அடுத்த ஆதி குணசேகரன் யார் ? எதிர் நீச்சல் சீரியல் இயக்குனர் திருசெல்வம் அளித்த பதில்.

0
1795
Ethirneechal
- Advertisement -

அடுத்த குணசேகரன் யார் என்று பேசும் இடமா இது? என்று கோபத்தில் எதிர்நீச்சல் இயக்குனர் திருசெல்வம் பேசி இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது சோசியல் மீடியா முழுவதும் மாரிமுத்துவின் இறப்பு குறித்த செய்தி தான் வைரலாகி வருகிறது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர் நீச்சல் தொடரில் குணசேகரன் என்ற கதாபாத்திரத்தின் மூலம் அனைவரின் மனதையும் கவர்ந்தவர் மாரிமுத்து. இந்தம்மா ஏய் என்ற டிரேட் மார்க்கிற்குச் சொந்தக்காரர் மாரிமுத்து.

-விளம்பரம்-

இவர் தேனி மாவட்டம் பசுமலை பகுதியை சேர்ந்தவர். இவர் சீரியலில் நடிப்பதற்கு முன் பாடலாசிரியர் வைரமுத்து விடம் உதவியாளராக பணியாற்றி இருந்தார். அது மட்டும் இல்லாமல் இவர் இயக்குனர்கள் ராஜ்கிரண், வசந்த், எஸ்.ஜே சூர்யா போன்ற பல இயக்குனர்களிடமும் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். தமிழில் இவர் “கண்ணும் கண்ணும்” என்ற படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால், அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. அதற்குப் பிறகு இவர் குணச்சித்திர நடிகராக பல படங்களில் நடித்து இருக்கிறார்.

- Advertisement -

மாரிமுத்து திரைப்பயணம்:

சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியிருந்த ஜெயிலர் படத்தில் மாரிமுத்து நடித்திருந்தார். ஜெயிலர் படம் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை செய்து ரசிகர்கள் முதலில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை அடுத்து கமலஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் மாரிமுத்து நடித்திருக்கிறார். இந்த படத்தை சங்கர் இயக்கி வருகிறார். இதனை அடுத்து இவர் நடிப்பில் பல படங்கள் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் தற்போது சூர்யா நடித்து வரும் கங்குவா திரைப்படத்திலும் மாரிமுத்து ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

மாரிமுத்து திடீர் மரணம் :

பின் சிறிய பட்ஜெட் படங்களிலும் மாரிமுத்து கமிட் ஆகி நடித்திருக்கிறார். இப்படி தொடர்ந்து இவர் பல படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் நேற்று காலை மாரடைப்பு காரணமாக மாரிமுத்து திடீர் மரணமடைந்தார். டப்பிங் பேசிக்கொண்டு இருக்கும் போது அவருக்கு நெஞ்சு வலி வந்து இருக்கிறது. உடனே அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளித்தும் இறந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. நேற்று மாலை அவரது உடல் அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் பசுமலை கிராமத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

-விளம்பரம்-

இயக்குனர் திருச்செல்வம் அளித்த பேட்டி:

இவரின் இழப்பு பலருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், அவரது இறப்பிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இவருடைய மறைவிற்கு எதிர்நீச்சல் சீரியல் பிரபலங்கள் பலருமே இரங்கலை தெரிவிக்க நேரில் வந்து கதறி அழுத்திருக்கிறார்கள். இந்நிலையில் மாரிமுத்துவின் உடலுக்கு எதிர்நீச்சல் சீரியல் இயக்குனர் திருச்செல்வம் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பின் அவர் செய்தியாளர்களை சந்தித்து, தமிழ் திரை உலகமே ஒரு பெரும் நடிகரை இழந்திருக்கிறது. அவர் நடிப்பில் அரக்கன். இதை நான் அவரிடமே சொல்லி இருக்கிறேன்.

இயக்குனர் கோபப்பட காரணம்:

அவருடைய இறப்பு எங்களுக்கு பேர் அதிர்ச்சியாக இருக்கிறது. இதை எப்படி கடந்து போகிறோம் என்று எங்களுக்கு தெரியவில்லை. எதிர்நீச்சல் சீரியலை உச்சத்திற்கு கொண்டு சென்றவரே மாரிமுத்து தான். அவர் மூலம்தான் இந்த சீரியலுக்கு பெயரும் புகழும் கிடைத்தது. அந்த மகிழ்ச்சியை முழுமையாக கூட அனுபவிக்காமல் இறைவன் அவரை அழைத்துக் கொண்டு சென்றுவிட்டார். அவர் ஜாலியான ஆள், செய்கின்ற வேலையை ஆர்வமாகவும் சரியாகவும் செய்வார் என்று எமோஷனலாக பேசி இருந்தார். உடனே செய்தியாளர்களில் ஒருவர், அடுத்த குணசேகரன் யார்? என்று கேள்வி கேட்டிருக்கிறார். அதற்கு, துக்க நிலையில் இருக்கும்போது அடுத்த குணசேகரன் யார்? என்று கேள்வி பொருத்தம் இல்லாத ஒன்று. அதை பேச வேண்டிய இடம் இது இல்லை என்று கோபமாக பதில் அளித்து இருக்கிறார்.

Advertisement