நான் கர்ப்பமா இருந்ததால அந்த காட்சியில் என்ன சாமி கும்பிட்டு பின்னர் தான் திட்னார்.

0
9348
abhi
- Advertisement -

சின்னத்திரையில் ஒளிபரப்பாகி ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த சீரியல்களின் பட்டியலில் ‘திருமதி செல்வம்’ சீரியலும் ஒன்று. தற்போது இந்த சீரியல் கலைஞர் தொலைக்காட்சியில் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. மேலும், இந்த சீரியலை பலரும் விரும்பி பார்த்து வருகிறார்கள். திருமதி செல்வம் தொடரில் கதாநாயகியாக நடித்தவர் தான் அபிதா. இந்த நிலையில் நடிகை அபிதா அவர்கள் திருமதி செல்வம் சீரியலில் நடித்த நினைவுகள் குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் கூறியதாவது, நான் அப்போது பார்க்காத எபிசோடுகள் எல்லாம் இப்ப தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

-விளம்பரம்-
திருமதி செல்வம்

சொர்க்கம் தொடரில் நடித்துக் கொண்டிருக்கும் போது தான் எனக்கு இந்த சீரியலில் நடிக்க வாய்ப்பு வந்தது. அதே சமயத்தில் தான் எனக்கு திருமண ஏற்பாடுகள் செய்தார்கள். திருமதி செல்வம் சீரியலில் நடிக்க எனக்கு ஆரம்பத்தில் விருப்பம் இல்லை. சீரியலில் நடிக்க வேண்டாம் என்று தான் நினைத்தேன். பிறகு கதை எனக்கு பிடித்ததும் நடிக்க ஒத்துக்கொண்டேன். அதுமட்டுமில்லாமல் எங்க வீட்டிலேயும் எனக்கு சப்போர்ட் செய்தார்கள். அந்த சமயத்தில் தான் எனக்கு திருமணமும் நடந்தது. ஆரம்பத்தில் என் கணவர் நடிகை என்று பயந்தார். பிறகு அவரே என்னை நடிக்க அனுப்பி வைத்தார்.

- Advertisement -

அந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும்போதே நான் கர்ப்பம் ஆனேன். அதனால் அதுக்கேத்த மாதிரி சீரியலிலும் கர்பமான மாதிரி வைத்தார்கள். சீரியலில் நான் 8 மாதம் வரை நடித்தேன். சீரியலில் நான் மாசமாக இருக்கும் போது ஷெட்டில் கௌதமி மேடம் எனக்கு சாபம் கொடுக்கிற மாதிரி காட்சிகள் எல்லாம் வரும். அதற்கு அவர்கள் நீ நிஜத்தில் மாசமாக இருக்கிறாய். நடிப்புக்காக தான் நான் சாபம் விடுகிறேன். அது உன்னை எதுவும் செய்திடக் கூடாது என்று சாமி கும்பிட்டு தான் நடிக்கவே வருவார்கள். அது மட்டுமில்லாமல் அவர்கள் எனக்காக வீட்டில் செய்ய பலகாரங்களை கொண்டு வந்து தருவார்கள்.

திருமதி செல்வம் தொடருக்கு பிறகு பொன்னூஞ்சல் என்ற தொடரில் நடித்தேன். பின் சீரியல் இருந்து பிரேக் எடுத்துக்கொண்டேன். தற்போது நான் ஒரு படத்தில் நடித்திருக்கிறேன். அந்த பட ரிலீசுக்காக காத்திருக்கிறேன். வெப்சீரிஸ் எல்லாம் பத்து பதினைந்து நாட்களில் முடிந்து விடும் என்பதால் இப்போதைக்கு நான் அந்த மாதிரியான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து கொண்டு இருக்கிறேன் என்றார் அபிதா.

-விளம்பரம்-

Advertisement