பத்தினர் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடுத்தனர். அப்போது தான் பிரசாந்தின் ரசிகர் கிரகலக்ஷ்மி ஏற்கனவே திருமணம் ஆனதற்கான புகைப்படம் மற்றும் ஆதாரங்களை கொடுத்ததார்.

பிரசாந்தின் திருமணம் குறித்து சொன்னது:

பிறகு இந்த வழக்கு முடிந்தது. ஒருவேளை பிரசாந்த் காதல் திருமணம் செய்து கொண்டு இருந்தால் நன்றாக இருந்து இருப்பாரோ? என்ற எண்ணம் வந்தது. பிரசாந்துக்கு இரண்டாவது திருமணம் விரைவில் செய்ய வேண்டும். அதுவே தந்தையின் தலையாய கடமை. இது அரேஞ்ச் மேரேஜ் ஆகத்தான் இருக்கும். பிரசாந்த் படம் வெளியான அடுத்த மாதமே அவருக்கு கல்யாணம் தான் என்று கூறியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இனிமேல் பிரஷாந்திற்கு சினிமா வாழ்க்கையும், நிஜ வாழ்க்கையும் சிறப்பாக அமையும் என்று வாழ்த்தி உள்ளார்கள்.

Advertisement